Skip to main content

பகவான் ஶ்ரீ பலராமர் அஸ்தினாபுரத்தை தமது கலப்பையால் கங்கையை நோக்கி இழுத்த லீலை


 பகவான் ஶ்ரீ பலராமர் அஸ்தினாபுரத்தை தமது கலப்பையால் கங்கையை நோக்கி இழுத்த லீலை


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


சாம்பன் திருமணம்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஜாம்பவதியின் பிரிய மகனான சாம்பன், துரியோதனன் மகள் லக்ஷ்மணையை அவளது சுயம்வரக் கூட்டத்திலிருந்து எடுத்துச் சென்றார். இதற்குப் பதிலாக, கௌரவர்கள் கூட்டு சேர்ந்து அவரைச் சிறைபிடிக்க வந்தனர். தனியொருவராக கொஞ்சநேரம் அவர்களைத் தடுத்து நிறுத்தியபின், ஆறு கௌரவ வீரர்கள் அவரது தேரையும், வில்லையும் உடைத்து அவரைக் கைப்பற்றினர். பிறகு அவரையும் ல்ஷ்மணையையும் அஸ்தினாபுரத்திற்கு எடுத்துச் சென்றனர்


சாம்பன் சிறைப்படுத்தப்பட்டதைக் கேட்ட உக்ரசேன மன்னர் அவர்களைப் பழிவாங்க யாதவர்களை வரவழைத்தார் கோபங் கொண்ட அவர்கள் போருக்குத் தயாராயினர். ஆனால் குரு மற்றும் யது வம்சங்களுக்கிடையில் போர் மூள்வதைத் தடுக்க எண்ணி, பகவான் பலராமர் அவர்களை சமாதனப்படுத்தினார். பகவான் சில பிராமணர்களுடனும், யாதவ முதியோர்களுடன் அஸ்தினாபுரம் சென்றார்


யாதவ குழுவினர் நகருக்கு வெளியில் கூடாரம் அமைத்துத் தங்கினர். திருதராஷ்டிரரின் எண்ணத்தை அறிந்துவர பலராமர் உத்தவரை அனுப்பினார். கௌரவ சபைக்குச் சென்ற உத்தவர், பகவான் பலராமரின் வருகையை அறிவித்தார். கௌரவர்களும் உத்தவரைப் பூஜித்து பகவானுக்கு அர்ப்பணிக்க மங்களகரமான பொருட்களை எடுத்துக் கொண்டு அவரைக் காணச் சென்றார். கௌரவர்கள் சடங்குகளும், காணிக்கைப் பொருட்களாலும் பலராமரைக் கௌரவித்தனர். ஆனால் சாம்பனை விடுவிக்க வேண்டுமென்ற உக்ரசேனரின் உத்தரவை அவர் கூறியதும் அவர்கள் கோபாவேசம் அடைந்தனர். "யாதவர்கள் கௌர வர்களுக்கு உத்தரவிடுவது ஆச்சரியமாக உள்ளது. இது, ஒருவனுடைய செருப்பு அவருடைய தலைமேல் ஏற முயல்வதைப்போல் உள்ளது யாதவர்கள் தங்களுடைய அரியாசனங்களை எங்களிடமிருந்தல்லவா பெற்றார்கள். இருப்பினும், இப்பொழுது அவர்கள் தங்களை எங்களுக்குச் சமமாகக் கருதுகிறார்கள். இனி அரசுரிமைகளை அவர்களுக்கு நாம் அளிக்கப் போவதில்லை" என்று அவர்கள் கூறினர்.


இவ்வாறு கூறியபின் கௌரவ உயர் அதிகாரிகள் தங்கள் நகருக்குத் திரும்பினர். அகந்தையால் திமிர்பிடித்த அவர்களுக்கு மிருகத்தனமான தண்டனை அளிப்பதன் மூலம் மட்டுமே அவர்களைச் சமாளிக்க முடியும் என்று பகவான் பலதேவர் முடிவு செய்தார். இவ்வாறாக பகவான் கௌரவர்கள் அனைவரையும் பூமியிலிருந்து அகற்றிவிட விரும்பி, தமது கலப்பை ஆயுதத்தால் அஸ்தினாபுரத்தை கங்கையை நோக்கி இழுக்கத் துவங்கினார். தங்கள் நகரம் நதியில் விழப்போகும் ஆபத்து நெருங்கி விட்டதைக் கண்ட கௌரவர்கள், பயந்துபோய் சாம்பனையும், லஷ் மணையையும் பகவான் பலராமர் முன் அழைத்து வந்து, அவரை துதித்துப் போற்றினர். பிறகு, "பகவானே, உங்களுடைய நிஜ மகிமையை அறியாத எங்களை மன்னித்தருளுங்கள்" என்று அவர்கள் பிரார்த்தனை செய்தனர் 


பலராமரும் கௌரவர்களுக்கு தீங்கிழைக்க மாட்டேன் என்று உறுதியளித்தார். துரியோதனன் தன் மகளுக்கும், புதிய மருமகனுக்கும் பல்வேறு திருமணப் பரிசுகளை அளித்தான். பிறகு துரியோதனன் யாதவர்களுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து, சாம்பனையும், லஷ்மணையையும் அழைத்துக் கொண்டு துவாரகைக்குத் திரும்பும்படி பகவான் பலதேவரை வேண்டிக் கொண்டான்.


 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...