Skip to main content

பிரலம்பாசுன் வதம்

 



பிரலம்பாசுன் வதம்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


கிருஷ்ணரும் பலராமரும் தங்கள் லீலைகளை நிகழ்த்திக் கொண்டி ருந்த ஸ்ரீ விருந்தாவனத்தில் கோடைக் காலம் கூட வசந்த காலத்தின் தன்மைகளைக் கொண்டிருந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பலராமருடனும், ஆயர்குலச் சிறுவர்களுடனும் சேர்ந்து பல்வேறு கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் அவர்கள் அனைவரும் ஆட்டபாட்டங்களில் திளைத்திருந்தனர். அப்போது பிரலம்பன் என்னும் அசுரன் ஒரு ஆயர் குலச் சிறுவனைப் போல் தன்னை உருமாற்றிக் கொண்டு அவர்களுடன் கலந்து கொண்டான். எல்லாம் அறியவல்ல பகவான் கிருஷ்ணர் அவன் யார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவனைக் கொல்வதற்காக, அவனுடன் நண்பனைப் போல் பழகினான்


பிறகு கிருஷ்ணர், பலதேவரிடமும், ஆயர்குலச் சிறுவர்களிடமும் அவர்கள் அனைவரும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து விளையாட வேண்டும் என்று கூறினார். அனைத்துச் சிறுவர்களையும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிற்கும் கிருஷ்ணரும், பலராமரும் தலைவர்களாக இருப்பது என்றும், தோற்ற பிரிவை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தமது தோள்களில் சுமந்து செல்ல வேண்டு மென்றும் தீர்மானித்தனர். பலராமர் பிரிவைச் சேர்ந்த ஸ்ரீதாமனும் விருஷபனும் வெற்றி பெற்றவுடன் அவர்களைக் கிருஷ்ணரும், அவரது பிரிவில் உள்ள மற்றொரு சிறுவனும் தங்கள் தோள்களில் சுமந்தனர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் போட்டியிட்டு அவரை வெல்வது என்பது அத்தனை எளிதல்ல என்று நினைத்த பிரலம்பாசுரன் பலராமருடன் போட்டியிட்டு அவரால் தோற்கடிக்கப்பட்டான். பகவான் பலராமர் தனது தோள்களில் சுமந்து கொண்டு பிரலம்பாசுரன் மிகவும் வேகமாக நடக்கத் தொடங்கினான். ஆனால் பலராமர் சுமேரு மலையைப் போல் மிகவும் கனமாக இருந்தார், அதனால் அவரைச் சுமப்பது பிர வம்பாசுரனுக்கு மிகவும் சிரமமாக இருந்ததினால் அவன் தனது உண் மையான அசுர வடிவத்தினை எடுத்தான். இதனைக் கண்ட பலராமர் அசுரனது தலையில் தன் முஷ்டியினால் குத்தினார். அக்குத்தானது தேவேந்திரன் ஏவப்பட்ட வஜ்ராயுதம் மலைகளை உடைத்து நொறுக்கியது போல், பிரலம்பாசுரனின் தலையினை நொறுங்கச் செய்தது. அதனால் அவ்வசுரன் நிலத்தில் வீழ்ந்து இரத்தம் கக்கி மடிந்தான். பகவான் பலராமர் நலமாகத் திரும்பி வருவதைக் கண்ட ஆயர்குலச் சிறுவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் அவரைக் கட்டித் தழுவிக் கொண் டனர். வானத்தில் இருந்து தேவர்கள் அவர் மீது மலர்மாரி பொழிந்து அவரை வாழ்த்தினர்



கதையின் நீதி


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


பிரலம்பாசுரன் நம் இதயத்தில் இருக்கும் காம இச்சைகளையும், பெயர் மற்றும் புகழுக்காக ஏங்கும் குணங்களையும் வெளிப்படுத்துவதாக பக்திவினோத தாகூர் குறிப்பிடுகிறார். பிரலம்பாசுரன் எப்படி ஆரம்பத்தில் நண்பனாக வேடமணிந்து கொண்டானோ, அதுபோல காம இச்சைகளும் ஆரம்பத்தில் அமிர்தமாகத் தோன்றி, பிறகு இறுதியில் விஷமாக மாறிவிடுகின்றன.



 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...