Skip to main content

மஹாபிரபுவின் அற்புதமான கீர்த்தனங்கள்

 


 
ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள

வழங்கியவர் :- பக்தி விகாஸ ஸ்வாமி


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

வங்காள கவிஞரும் ஸ்வரூப தாமோதரரும்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஒருமுறை ஒரு வங்காள கவிஞர் பகவான் ஜகந்நாதரையும் பகவான் சைதன்யரையும் ஒப்பிட்டு நாடகம் ஒன்றை இயற்றியிருந்தார். அனைத்து பக்தர்களும் அதனைப் பாராட்டினர், மஹாபிரபுவும் அதனைக் கேட்க வேண்டுமென்று விரும்பினர். ஆனால் ஸ்வரூப தாமோதரரால் சோதிக்கப்படாமல் எதையும் கெளராங்கரிடம் காட்டக் கூடாது என்ற சட்டம் அங்கே வழக்கத்தில் இருந்தது; ஏனெனில், தூய பக்தித் தொண்டின் கொள்கையிலிருந்து துளியளவு விலகினாலும் கெளராங்கர் அதனை விரும்ப மாட்டார்.

வங்காள கவிஞருடைய நாடகத்தின் அறிமுக வரிகளைக் கேட்ட மாத்திரத்தில், அதிலிருந்த தவறான தத்துவக் கருத்துக்களை ஸ்வரூப தாமோதரர் கண்டுபிடித்தார். தூய கிருஷ்ண பக்தரிடமிருந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்கும்படியும் சைதன்ய மஹாபிரபுவிடம் முழுமையாக சரணடையும்படியும் ஸ்வரூப தாமோதரர் அவருக்கு அறிவுறுத்தினார்; அதன் மூலமாக அவர் மஹாபிரபுவின் கருணையைப் பெற்று கிருஷ்ண உணர்வின் தத்துவத்தை உண்மையாகப் புரிந்துகொள்ள இயலும். அப்போது மட்டுமே கிருஷ்ண உணர்வின் இலக்கியங்களை எழுதுவதற்கான தகுதியைப் பெற முடியும்.


மஹாபிரபுவின் அற்புதமான கீர்த்தனங்கள்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁



கெளர ஹரியின் அடியார்கள் அனைவரும் ஜகந்நாதரின் பிரசாதத்தை விரும்பும் அளவிற்குப் பெற்றுக்கொள்ள மன்னர் பிரதாபருத்ரர் ஏற்பாடு செய்திருந்தார். ஒவ்வோர் இரவும் ஆயிரக்கணக்கானோர் இணைந்து குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் ஹரே கிருஷ்ண கீர்த்தனம் செய்வது வழக்கம். அனைவரும் களைப்புற்ற பின்னர், பக்தர்கள் மிகவும் தாராளமாக பிரசாதத்தை விநியோகிப்பர். இவ்வாறாக, அவர்கள் அனைவரும் பாடி, ஆடி, பிரசாதம் ஏற்று, மஹாபிரபுவின் ஸங்கீர்த்தன இயக்கத்தில் ஆனந்தமாக இருந்தனர்.

ஓர் அதிகாலையில் ஜகந்நாதரை தரிசித்த பின்னர், பகவான் சைதன்யரும் அவருடன் இருந்த பக்தர்களும் கீர்த்தனத்தைத் தொடங்கினர். மஹாபிரபு உயரமாக குதிக்க ஆரம்பித்தார். அவரது பற்கள் தளர்ந்தன, உடல் நடுங்கியது; உடல் முழுவதும் மயிர்க்கூச்செறிந்தது. கீர்த்தனம் மிகவும் தீவிரமாக வளர்ந்தது, கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பதில் அவர்கள் முற்றிலுமாக மூழ்கினர். மனம், உடல், இல்லம் என எல்லாவற்றையும் மறந்து, கிருஷ்ணரின் நாமங்களை மட்டுமே அவர்கள் அனுபவித்தனர் 




கோவிந்தரின் உயரிய சேவை

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஒவ்வொரு நாளும் மஹாபிரபு பிரசாதம் ஏற்ற பின்னர், கோவிந்தர் அவரது உடலை சில நிமிடங்களுக்குப் பிடித்துவிடுவதும், கெளராங்கர் உறங்கிய பின்னர் மீதமிருக்கும் அவரது மஹா பிரசாதத்தை ஏற்பதும் வழக்கமாக இருந்தது. ஆனால் நீண்ட நேர கீர்த்தனம் நடைபெற்ற அந்நாளில், கெளர ஹரி தமது அறைக்குத் திரும்பி வந்தபோது, முழுமையாகக் களைப்படைந்திருந்ததால், வாயிலிலேயே படுத்துவிட்டார். சற்று நகர்ந்தால் உள்ளே சென்று உடம்பைப் பிடித்துவிட இயலும் என்று கோவிந்தர் கூறியபோது, “நகரக்கூட இயலாத நிலையில் நான் களைப்பாக உள்ளேன். நீ விரும்புவதைச் செய்வாயாக,” என்று மஹாபிரபு பதிலளித்தார்.

எனவே, தனது மேல்துணியை எம்பெருமானின் உடலில் சார்த்திய கோவிந்தர், அவரை நமஸ்கரித்து, தாண்டிச் சென்று, உடம்பை பிடித்துவிடத் தொடங்கினார். ஓய்விலிருந்து எழுந்த கெளராங்கர், கோவிந்தர் தமது அருகிலேயே அப்போதும் அமர்ந்திருந்ததைக் கண்டபோது, சற்று கோபத்துடன், “ஏன் இன்னும் பிரசாதம் ஏற்கவில்லை?” என்று வினவினார். எம்பெருமானின் உடலைத் தாண்டிச் செல்ல தான் விரும்பவில்லை என்று கோவிந்தர் பதிலளித்தார். “அப்படியெனில், உள்ளே எவ்வாறு வந்தீர்கள்?” என மஹாபிரபு விசாரிக்க கோவிந்தர் பதிலளிக்கவில்லை. “எனது எஜமானரின் சேவைக்காக, குற்றமிழைத்து நரகத்திற்குச் செல்லலாம். ஆனால் எனது சொந்த புலனுகர்ச்சிக்காக குற்றத்தின் சிறிய சாயலைக்கூட என்னால் கற்பனை செய்ய முடியாது,” என்று கோவிந்தர் தமது மனதில் எண்ணினார்.


நாளை . .

ஹரிதாஸ தாகூரின் மறைவு

தொடரும் . . . 



( "இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com")

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...