Skip to main content

Posts

அங்கீகரிக்கப்பட்ட தகுதியுள்ள ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ் தனது கடமையை ஒருவர் சரிவர செய்ய வேண்டும்

  ஏதே வர்ணா : ஸ்வ - தர்மேண யஜந்தி ஸ்வ - குரும் ஹரிம் ஸ்ரத்தயாத்ம - விசுத்தி - அர்தம் யஜ் - ஜாதா : ஸஹ வ்ருத்திபி : மொழிபெயர்ப்பு இவ்வெல்லா சமூகப் பிரிவுகளும் , அவற்றின் வர்ணாஸ்ரமக் கடமைகளுடனும் , உயிர்வாழ்ச் சூழ்நிலைகளுடனும் பரமபுருஷரிலிருந்து பிறக்கின்றன . இவ்வாறாக பந்தப்படாத வாழ்வையும் , தன்னுணர்வையும் பெறுவதற்கு , ஆன்மீக குருவின் வழிகாட்டலின் கீழ் , பரமபுருஷரை ஒருவன் வழிபட வேண்டும் . பொருளுரை பரமபுருஷருடைய பிரம்மாண்ட ரூபத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அவர்கள் பிறப்பதால் , பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள எல்லா ஜீவராசிகளும் , அப்பரம உடலின் நித்தியத் தொண்டர்களாக இருக்க வேண்டியவர்களாவர் . நம் சொந்த உடலிலுள்ள வாய் , கரங்கள் , தொடைகள் , மற்றும் கால்கள் முதலான ஒவ்வொரு அங்கமும் முழு உடலுக்குத் தொண்டு செய்வதற்கென உள்ளன . அதுதான் அவற்றின் உண்மையான நிலை . இழிவடைந்த நிலையிலுள்ள மனிதர்கள் இந்த உண்மை நிலையைப் பற்றி அறிந்திருக்கவில்லை . ஆனால் மனித வாழ்வைப் பெற்றுள்ள அவர்கள் வர்ணாஸ்ரம முறையின் மூலமாக இதை அறிந்திருக்க வே...

சூத்திரர்களின் கடமை

  பத்ப்யாம் பகவதோ ஜக்ஞே சுஸ்ரூஷா தர்ம - ஸித்தயே தஸ்யாம் ஜாத : புரா சூத்ரோ யத் - வ்ருத்யா துஷ்யதே ஹரி : மொழிபெயர்ப்பு அதன்பிறகு , வர்ணாஸ்ரம கடமைகளைப் பாதுகாப்பதற்காக , பரமபுருஷரின் கால்களிலிருந்து சேவை தோன்றியது , பகவானின் கால்களில் உள்ள சூத்திரர்கள் அவரைச் சேவையினால் திருப்திப்படுத்துகின்றனர் . பொருளுரை சேவை செய்வதுதான் எல்லா ஜீவராசிகளுக்கும் உண்மையான தொழிலாகும் . ஜீவராசிகள் பகவானுக்குச் சேவை செய்ய வேண்டியவர்களாவர் . இத்தகைய சேவை மனப்பான்மையினால் அவர்களால் சமயப் பூரணத்துவம் பெற முடியும் . அனுபவமற்ற அறிவை அடையும் பொருட்டு கற்பனையில் ஈடுபடுவதால் பூரணத்துவத்தை அடைய முடியாது . ஞானிகளின் பிரிவைச் சேர்ந்த ஆன்மீகிகள் ஆத்மாவையும் , ஜடத்தையும் பிரித்தறிவதில் மட்டுமே தொடர்ந்து தங்களுடைய கற்பனையைச் செலுத்துகின்றனர் . ஆனால் அறிவினால் முக்தி பெற்ற பிறகு ஆத்மாவின் செயல்கள் என்ன என்பதைப் பற்றிய அறிவு அவர்களுக்குக் கிடையாது . விஷயங்களை உள்ளபடி அறிய மனக்கற்பனையில் மட்டும் ஈடுபடுபவர்களும் , பகவானின் உன்னத அன்புத்தொண...