அங்கீகரிக்கப்பட்ட தகுதியுள்ள ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ் தனது கடமையை ஒருவர் சரிவர செய்ய வேண்டும்
ஏதே வர்ணா : ஸ்வ - தர்மேண யஜந்தி ஸ்வ - குரும் ஹரிம் ஸ்ரத்தயாத்ம - விசுத்தி - அர்தம் யஜ் - ஜாதா : ஸஹ வ்ருத்திபி : மொழிபெயர்ப்பு இவ்வெல்லா சமூகப் பிரிவுகளும் , அவற்றின் வர்ணாஸ்ரமக் கடமைகளுடனும் , உயிர்வாழ்ச் சூழ்நிலைகளுடனும் பரமபுருஷரிலிருந்து பிறக்கின்றன . இவ்வாறாக பந்தப்படாத வாழ்வையும் , தன்னுணர்வையும் பெறுவதற்கு , ஆன்மீக குருவின் வழிகாட்டலின் கீழ் , பரமபுருஷரை ஒருவன் வழிபட வேண்டும் . பொருளுரை பரமபுருஷருடைய பிரம்மாண்ட ரூபத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அவர்கள் பிறப்பதால் , பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள எல்லா ஜீவராசிகளும் , அப்பரம உடலின் நித்தியத் தொண்டர்களாக இருக்க வேண்டியவர்களாவர் . நம் சொந்த உடலிலுள்ள வாய் , கரங்கள் , தொடைகள் , மற்றும் கால்கள் முதலான ஒவ்வொரு அங்கமும் முழு உடலுக்குத் தொண்டு செய்வதற்கென உள்ளன . அதுதான் அவற்றின் உண்மையான நிலை . இழிவடைந்த நிலையிலுள்ள மனிதர்கள் இந்த உண்மை நிலையைப் பற்றி அறிந்திருக்கவில்லை . ஆனால் மனித வாழ்வைப் பெற்றுள்ள அவர்கள் வர்ணாஸ்ரம முறையின் மூலமாக இதை அறிந்திருக்க வே...