பரம புருஷ பகவான் , மிகவும் தூய்மையானவரும் , மேலானவரும் , பரம சக்தியமுமாவார் என்று பகவத் கீதை கூறுகிறது . அவரிடத்தில் அணுவளவு பௌதிகத் தன்மையும் இல்லை . இதனால் மிகச்சிறிய பௌதிக பற்று உள்ளவரும்கூட அவரை அணுக முடியாது . குறைந்தது ரஜோ மற்றும் தமோ குணங்களில் இருந்தாவது ஒருவர் விடுபட்டிருக்க வேண்டும் . அந்த நிலையில்தான் பக்தித் தொண்டின் ஆரம்பமே துவங்குகிறது . காமத்திலிருந்தும் , பேராசையிலிருந்தும் விடுபட்டிருப்பதே ரஜோ மற்றும் தமோ குணங்களில் இருந்து ஒருவர் விடுபட்டிருப்பதற்கான அறிகுறியாகும் . அதாவது , புலனின்ப ஆசைகளிலிருந்தும் , புலனுகர்வுக்கான பேராசைகளில் இருந்தும் ஒருவர் விடுபட்டிருக்க வேண்டும் . சமநிலையிலுள்ள இயற்கைக் குணம் சத்வகுணமாகும் . எல்லா பௌதிக களங்கங்களில் இருந்தும் விடுபட்டிருப்பதென்பது , சத்வகுணத்திலிருந்தும் விடுபட்டிருப்பதாகும் . தனிமையாக ஒரு காட்டில் பகவானின் தரிசனத்தை தேடுவதென்பது சத்வகுணத்திலுள்ள ஒரு செயலாகும் . ஆன்மீக பூரணத்துவத்தை அடைய ஒருவர் காட்டிற்குப் போகக்கூடும் . இதனால் அவர் பகவானை அங்கு நே...