Skip to main content

Posts

அதர பான்

  அதர  பான் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர்  ரத யாத்திரைக்கு பின் குண்டிசா கோவிலில் ஒரு வார காலம் உல்லாசமாக இருந்து, மீண்டும் ஶ்ரீ கோவிலை நோக்கி  உல்டா ரதயாத்திரை நிகழ்வு நடப்பது ஐதீகம்.  இந்த உல்டா ரதயாத்திரைக்கு அடுத்த நாள் அதாவது 11 ஆவது நாளான ஏகாதசி அன்று மூன்று விக்கிரகங்களுக்கும் அதர பான என்ற புத்துணர்ச்சி ஊட்டும்   பானம் வழங்கப்படுகிறது. அதர என்றால் உதடு, பான என்றால் பால்  சர்க்கரை, பாலாடை ,வாழைப்பழம், கற்பூரம், உலர் கொட்டைகள், மற்றும் மிளகு போன்றவற்றை கொண்டு உண்டாக்கப்பட்ட இனிப்பான வாசனையான பானம் என்று பொருள்படும். இந்தப் பொருள்கள் தவிர துளசி போன்ற புனிதமான மூலிகைச் சாறுகள் இந்த பானத்தில் சேர்க்கப்படுகிறது. இந்த பானங்கள் மூன்று விக்கிரகங்களின் உதடுகளை சென்றடையும் வகையில் மிகப்பெரிய மண் குவளைகளின் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த பானம் ஓன்பது குவளைகளில் நிரப்பப்பட்டு ஒவ்வொரு விக்கிரகங்களுக்கும் தலா மூன்று குவளைகள் வீதம் அந்தந்த தேர்களில் சமர்ப்பிக்கப்படுகிறது.   கோயில் பூஜாரிகளால் சோடச உபசார் எனும் பூஜையின் மூலம் விக்கிரகங்களுக்...

பிரசாதத்தின் மகிமை

 

பிரசாதத்தின் மகிமை

 

பிரசாதத்தை ஏற்றுக்கொள்ளும் முறை

 

பிரசாதத்தை ஏற்றுக்கொள்ளும் முறை

 

நமது அர்ப்பணிப்பின் உண்மையான நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்

  கோவில் தெய்வ வழிபாட்டிற்காக அறுபத்து நான்கு விதிமுறைகள் உள்ளன . தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படும் பல பொருட்கள் உள்ளன . சில மதிப்பு மிகுந்தவை , சில குறைவான மதிப்புடையவை . “ ஒரு பக்தர் எனக்குச் சிறிய மலர் , இலை , சிறிது நீர் அல்லது சிறிய பழத்தை அர்ப்பணித்தால் , நான் அதை ஏற்றுக்கொள்வேன் ” என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது . உண்மையான நோக்கம் என்னவென்றால் பகவானிடம் ஒருவருக்குள்ள அன்பான பக்தியை வெளிப்படுத்துவதாகும் ; அர்ப்பணிக்கப்படுபவை இரண்டாமிடம் பெறுகின்றன . ஒருவர் பகவானிடம் அன்பான பக்தியை வளர்க்காமல் , பலவித உணவுப் பொட்கள் , பழங்கள் , மற்றும் மலர்களை உண்மையான பக்தியின்றி அளிப்பாரானால் அது பகவானால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது . நாம் பரம புருஷ பகவானுக்கு இலஞ்சம் கொடுக்க முடியாது . அவர் மிகவும் சிறந்தவராதலால் , நமது இலஞ்சத்திற்கு மதிப்பில்லை , அவருக்கு எந்தத் தட்டுப்பாடும் கிடையாது . அவர் அவரிடமே நிறைந்திருப்பதால் , நாம் அவருக்கு என்ன கொடுக்க முடியும் ? எல்லாம் அவரால் உருவாக்கப்படுகின்றன . நாம் பகவானிடம் நமது அ...

கருணை

அதிகாலை பொழுதில் இமயமலைப் பகுதியில் உள்ள பத்ரிகாஸ்ரமத்தில் சூரியன் உதிக்கும் நேரம். அவ்வேளையில் வியாச முனிவர் சரஸ்வதி நதியில் குளித்து தனது நித்யானுஷ்டானங்களை முறையாக செய்த பின்னர், தனியாக அமர்ந்து தியானம் செய்தார். முக்காலமும் அறிந்த மகாமுனியான அவர் ஞான திருஷ்டியில் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தையும் அவரால் பார்க்க முடிந்தது. அப்போது  துவாபர யுகத்தின் முடிவு காலம் .  வெகுவிரைவில் கலியுகம் நெருங்கிக் கொண்டிருப்பதையும், கலியுகத்தில் பிறக்கப்போகும் மக்களிடம் பல்வேறு குறைகளைக் கண்டார். மாமுனிவர் வியாசர் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சத்யாவேஷ  அவதாரம். கலியுக மக்களுக்கு நன்மை செய்ய நினைத்த அவர் "கலியுகத்தின் மக்கள் பெரும்பாலும் அற்ப ஆயுளுள்ளவர்களாகவும், சண்டைப் பிரியர்களாகவும், மந்த புத்தி படைத்தவர்களாகவும், அதிர்ஷ்டமற்றவர்களாகவும், அனைத்திற்கும் மேலாக எப்பொழுதும் அமைதியற்றவர்களாகவும் உள்ளனர் என்பதை கண்ட அவர், மனிதகுலத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வுகள் மற்றும் நல்வழிகள் வேதங்களில் மட்டுமே சிறப்பாக உள்ளது, ஆதலால், வேதங்களின் அறிவை  மிகவும் எளிமையான வடிவத்தில் அ...