Skip to main content

சாதாரண உயிர்வாழிகள், தேவர்கள் ஆகிய இருவருமே பரமனின் விருப்பத்தைச் சார்ந்தவர்களே, சுதந்திரமானவர்கள் அல்ல.


 



சாதாரண உயிர்வாழிகள், தேவர்கள் ஆகிய இருவருமே பரமனின் விருப்பத்தைச் சார்ந்தவர்களே, சுதந்திரமானவர்கள் அல்ல.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

யோ யோ யாம் யாம் தனும் பக்த:
ஷ்ரத்தயார்சிதும் இச்சதி
தஸ்ய தஸ்யாசலாம் ஷ்ரத்தாம்
தாம் ஏவ விததாம்-யஹம்

மொழிபெயர்ப்பு


எல்லோரது இதயத்திலும் நான் பரமாத்மாவாக இருக்கிறேன். தேவர்களை வழிபட வேண்டுமென ஒருவன் விரும்பும்போது, அந்த குறிப்பிட்ட தேவனிடம் பக்தி செய்வதற்கான அவனது நம்பிக்கையை நானே பலப்படுத்துகிறேன்.


பொருளுரை





கடவுள் அனைவருக்கும் சுதந்திரம் கொடுத்துள்ளார்; எனவே, தேவர்களிடமிருந்து ஜட இன்பத்திற்கான வசதிகளைப் பெற்று அவற்றை அனுபவிக்க விரும்பினால், எல்லாருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக வீற்றுள்ள பகவான் அதனை உணர்ந்து, அத்தகையவனுக்கு வசதிகளைச் செய்து கொடுக்கிறார். எல்லா உயிர்வாழிகளின் உன்னத தந்தையான பகவான், அவர்களது சுதந்திரத்தில் தலையிடுவதில்லை, ஆனால் அவர்களது லௌகீக விருப்பங்கள் பூர்த்தியாகும் வகையில் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார். சர்வ வல்லமையுடைய கடவுள், ஜடவுலகை அனுபவிப்பதற்கான வசதிகளைக் கொடுத்து, அதன் விளைவாக மாயையின் வலையில் உயிர்வாழிகளை விழச் செய்வது ஏன் என்று சிலர் கேட்கலாம். பதில் என்னவெனில், பரம புருஷர் (பரமாத்மா) இத்தகு வசதிகளை கொடுக்காவிடில், சுதந்திரம் என்பதற்கு அர்த்தமில்லை. எனவே, ஒவ்வொருவருக்கும், அவரவரின் விருப்பப்படி, பூரண சுதந்திரத்தைக் கொடுக்கிறார்—ஆனால், அவரது இறுதி அறிவுரையை நாம் பகவத் கீதையில் காண்கிறோம்: ஒருவன் எல்லாவற்றையும் துறந்த முழுமையாக அவரிடம் சரணடைய வேண்டும். இதுவே மனிதனை மகிழ்விக்கும்.


சாதாரண உயிர்வாழிகள், தேவர்கள் இருவருமே பரம புருஷ பகவானின் விருப்பத்திற்குக் கீழ்ப்பட்டவர்கள்; எனவே, உயிர்வாழி தனது விருப்பத்தின் மூலம் மட்டும் தேவர்களை வழிபட முடியாது, தேவர்களாலும் பரமனின் விருப்பமின்றி எந்த வரத்தையும் அளிக்க முடியாது, முழுமுதற் கடவுளின் விருப்பமின்றி புல்லும் அசையாது என்று கூறுவர். பொதுவாக, ஜடவுலகில் துயரப்பட்டவர்கள், வேத இலக்கியங்களின் வழிகாட்டலின்படி, தேவர்களிடம் செல்கின்றனர். ஒரு குறிப்பிட்ட பொருளை விரும்புபவர் அதற்குரிய தேவரை வழிபடுவர். உதாரணமாக, நோயுற்றவன் சூரியதேவனை வழிபாடுமாறு பரிந்துரைக்கப்படுகிறான்; கல்வியை விரும்புபவன் கல்வியின் தேவதையான சரஸ்வதியை வழிபடலாம்; அழகான மனைவியை நாடுபவன் சிவபெருமானின் நாயகியான உமாவை வழிபடலாம். இவ்விதமாக, வேத சாஸ்திரங்களின் பல்வேறு தேவர்களை வழிபடுவதற்கான பல்வேறு முறைகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. ஓர் உயிர்வாழி ஒரு குறிப்பிட்ட வசதியை அனுபவிக்க விரும்புவதால், அதற்கான குறிப்பிட்ட தேவரிடமிருந்து அந்த வரத்தினைப் பெறுவதற்கான பலமான ஆசையை பகவான் தூண்டுகிறார், அதன் மூலம் அவன் அவ்வரத்தினை வெற்றிகரமாக அடைகிறான். ஒரு குறிப்பிட்ட தேவரை நோக்கி ஓர் உயிர்வாழிக்கு இருக்கும் பக்தி மனப்பான்மையும் பரம புருஷரால் ஏற்படுத்தப்படுவதேயாகும். கிருஷ்ணரே பரம புருஷர், அவரே எல்லா உயிர்வாழிகளின் இதயத்திலும் வாழும் பரமாத்மா என்பதால், குறிப்பிட்ட தேவர்களை வழிபடுவதற்கான ஆர்வத்தை அவரே மனிதர்களுக்கு அளிக்கிறார், தேவர்களால் அத்தகு ஆர்வத்தினை ஏற்படுத்த முடியாது. பரம புருஷருடைய விஸ்வரூபத்தின் பல்வேறு அங்கங்களே தேவர்கள், எனவே அவர்களுக்கு சுதந்திரமில்லை. வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது, “பரம புருஷ பகவான், பரமாத்மாவின் உருவில் தேவர்களது இதயத்திலும் அமர்ந்துள்ளார்; எனவே, ஜீவாத்மாவின் ஆசைகளை பூர்த்தி செய்ய தேவர்கள் மூலமாக அவர் ஏற்பாடு செய்கின்றார். ஆனால் ஜீவாத்மா, தேவர்கள் ஆகிய இருவருமே பரமனின் விருப்பத்தைச் சார்ந்தவர்களே, சுதந்திரமானவர்கள் அல்ல.”



( ஶ்ரீமத் பகவத்கீதை 7.21 ) 

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...