விலஜ்ஜமானயா யஸ்ய ஸ்தாதும் ஈஷா - பதே ‘ முயா விமோஹிதா விகத்தந்தே மமாஹம் இதி துர்திய : மொழிபெயர்ப்பு பகவானின் மாயா சக்தி , தனது தாழ்ந்த நிலையைக் குறித்து வெட்கம் அடைந்திருப்பதால் , அவளால் உயர்ந்த ஸ்தானத்தை ஏற்க முடியவில்லை . ஆனால் அவளால் குழப்பத்திற்கு ஆளானவர்கள் , “ நான் ”, “ எனது ” என்று எண்ணங்களில் ஆழ்ந்திருப்பதால் எப்பொழுதும் அர்த்தமற்ற பேச்சிலேயே ஈடுபட்டுள்ளனர் . பொருளுரை முழுமுதற் கடவுளின் வெல்லுதற்கரியதும் , சக்தி வாய்ந்ததுமான மாயா சக்தியால் அல்லது அறியாமையைப் பிரதிநிதிக்கும் தாழ்ந்த சக்தியால் , உயிரோட்டம் கொண்ட அகில உலகையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட முடியும் . இருப்பினும் பரமபுருஷரின் எதிரே நிற்பதற்குரிய போதுமான வலிமை அதற்கு இல்லை . அறியைமை முழுமுதற் கடவுளின் பின்புறத்தில் உள்ளது . அங்கு ஜீவராசிகளைத் தவறான வழியால் திருப்புவதற்குப் போதுமான வலிமையை அது பெற்றிருக்கிறது . அர்த்தமற்ற பேச்சைப் பேசுவதே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளவர்களுக்குரிய முக்கிய அறிகுறியாகும் . அர்த்தமற்ற பேச்சுக்கள் வேத இலக்கியங்கள...