Skip to main content

Posts

அட்சய திரிதியை

  அட்சய திரிதியை 🌼🌼🌼🌼🌼🌼🌼 🌾1. பரசுராமர் அவதரித்த திருநாள் 🌾2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த நாள் 🌾3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள். 🌾4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள், 🌾5. வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது. 🌾6. திரேதாயுகம் தொடங்கிய நாள் 🌾7. “கனகதரஸ்தோத்ரம்” ஆதிசங்கராச்சாரியரால் இன்று இயற்றப்பட்டது. 🌾8. குபேரருக்கு இன்று செல்வத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது, 🌾9. அன்னபூரனிதேவி தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது. 🌾10. இந்நன்னாளில் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணி தொடங்கும். 🌾11. கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள் 🌾12. இன்றிலிருந்து 21 நாட்களுக்கு, வைசாக மாதத்தின் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மேற்கு வங்கம் மாயாபூரில் பகவான் ஸ்ரீ ராதா மாதவர் , பகவான் ஶ்ரீ  நரசிம்ம தேவர், பகவான் ஶ்ரீ ஜெகந்தார்  பலதேவர் சுபத்ர தேவி விக்ரகங்களுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும். 🌾13. இன்றிலிருந்து 21 நாட்கள...

வேணு கீதை

 

வேணு கீதை

 

வேணு கீதை

 

ஹரே கிருஷ்ண மந்திர ஜபம் விக்கிரக வழிபாட்டைவிட அதிக சக்தியுடையதாகும்

  முன்பு மனிதர்களால் செய்யப்பட்ட எல்லாச் செயல்களும் விஷ்ணுவுடன் சம்பந்தப்பட்டிருந்தன. ஆனால் சத்திய யுகத்திற்குப் பிறகு, வைஷ்ணவர்களுக்கிடையில் அவமரியாதையான நடவடிக்கைகளின் அறிகுறிகள் காணப்பட்டன. மற்றவர்கள் வைஷ்ணவர்களாக மாறுவதற்கு எவன் உதவுகிறனோ, அவனே ஒரு வைஷ்ணவன் என்று ஸ்ரீல பக்தி வினோத தாகுரர் கூறியுள்ளார். மற்றவர்களை வைஷ்ணவர்களாக மாற்றியுள்ளதற்குச் சிறந்த உதாரணம் நாரத முனிவராவார். மற்றவர்களை வைஷ்ணவர்களாக மாற்றியுள்ள சக்திவாய்ந்த ஒரு வைஷ்ணவர் வழிபடத் தகுந்தவராவார். ஆனால் பௌதிக களங்கத்தின் காரணத்தால், சிலசமயங்களில் இத்தகைய மேலான வைஷ்ணவர்கள் மற்ற சாதாரண வைஷ்ணவர்களால் அவமதிக்கப்படுகின்றனர். இந்த களங்கத்தைக் கண்ட சிறந்த முனிவர்கள் ஆலயத்தில் விக்கிரக வழிபாட்டை அறிமுகப்படுத்தினர். இது திரேதா யுகத்தில் துவங்கப்பட்டது என்றாலும், குறிப்பாக துவாப யுகத்தில் இது மேலோங்கி இருந்தது. “த்வாபரே பரிசர்யாயாம்”. ஆனால் கலியுகத்தில் விக்கிரக வழிபாடு அலட்சியம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே ஹரே கிருஷ்ண மந்திர ஜபம் விக்கிரக வழிபாட்டைவிட அதிக சக்தியுடையதாகும். ஸ்ரீ சைதன்ய மகாபிரபு நடைமுறைக்கேற்ற ஓர் உதாரணத்தை ...

ஹரே கிருஷ்ண ஸங்கீர்த்தன இயக்கத்தின் காலம்

கலியுகம் களங்கள் நிறைந்ததாகும். இது ஸ்ரீமத் பாகவதத்தில் (12.3.51) பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது: கலேர் தோஷ - நிதே ராஜன் அஸ்தி ஹி ஏகோ மஹான் குண: கீர்த்னாத் ஏவ க்ருஷ்ணஸ்ய முக்த - ஸங்க: பரம் வ்ரஜேத் இக்கலியுகம் அளவற்ற குற்றங்கள் நிறைந்ததாகும். உண்மையில், இது கடலளவு குற்றங்களைக் கொண்டுள்ளது. (தோஷ - நிதி). ஆனால் ஒரு வாய்ப்பு, ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. கீர்த்தனாத் ஏவ க்ருஷ்ணஸ்ய முக்த - ஸங்க: பரம் வ்ரஜேத்: ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடுவதாலேயே, கலியுகத்தின் களங்கத்திலிருந்து ஒருவர் விடுபட்டு, அவரது சுயமான ஆன்மீக உடலில், அவர் பரம பதத்தைச் சென்றடைய முடியும், இதுவே கலியுகத்தில் கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பமாகும். கிருஷ்ணர் தோன்றிபோது, அவரது கட்டளைகளை அவர் கொடுத்தார். மேலும் கிருஷ்ணரே, ஒரு பக்தராக ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவாக தோன்றியபோது, கலியுகக் கடலை கடப்பதற்கான வழியை அவர் நமக்குக் காட்டினார். அதுவே ஹரே கிருஷ்ண இயக்கத்தின் பாதையாகும். ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தோன்றியபோது, இந்த சகாப்தத்தின் ஸங்கீர்த்தன இயக்கத்தை அவர் அறிமுகப்படுத்தினார். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு இந்த சகாப்தம் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ள...

ஒரு தூய பக்தன் பகவானிடம் எப்போதும் “உம்மிது தூய்மையான அன்பு வைக்க எனக்கு உதவுவீராக” என்று வேண்டுகின்றான்.

பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் “யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாமி அஹம்”: யாவர் என்னை எங்ஙனம் சரணடைகின்றார்களோ நான் அதற்கேற்ப அவர்களுக்கு அருள்பாலிக்கின்றேன். பகவானை ஒருவன் பக்தியுடன் அணுகினால் கூட, அப்பக்தனின் பக்தியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காக, பகவான் உடனே பதிலுக்கு அவன் மீது முழு அன்பம் செலுத்தாதிருக்கலாம். எனினும் பகவான் உண்மையில் பதிலுக்கு அன்பு செலுத்துபவராகவே இருக்கின்றார். ஒரு தூய பக்தன் பகவானிடம் எப்போதும் “உம்மிது தூய்மையான அன்பு வைக்க எனக்கு உதவுவீராக” என்று வேண்டுகின்றான். ஆகையினால் பகவான் புறக்கணிக்கின்றார் எனப்படுவது, அப்பக்தனின் வேண்டுகோளை உண்மையில் நிறைவேற்றுகின்றார் என்பதுவேயாகும். பகவான் கிருஷ்ணர் தம்மீது நாம் செலுத்தும் அன்பினை, நம்மிடமிருந்து பிரிந்து செல்வதின் மூலம் தீவிரப்படுத்துகின்றார். இதன் விளைவு நாம் உண்மையில் எதனை விரும்பினோமோ, எதற்காகப் பிரார்த்தித்தோமோ அந்த முழுமெய்ப் பொருள் கிருஷ்ணர் மீதான தீவிரமான காதலை நான் அடையப் பெறுகின்றோம். அதனால் வெளிப்படையாகத் தோன்றும் கிருஷ்ணரின் புறக்கணிப்பானது உண்மையில் அவரது சிந்தனையார்ந்த பதில் செய்தலும், நமது...