Skip to main content

Posts

பக்தி தொண்டின் மகிமை

  பரம புருஷ பகவான் , மிகவும் தூய்மையானவரும் , மேலானவரும் , பரம சக்தியமுமாவார் என்று பகவத் கீதை கூறுகிறது . அவரிடத்தில் அணுவளவு பௌதிகத் தன்மையும் இல்லை . இதனால் மிகச்சிறிய பௌதிக பற்று உள்ளவரும்கூட அவரை அணுக முடியாது . குறைந்தது ரஜோ மற்றும் தமோ குணங்களில் இருந்தாவது ஒருவர் விடுபட்டிருக்க வேண்டும் . அந்த நிலையில்தான் பக்தித் தொண்டின் ஆரம்பமே துவங்குகிறது . காமத்திலிருந்தும் , பேராசையிலிருந்தும் விடுபட்டிருப்பதே ரஜோ மற்றும் தமோ குணங்களில் இருந்து ஒருவர் விடுபட்டிருப்பதற்கான அறிகுறியாகும் . அதாவது , புலனின்ப ஆசைகளிலிருந்தும் , புலனுகர்வுக்கான பேராசைகளில் இருந்தும் ஒருவர் விடுபட்டிருக்க வேண்டும் . சமநிலையிலுள்ள இயற்கைக் குணம் சத்வகுணமாகும் . எல்லா பௌதிக களங்கங்களில் இருந்தும் விடுபட்டிருப்பதென்பது , சத்வகுணத்திலிருந்தும் விடுபட்டிருப்பதாகும் . தனிமையாக ஒரு காட்டில் பகவானின் தரிசனத்தை தேடுவதென்பது சத்வகுணத்திலுள்ள ஒரு செயலாகும் . ஆன்மீக பூரணத்துவத்தை அடைய ஒருவர் காட்டிற்குப் போகக்கூடும் . இதனால் அவர் பகவானை அங்கு நே...

பக்தி தொண்டின் மகிமை

  ஒரு ஜீவராசியால் ஆசைகளே இல்லாமல் இருக்கமுடியாது . அவன் உயிரற்ற ஒரு கல்லல்ல . அவன் நிச்சயமாக செயலாற்றிக் கொண்டும் , சிந்தித்துக் கொண்டும் , உணர்ந்து கொண்டும் , விருப்பப்பட்டுக் கொண்டும் தான் இருக்கிறான் . ஆனால் அவனது சிந்தனையும் , உணர்வும் , விருப்பமும் பௌதிகமானவையாக இருக்கும்போது அவன் பந்தத்தில் சிக்கிக் கொள்கிறான் . மாறாக அவனது உணர்வும் , சிந்தனையும் , விருப்பமும் பகவானின் தொண்டைப் பற்றியதாக இருக்கும்பொழுது , அது அவனை படிப்படியாக எல்லா பந்தத்திலிருந்தும் விடுவிக்கிறது . எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக ஒருவர் பகவானின் உன்னத அன்புத் தொண்டில் ஈடுபடுகிறாரோ , அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக அவர் அதற்கான ஆவலைப் பெறுகிறார் . அதுவே பக்தித் தொண்டிற்குரிய தெய்வீக தன்மையாகும் . பௌதிக சேவை திகட்டிவிடும் . ஆனால் பகவானின் ஆன்மீகத் தொண்டு திகட்டாது என்பதுடன் அதற்கு ஒரு முடிவுமில்லை . பகவானின் தீவிரமான தொண்டினால் , அவரது தெய்வீகமான இருப்பை ஒருவரால் உணர முடியும் . ஆகவே பகவானது தொண்டும் , பகவானும் எல்லாவிதத்திலும் ஒன்றே என்பதால் , அவரைக் ...

பௌதீக உலகத்தில் இன்பமும் துன்பமும்

  இந்த உலகில் , எல்லாரும் உலகியல் இன்பம் பெற முயற்சி செய்கின்றனர் , ஆனால் நமக்குச் சிறிதளவு ஜடவுலக இன்பம் கிடைத்தவுடன் , அதனோடு துன்பமும் உள்ளது . இந்த ஜடவுலகில் ஒருவர் கலப்படமில்லாத இன்பம் பெற முடியாது . ஒருவரிடம் இருக்கும் எந்த வித இன்பமும் , துன்பத்தாலும் மாசுபடுத்தப்பட்டது . சான்றாக , நாம் பாலைக் குடிக்க விரும்பினால் பின்னர் ஒரு பசுவைப் பாதுகாத்து , அது பால் தரத் தகுதி வாய்ந்ததாக இருக்க வேண்டும் . பால் குடித்தல் மிகவும் நல்லது ; அது இன்பம் ஆனதும் ஆகும் . ஆனால் பால் குடிக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் பல தொல்லைகளை ஏற்க வேண்டும் . பகவானால் இங்கு குறிப்பிடப்பட்டதுபோல , யோக முறை இவ்வுலக இன்பத்தையும் , இவ்வுலகின் துன்பத்தையும் போக்கவே உள்ளது . கிருஷ்ணரால் பகவத் கீதையில் கற்பிக்கப்பட்டதுபோல , சிறந்த யோகம் பக்தி யோகம் ஆகும் . ஒருவர் சகிப்புத் தன்மையுடன் இருக்க முயற்சி செய்ய வேண்டும் , ஜடவுலக இன்பம் அல்லது துன்பத்தால் தொல்லை அடைதல் கூடாது என்று பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது . ஜடவுலக இன்பத்தால் ...