ரண்சோர் ராய் 🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒரு சமயம் கார்க்கியன் என்பவனை சால்வன், " கோழை என்றும் பேடி என்றும் சொல்லி இழிவு படுத்தினான். அதைக் கேட்டதும், அங்கிருந்த யாதவர்கள் பலமாகச் சிரித்து விட்டனர். கார்க்கியனுக்கு அவமானம் தாங்கவில்லை. "என்னைப் பார்த்துச் சிரித்த இவர்களை விட்டு வைக்கக் கூடாது. இவர்களுக்கு யமனாக, ஒரு குழந்தையைப் பெறத் தவம் செய்வேன்,'' என்று தவத்தில் ஈடுபட்டான். அதன் பலனாக, பிறந்த போதே யாதவர்கள் மீது பகையோடு பிறந்தான் காலயவனன். கார்க்கியனின் எண்ணமும், அதன் பலனாக அவன் செய்த தவமுமே இதற்குக் காரணம். தந்தையின் எண்ணப்படி காலயவனன், யாதவர்களின் அரசனான பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மீது பகை கொண்டு மதுராவை அழிக்க வந்தான். ஜராசந்தனும் அப்போது பதினேழாவது முறையாக படையெடுத்து வந்ததால் மதுராவை விடுத்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் துவாரகையை நிர்மாணித்து யாதவர்களை அங்கே பத்திரமாகச் சேர்த்தார். அதன்பின், பின்னர் மீண்டும் மதுராவுக்கு வந்து, பலராமருடன் ஆலோசித்து, தாமரை மாலையை அணிந்து, ஆயுதம் ஏதுமின்றி, அங்கிருந்து புறப்பட்டார். நாரதர் மூலம்...