சில சமயம் நம் முன் வினா எழுப்பப்படும், “நீங்கள் எங்களைப் புலால் உண்ணக் கூடாது என்று கூறுகிறீர்கள், ஆனால் நீங்கள் காய்களை உண்கிறீர்கள். இது வன்முறை இல்லை என்று நினைக்கிறீர்களா?” பதில் என்னவென்றால், காய்களை உண்பதும் வன்முறையே, சைவ உணவு உண்பவர்களும் பிற உயிரினங்களுக்கு எதிராக வன்முறை புரிகின்றார்கள். ஏனெனில், காய்களுக்கும் உயிர் உண்டு. பக்தரல்லாதார், பசுக்கள், ஆடுகள் மற்றும் பல பிற விலங்குகளயைும் உண்ணும் பொருட்டு கொல்கின்றனர். சைவ உணவு உண்பவராக இருக்கும் பக்தரும் தாவர உயிர்களை கொல்கிறார். ஆனால் இங்கு ஒவ்வொரு உயிரினமும் மற்ற உயிரினத்தைக் கொல்வதன் மூலம் வாழவேண்டி உள்ளது என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது; இதுவே இயற்கையின் நியதி ஆகும். ‘ஜீவோ ஜீவஸ்ய ஜீவனம் ஒரு ஜீவராசி மற்றொரு ஜீவராசிக்கு உணவாகும்.” (பாகவதம் 1.13.47) ஒரு ஜீவன் மற்றொரு ஜீவனுக்கு உணவாகும் வகையில் இந்த ஜட உலகை பகவான் படைத்துள்ளார் ஆனால் ஒரு மனிதன் வன்முறையை எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவிற்கு மட்டுமே செயல் புரிய வேண்டும். ஒரு மனித உயிர் பரம புருஷ பகவானுக்கு அர்ப்பணிக்கப்படாத எதையும் உண்ணக் கூடாது. யக்ஞா ஸிஷ்டாஸுன: ஸந்...