Skip to main content

அங்கீகரிக்கப்பட்ட தகுதியுள்ள ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ் தனது கடமையை ஒருவர் சரிவர செய்ய வேண்டும்

 



ஏதே வர்ணா: ஸ்வ-தர்மேண யஜந்தி ஸ்வ-குரும் ஹரிம்
ஸ்ரத்தயாத்ம-விசுத்தி-அர்தம் யஜ்-ஜாதா: ஸஹ வ்ருத்திபி:


மொழிபெயர்ப்பு

இவ்வெல்லா சமூகப் பிரிவுகளும், அவற்றின் வர்ணாஸ்ரமக் கடமைகளுடனும், உயிர்வாழ்ச் சூழ்நிலைகளுடனும் பரமபுருஷரிலிருந்து பிறக்கின்றன. இவ்வாறாக பந்தப்படாத வாழ்வையும், தன்னுணர்வையும் பெறுவதற்கு, ஆன்மீக குருவின் வழிகாட்டலின் கீழ், பரமபுருஷரை ஒருவன் வழிபட வேண்டும்.

பொருளுரை

பரமபுருஷருடைய பிரம்மாண்ட ரூபத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அவர்கள் பிறப்பதால், பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள எல்லா ஜீவராசிகளும், அப்பரம உடலின் நித்தியத் தொண்டர்களாக இருக்க வேண்டியவர்களாவர். நம் சொந்த உடலிலுள்ள வாய், கரங்கள், தொடைகள், மற்றும் கால்கள் முதலான ஒவ்வொரு அங்கமும் முழு உடலுக்குத் தொண்டு செய்வதற்கென உள்ளன. அதுதான் அவற்றின் உண்மையான நிலை. இழிவடைந்த நிலையிலுள்ள மனிதர்கள் இந்த உண்மை நிலையைப் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆனால் மனித வாழ்வைப் பெற்றுள்ள அவர்கள் வர்ணாஸ்ரம முறையின் மூலமாக இதை அறிந்திருக்க வேண்டியவர்களாவர். மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல், பிராமணரொருவர் மனித சமூகத்தின் எல்லாப் பிரிவினருக்கும் ஆன்மீக குருவாவார். இவ்வாறாக பகவானின் உன்னத அன்புத் தொண்டில் சங்கமிக்கும் பிராமணப் பண்பாடுதான் ஆத்மாவைத் தூய்மைப்படுத்துவதற்குரிய அடிப்படைக் கொள்கையாகும்.

ஆத்மா தனது பந்தப்பட்ட நிலையில், பிரபஞ்சத்திற்குத் தான் எஜமானன் ஆகிவிடலாம் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறான். எல்லோரையும் விட தான் உயர்ந்தவன் என்ற இந்த தப்பெண்ணம் தான் ஒரு ஜீவராசியின் மிக மோசமான மாயைக்குட்பட்ட நிலையாகும். பரமபுருஷர் மாயையால் பந்தப்படுத்தப்பட முடியாதவர் என்பதை முட்டாளான பந்தப்பட்ட ஆத்மா நினைத்துப் பார்ப்பதில்லை. பரமபுருஷரே மாயைக்கு உட்பட வேண்டும் என்றால், அவரது உயர்வு எங்கே? இது உண்மையானால் மாயையல்லவா உயர்ந்ததாக இருக்கும்! எனவே ஜீவராசிகள் பந்தப்பட்டிருப்பதால், அவர்கள் உயர்ந்தவர்களாக இருக்க முடியாது. பந்தப்பட்ட ஆத்மாவின் உண்மையான நிலை இப்பதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது: பந்தப்பட்ட ஆத்மாக்கள் இயற்கையின் முக்குணங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதால், தூய்மையற்ற நிலையில் உள்ளனர். எனவே தகுதியால் ஒரு பிராமணராகவும் வைஷ்ணவராகவும் உள்ள ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ் தங்களை அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட முறையின் கீழ் (தகுதியுள்ள ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ்) பகவானை வழிபடுவதுதான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள, தூய்மையடைவதற்குரிய ஒரே வழியாகும். வேறேந்த வழிமுறையும் தகுதியுடையதாக சிபாரிசு செய்யப்படவில்லை. தூய்மையடைவதற்குரிய மற்ற வழிமுறைகள், வாழ்வின் இந்நிலையை அடைய ஒருவருக்கு உதவக் கூடும்; ஆனால் உண்மையான பூரணத்துவத்தை அடையும் முன்பாக இக்கடைசி நிலைக்கு ஒருவன் வந்துதான் ஆகவேண்டும். பகவத்கீதை (7.19) இவ்வுண்மையைப் பின்வருமாறு உறுதி செய்கிறது:

பஹூனாம் ஜன்மனாம் அந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே
 வாஸுதேவ: ஸர்வம் இதி மஹாத்மா ஸுதுர்லப:


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 3.6.33 )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




 




Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...