Skip to main content

Posts

உண்மையான யோகப் பயிற்சி

  ஷுசௌ தேஷே ப்ரதிஷ்டாப்ய ஸ்தி ரம் ஆஸனம் ஆத்மன: நாத்-யுச்சரிதம் நாதி-நீசம் சைலாஜின-குஷோத்தரம் தத்ரைகாக்ரம் மன: க்ருத்வா யத-சித்தேந்த்ரிய-க்ரிய: உபவிஷ்யாஸனே புஞ்ஜ்யாத் யோகம்-ஆத்ம-விஷுத்தயே மொழிபெயர்ப்பு ****************** யோகத்தைப் பயில, தனிமையான இடத்திற்குச் சென்று, நிலத்தில் தர்பைப்புல்லைப் பரப்பி, அதனை மான் தோலாலும் மென்மையான துணியினாலும் மறைக்க வேண்டும். இந்த ஆசனம் மிக உயரகமாவோ, தாழ்வாகவோ இல்லாமல் புனிதமான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். பின்னர், இதன்மேல் ஸ்திரமாக அமர்ந்து, மனம், புலன்கள் மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தி, இதயத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக யோகியானவன் யோகத்தைப் பயில வேண்டும். பொருளுரை ****************** "புனிதமான இடம்" என்பது புண்ணிய யாத்திரைத் தலங்களைக் குறிக்கின்றது. இந்தியாவில் யோகிகள் அனைவரும் (ஆன்மீகர்களும் பக்தர்களும்) வீட்டை விட்டு வெளியேறி, கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகள் ஓடும் பிரயாகை, மதுரா, விருந்தாவனம், ரிஷிகேஷ், ஹரித்வார் போன்ற புனிதத் தலங்களை அடைந்து, தனிமையில் யோகத்தைப் பயில்கின்றனர். ஆனால் இஃது அனைவருக்கும் சாத்தியமானதல...

உணர்வே ஆத்மாவின் அறிகுறியாகும்

 

ஆத்மா

 

ஆத்மா

 

ஆத்மா

 

பிரலம்பாசுன் வதம்

  பிரலம்பாசுன் வதம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 கிருஷ்ணரும் பலராமரும் தங்கள் லீலைகளை நிகழ்த்திக் கொண்டி ருந்த ஸ்ரீ விருந்தாவனத்தில் கோடைக் காலம் கூட வசந்த காலத்தின் தன்மைகளைக் கொண்டிருந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பலராமருடனும், ஆயர்குலச் சிறுவர்களுடனும் சேர்ந்து பல்வேறு கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் அவர்கள் அனைவரும் ஆட்டபாட்டங்களில் திளைத்திருந்தனர். அப்போது பிரலம்பன் என்னும் அசுரன் ஒரு ஆயர் குலச் சிறுவனைப் போல் தன்னை உருமாற்றிக் கொண்டு அவர்களுடன் கலந்து கொண்டான். எல்லாம் அறியவல்ல பகவான் கிருஷ்ணர் அவன் யார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவனைக் கொல்வதற்காக, அவனுடன் நண்பனைப் போல் பழகினான் பிறகு கிருஷ்ணர், பலதேவரிடமும், ஆயர்குலச் சிறுவர்களிடமும் அவர்கள் அனைவரும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து விளையாட வேண்டும் என்று கூறினார். அனைத்துச் சிறுவர்களையும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிற்கும் கிருஷ்ணரும், பலராமரும் தலைவர்களாக இருப்பது என்றும், தோற்ற பிரிவை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தமது தோள்களில் சுமந்து செல்ல வேண்டு மென்றும் தீர்மானித்தனர். பலராமர் பிரிவைச் சேர்ந்த ஸ்ரீதாமனு...

பகவான் ஶ்ரீ பலராமர் அஸ்தினாபுரத்தை தமது கலப்பையால் கங்கையை நோக்கி இழுத்த லீலை

 பகவான் ஶ்ரீ பலராமர் அஸ்தினாபுரத்தை தமது கலப்பையால் கங்கையை நோக்கி இழுத்த லீலை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 சாம்பன் திருமணம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஜாம்பவதியின் பிரிய மகனான சாம்பன், துரியோதனன் மகள் லக்ஷ்மணையை அவளது சுயம்வரக் கூட்டத்திலிருந்து எடுத்துச் சென்றார். இதற்குப் பதிலாக, கௌரவர்கள் கூட்டு சேர்ந்து அவரைச் சிறைபிடிக்க வந்தனர். தனியொருவராக கொஞ்சநேரம் அவர்களைத் தடுத்து நிறுத்தியபின், ஆறு கௌரவ வீரர்கள் அவரது தேரையும், வில்லையும் உடைத்து அவரைக் கைப்பற்றினர். பிறகு அவரையும் ல்ஷ்மணையையும் அஸ்தினாபுரத்திற்கு எடுத்துச் சென்றனர் சாம்பன் சிறைப்படுத்தப்பட்டதைக் கேட்ட உக்ரசேன மன்னர் அவர்களைப் பழிவாங்க யாதவர்களை வரவழைத்தார் கோபங் கொண்ட அவர்கள் போருக்குத் தயாராயினர். ஆனால் குரு மற்றும் யது வம்சங்களுக்கிடையில் போர் மூள்வதைத் தடுக்க எண்ணி, பகவான் பலராமர் அவர்களை சமாதனப்படுத்தினார். பகவான் சில பிராமணர்களுடனும், யாதவ முதியோர்களுடன் அஸ்தினாபுரம் சென்றார் யாதவ குழுவினர் நகருக்கு வெளியில் கூடாரம் அமைத்துத் தங்கினர். திருதராஷ்டிரரின் எண்ணத்தை அறிந்துவர பலராமர் உத்தவரை அனுப்பினார். கௌரவ சபைக்குச் சென்ற உத்தவர்,...