Skip to main content

Posts

பகவத்கீதைதயை ஏதோ ஒரு கட்டுக்கதையாகப் பாவித்து அதைத் திரித்துக் கூறுவது இன்றைய புலவர்களுக்கும், அரதியல்வாதிகளுக்கும் ஒரு நாகரீகமாகிவிட்டது.

  பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணர் நேரடியாகத் தோன்றி, மனித சமூகத்தின் நன்மைக்காக அவரது உபதேசங்களை விட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவரை ஒரு சாதாரண மனிதனென்று நினைக்கும் மூடர்களும், அயோக்கியர்களும், தங்களது புலன் திருப்திக்காக பகவத்கீதையின் உபதேசங்களைத் திரித்துக் கூறுகின்றனர். பகவத்கீதைதயை ஏதோ ஒரு கட்டுக்கதையாகப் பாவித்து அதைத் திரித்துக் கூறுவது இன்றைய புலவர்களுக்கும், அரதியல்வாதிகளுக்கும் ஒரு  நாகரீக மாகிவிட்டது இத்தகைய தப்பான கருத்துரைக்களால், தங்களுடைய வாழ்வை மட் டுமல்லாமல், பிறருடைய வாழ்வையும் இவர்கள் நாசமாக்கிவிடுகின்றனர். ஆனால் கிருஷ்ணர் உண்மையானவர் அல்ல, குருட்சேத்திர யுத்தமும் உண்மையல்ல மற்றும் பகவத்கீதையிலுள்ள விஷயங்களும் உண்மையல்ல என்ற இந்த எதிர் வாதத்தை கிருஷ்ணபக்தி இயக்கம் எதிர்த்து வருகிறது. விஷயம என்னவாக இருப்பினும், வாழ்வில் வெற்றிபெற விரும்புபவர், பகவத்கீதை உண்மையுருவில் என்ற நூலைப் படிப்பதால் அதை அடைய முடியும். குறிப்பாக ஸ்ரீ சைதன்ய மகாபிரபு பகவத்கீதையின் உபதேசங்களை வலியுறுத்தியுள்ளார்; யாரே தேக, தாரே கஹ, ‘கிருஷ்ண’ -உபதேச. வாழ்வில் மிகவுயர்ந்த...

அக்ஷௌணி என்றால் என்ன?

  ஓர் அக்ஷௌணி என்பது, 21,870 தேர் மற்றும் யானைகளையும், 109,350 காலாப்படை வீரர்களையும், மற்றும் 65,610 குதிரைகளையும் கொண்டதொரு படையின் அணிவகுப்பைக் குறிக்கிறது. இதைப்பற்றிய சரியான விவரம் மகாபாரதத்தில், ஆதி பர்வத்தின் இரண்டாம் அத்தியாயத்தில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது: ஏகோ ரதோ கஜஸ் சைக: நரா: பஞ்ச பதாதய: த்ரயஸ் ச துரகாஸ் தஜ்-ஜ்ஞை: பத்திர் இதி அபிதீயதே பத்திம் து த்ரிகுணாம் ஏதாம் விது: ஸேணாமுகம் புதா: த்ரீணி ஸேனாமுகானி ஏகோ குல்ம இதி அதிதீயதே த்ரயோ குல்மா கணோ நாம வாஹினீ து கணாஸ் த்ரய: ஸ்ருதாஸ் திஸ்ரஸ் து வாஹின்ய: பருத்னேதி விசக்ஷணை: சமூஸ் து ப்ருதனாஸ் திஸ்ரஸ் சம்வஸ் திஸ்ரஸ் து அனீகினீ அனீகினீம் தச-குணாம் ஆஹுர் அக்ஷௌஹிணீம் புதா: அக்ஷௌஹிண்யஸ் து ஸங்க்யாதா ரதானாம் த்விஜ-ஸத்தமா: ஸங்க்யா-கணித-தத்வக்ஞை: ஸஹஸ்ராணி ஏக-விம்சதி சதானி உபரி சாஷ்டௌ ச பூயஸ் ததா ச ஸப்ததி: கஜானாம் து பரீமாணம் தாவத் ஏவாத்ர நிர்திசேத் ஞேயம் சத-ஸஹஸ்ரம் து ஸஹஸ்ராணி ததா நவ நராணாம் அதி பஞ்சாசச் சதானி த்ரீணி சானுகா: பஞ்ச-ஷஷ்டி-ஸஹஸ்ராணி ததாஸ்வானாம் ச தானி ச தசோத்தராணி ஷட் சாஹுர் யதாவத் அபிஸங்க்யயா ஏதாம் அக்ஷௌஹிணீம் ப்ராஹ...

கவலை மற்றும் மன அழுத்தம்

 

ஆன்மீக உலகமே தனது நித்யமான வாசஸ்தலம் என்று அறியாத கட்டுண்ட ஜீவராசிகள்.

  பொதுவாக மக்கள் வீடுபேறு பெற்று முழுமுதற்கடவுளை அடைவது என்னும் தங்கள் வாழ்க்கை நலனை அறியாதிருக்கின்றனர். ஆன்மீக உலகிலுள்ள தங்கள் உண்மை வீட்டினைப்பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆன்மீக உலகில் பல வைகுண்ட லோகங்கள் உள்ளன. அவற்றுள் மிகச் சிறந்ததாக இருப்பது கிருஷ்ண லோகம் எனப்படும் கோலோக பிருந்தாவனமேயாகும். சமுதாயத்தின் முன்னேற்றம் அபரிதமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டாலும் இங்கு ஆன்மீக உலகிலுள்ள வைகுண்ட லோகத்தைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. இன்றைய தினம் நாகரீகத்தில் முன்னேறியிருப்பதாகச் சொல்லும் மனிதர்கள் பிறஉலகங்களுக்குச் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தாங்கள் இருப்பதிலேயே மிகவும் உயர்ந்த உலகமான பிரம்ம லோகத்திற்குச் சென்றாலும் கூட மீண்டும் இப்பூமிக்கு திரும்பி வேண்டியதிருக்கும் என்பது பற்றி ஒன்றும் தெரியாது. இதனை பகவத்கீதை (8.16) உறுதி செய்கின்றது: ஆப்ரஹ்ம-புவனால் லோகா: புனர் ஆவர்தினோ (அ)ர்ஜுன மாம் உபேத்ய து கௌந்தேய புனர் ஜன்ம ந வித்யதே “குந்தியின் மகனே! உலகில் உயர்ந்த தேவலோகத்திலிருந்து தாழ்ந்தபாதாள லோகம் வரை உள்ள எல்லா லோகங்களும் பிறப்பு இறப்ப...

ஜட உடலிலிருந்து விடுபட்ட பிறகு, ஆன்மா எங்கே போகிறது?

  நி : ஸ்ரேயஸ என்றால் “ இறுதியாகச் சேரும் இடம் ” என்று பொருள் ஸ்வஸம்ஸ்தான என்றால் மாயாவாதிகளுக்குத் தங்குவதற்குக் குறிப்பிட்ட இடம் இல்லை என்று பொருள் . மாயாவாதிகள் தங்கள் தனித்தன்மையைத் தியாகம் செய்கின்றனர் . அதனால் வாழும் பொறி பகவானின் திவ்யமான உடலிலிருந்து வெளிப்படும் மாய ஒளியில் கலக்க முடியும் . ஆனால் பக்தருக்கென்று குறிப்பிட்ட இடம் உண்டு . கோள்கள் சூரியஒளியினை நம்பியுள்ளன , ஆனால் சூரியஒளிக்கு என்று குறிப்பிட்ட நம்பகமான இடம் கிடையாது . ஒருவர் ஒரு குறிப்பிட்ட கோளை அடையும் பொழுது , அவருக்குத் தங்கும் இடமுண்டு . கைவல்ய என்று அறியப்படும் ஆன்மீக வானம் எல்லாப் பக்கங்களிலும் இன்ப ஒளியாக , பரம புருஷ பகவானின் பாதுகாப்பின் கீழ் உள்ளது . பகவத் கீதையில் (14.27) குறிப்பிடப்பட்டுள்ளதுபோல , ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹம் : மாயையாகிய பிரம்ம ஒளி பரம புருஷ பகவானின் உடலில் தங்கும் . அதாவது பரம புருஷ பகவானின் உடலொளியே கைவல்யம் அல்லது மாய பிரம்மன் . அந்த மாயா ஒளியில் வைகுந்தங்கள் எனப்படும் ஆன்மீகக் கோள்கள் உள்ளன , அதன் ...

மாயா சக்தி, பொய் அகங்காரத்திற்கு சிக்கவைத்து விடுகிறது.

  பொய் அகங்காரத்தின் முக்கிய காரியம் நாஸ்திகமாகும் . தான் நித்தியமாக பரமபுருஷருக்குக் கீழ்ப்படிந்துள்ள அவரது பின்னப்பகுதி என்பதை மறந்து , சுதந்திரமாக மகிழ்ச்சியடைய விரும்பும் ஜீவன் , இரு வழிகளில் செயற்படுகிறான் . முதலில் அவன் சுய லாபத்திற்காக அல்லது புலன் நுகர்வுக்காக பலனை எதிர்பார்த்து செயற்படுகிறான் . நீண்ட காலமாக பலன் கருதும் செயலில் ஈடுபட்டுக் களைப்படைந்த பின் , அவன் மனோ தத்துவக் கற்பனையாளனாக மாறி , தான் கடவுளுக்குச் சமமான நிலையில் இருப்பதாக நினைக்கிறான் . பகவானுடன் ஒன்றாகி விடுவதெனும் தவறான இந்த எண்ணம்தான் மாயா சக்தியால் விரிக்கப்படும் கடைசி வலையாகும் . இந்த மாயா சக்தி , பொய் அகங்காரத்திற்கு சிக்கவைத்து விடுகிறது . பரபிரம்மத்தைப் பற்றிய தத்துவார்த்தமான கற்பனைகளை விட்டுவிடுவதுதான் , பொய் அகங்காரத்திலிருந்து விடுபடுவதற்குரிய மிகச் சிறந்த வழியாகும் . மனோ தத்துவக் கற்பனைகளால் பரபிரம்மத்தை உணர முடியாதென்பதை உறுதியாக ஒருவன் அறிய வேண்டும் . பரபிரம்மத்தை , அல்லது பரமபுருஷ பகவானைப் பற்றி , தகுதியுள்ள ஒர் அ...