Skip to main content

சூத்திரர்களின் கடமை

 



பத்ப்யாம் பகவதோ ஜக்ஞே சுஸ்ரூஷா தர்ம-ஸித்தயே
தஸ்யாம் ஜாத: புரா சூத்ரோ யத்-வ்ருத்யா துஷ்யதே ஹரி:


மொழிபெயர்ப்பு

அதன்பிறகு, வர்ணாஸ்ரம கடமைகளைப் பாதுகாப்பதற்காக, பரமபுருஷரின் கால்களிலிருந்து சேவை தோன்றியது, பகவானின் கால்களில் உள்ள சூத்திரர்கள் அவரைச் சேவையினால் திருப்திப்படுத்துகின்றனர்.

பொருளுரை

சேவை செய்வதுதான் எல்லா ஜீவராசிகளுக்கும் உண்மையான தொழிலாகும். ஜீவராசிகள் பகவானுக்குச் சேவை செய்ய வேண்டியவர்களாவர். இத்தகைய சேவை மனப்பான்மையினால் அவர்களால் சமயப் பூரணத்துவம் பெற முடியும். அனுபவமற்ற அறிவை அடையும் பொருட்டு கற்பனையில் ஈடுபடுவதால் பூரணத்துவத்தை அடைய முடியாது. ஞானிகளின் பிரிவைச் சேர்ந்த ஆன்மீகிகள் ஆத்மாவையும், ஜடத்தையும் பிரித்தறிவதில் மட்டுமே தொடர்ந்து தங்களுடைய கற்பனையைச் செலுத்துகின்றனர். ஆனால் அறிவினால் முக்தி பெற்ற பிறகு ஆத்மாவின் செயல்கள் என்ன என்பதைப் பற்றிய அறிவு அவர்களுக்குக் கிடையாது. விஷயங்களை உள்ளபடி அறிய மனக்கற்பனையில் மட்டும் ஈடுபடுபவர்களும், பகவானின் உன்னத அன்புத்தொண்டில் ஈடுபடாதவர்களும் தங்களுடைய நேரத்தைத்தான் வீணாக்குகின்றனர் என்று கூறப்படுகிறது.

சமய மார்க்கத்தை பாதுகாப்பதற்குரிய தொண்டு பகவானின் கால்களிலிருந்து உற்பத்தியானதாக இங்கு தெளிவாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த உன்னத சேவையானது, ஜடவுலகில், சேவை என்று கருதப்படுவதிலிருந்து வேறுபட்டதாகும். ஜடவுலகில் சேவகனாக இருக்க ஒருவரும் விம்புவதில்லை; ஒவ்வொருவரும் எஜமானனாக இருகூக விரும்புகின்றனர். ஏனெனில் பொய்யான இந்த எஜமானத்துவம்தான் பந்தப்பட்ட ஆத்மாவின் அடிப்படை நோயாகும். பகவானின் புறச் சக்திக்கு அடிமையாகும் அவன் பௌதிக உலகின் சேவகனாக இருக்கும்படி கட்டாயப் படுத்தப்படுகிறான். இதுதான் பந்தப்பட்ட ஆத்மாவின் உண்மை நிலையாகும். பகவானுடன் ஒன்றாகிவிடவேண்டும் என்ற எண்ணம் மாயையான புறச்சக்தியினால் விரிக்கப்படும் கடைசி வலையாகும். இத்தகைய எண்ணத்தைக் கொண்ட மாயைக்குட்பட்ட ஆத்மா, தன்னை ஒரு முக்திபெற்ற ஆத்மா என்றும், “நாராயணருக்கு நிகரானவன்என்றும் பொய்யாக எண்ணிக் கொண்டு ஜட சக்தியின் பந்தத்திலேயே தொடர்ந்து இருக்கிறான். ஒரு பிராமணனாக இருந்து, சேவை மனப்பான்மையை விருத்தி செய்து கொள்ளாமல் இருப்பதை விட, ஒரு சூத்திரனாக இருப்பது நல்லது. ஏனெனில் அத்தகைய மனப்பான்மை மட்டும்தான் பகவானை உண்மையில் திருப்திப்படுத்ததும். ஒவ்வொரு ஜீவராசியும் (தகுதியில் அவன் ஒரு பிராமணனாக இருப்பினும்) பகவானின் பக்தித் தொண்டை மேற்கொள்ள வேண்டும். இந்த சேவை மனப்பான்மைதான் ஜீவராசியின் உண்மையான பூரணத்துவம் என்பதை பகவத்கீதையும், ஸ்ரீமத் பாகவதமும் உறுதி செய்கின்றன. ஒரு பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் ஆகியோரால், பகவானுக்குத் தொண்டு செய்வதால் மட்டுமே தங்களுடைய வர்ணாஸ்ரமக் கடமைகளை பூரணமானதாகச் செய்துகொள்ள முடியும். பிராமணரொருவர் வேத ஞானத்தில் பக்குவம் பெற்றவராக இருப்பதால் இவ்வுண்மையை அறிந்திருக்க வேண்டியவராவார். மற்ற பிரிவினர்கள் பிராமண வைஷ்ணவர்களின் வழிகாட்டலைப் பின்பற்ற வேண்டும். பிராமண வைஷ்ணவரொருவர் தகுதியால் ஒரு பிராமணராகவும், செயலால் ஒரு வைஷ்ணவராகவும் இருக்கிறார். மக்கள் சமுதாயத்தின் சமூக அமைப்பு முறையை இது பூரணத்துவம் உடையதாகச் செய்யும். ஒழுங்கற்ற ஒரு சமூகத்தால் சமூக அங்கத்தினர்களையோ அல்லது பகவானையோ திருப்திப்படுத்த முடியாது. ஒருவன் நல்லதொரு பிராமணனாகவோ, க்ஷத்திரியனாகவோ, வைசியனாகவோ அல்லது சூத்திரனாகவோ இருப்பினும், தனது சமூக கடமையில் பக்குவம் அடைவதைப் பற்றிக் கவலைப்படாமல், பகவானின் தொண்டை மேற்கொள்வானாயின், பரமபுருஷரிடம் இந்த சேவை மனப்பான்மையை விருத்தி செய்து கொள்வதன் மூலமாகவே, அவன் ஒரு பக்குவமுடைய மனிதனாகிவிடுகிறான்.


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 3.6.33 )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




 





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...