பாகவத-தர்மத்தில், “உன் நம்பிக்கை”, “என் நம்பிக்கை” என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவரும் பரமபுருஷரில் நம்பிக்கைக் கொண்டு அவரது உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும்.
பாகவத-தர்மத்தில் எந்த முரண்பாடும் இல்லை. “உன் மதம்”, “என் மதம்” என்ற வாசனைகூட பாகவத-தர்மத்தில் இல்லை. ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று பகவத்கீதை கூறுவதுபோல், பாகவத தர்மம் என்பது பரமபுருஷராகிய பகவானால் கொடுக்கப்பட்ட உத்தரவுகளைப் பின்பற்றுவதாகும். கடவுள் ஒருவரே. அவர் அனைவருக்கும் உரியவர். ஆகவே அனைவரும் கடவுளிடம் சரணடைய வேண்டும். அதுவே சமயம் என்பதன் உண்மையான கருத்தாகும். எதைக் கடவுள் கட்டளையிடுகிறாரோ அதுவே தர்மம் எனப்படும் (தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம்). பாகவத-தர்மத்தில், “உன் நம்பிக்கை”, “என் நம்பிக்கை” என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவரும் பரமபுருஷரில் நம்பிக்கைக் கொண்டு அவரது உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும். ஆனுகூல்யேன க்ருஷ்ணானுசீலனம்: எதையெல்லாம் கிருஷ்ணர் கூறுகிறாரோ, எதையெல்லாம் கடவுள் கூறுகிறாரோ-அதையெல்லாம் நேரடியாக நிறைவேற்ற வேண்டும். அதுவே தர்மம் (மதம்) எனப்படும். ஒருவன் உண்மையில் கிருஷ்ண உணர்வினனாக இருப்பின், அவனுக்கு எதிரிகள் இருக்க முடியாது. கிருஷ்ணரிடம், அல்லது கடவுளிடம் சரணடையும்படி மற்றவர்களைத் தூண்டுவதுதான் அவரது ஒரே ஈடுபாடு என்பதால், அவருக்கு எவ்வ...