பகவத் கீதையில் (9.25) “பித்ரூன் யாந்தி பித்ரு வ்ரதா:” என்று கூறப்பட்டிருக்கிறது. குடும்ப நலத்தில் அக்கறை கொண்டவர்கள் “பித்ரு வ்ரதா:” என்று அழைக்கப்படுகின்றனர். பித்ரு லோகம் என்றொரு உலகம் இருக்கிறது. அதன் தலைவன் அர்யமான் ஆவான். அவனும் ஒரு தேவனைப் போன்றவன்தான். மேலும் அவனை திருப்திப்படுத்துவதின் மூலம் ஒருவன் பேய்களாய்த் திரியும் தனது குடும்ப உறுப்பினர்கள் பூத உடல் பெறுமாறு உதவலாம். தனது குடும்பத்திடமும், கிராமத்திடமும், நாட்டிடமும் மிகுந்த பற்றுக் கொண்டு, பாவமும் செய்தவர்கள் பஞ்சபூதங்களினாலான பூத உடலைப் பெறுவதில்லை. மாறாக மனம், புத்தி, ஆணவம் என்பவற்றினாலான நுண்ணுடலையே பெறுகின்றனர். இந்நுண்ணுடல்களில் இருப்பவர்களே பேய்கள் எனப்படுவர். இந்தப் பேய்களின் நிலை மிகவும் துன்பமானது, அவர்களிடம் மனம், புத்தி, ஆணவம் போன்றவை இருந்தும் பூதஉடல் இல்லாததினால் அவர்கள் பௌதீக இன்பங்களை விரும்பி தொல்லைகள் கொடுக்கின்றனர். அக்குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக மகன் அர்யமான் தேவன் அல்லது பகவான் விஷ்ணுவிற்கு நைவேத்தியங்களைப் படைக்க வேண்டும். காலங்காலமாகவே இந்தியாவில் ஒரு குடும்பத்தின் மூத்த மைந்தன் கயா என்ற ஊருக்குப...