Skip to main content

Posts

அரசன் யக்ஞத்துவஜா

யக்ஞத்துவஜா என்ற அரசன், தான் வாழ்ந்த காலத்தில் பல இடங்களில் விஷ்ணு கோயில் கட்டினான். ரேவா நதிக் கரையிலும் ஒரு கோயில் கட்டினான். அவன் கட்டிய எல்லாக் கோயில்களிலும், கோயிலைச் சுத்தம் செய்யும் பணியும், இரவில் விளக்கேற்றும் பணியும் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்பதற்காகப் பெருமுயற்சி செய்தான்.  விதஹோத்ரா என்பவர் அந்த கோவில்  புரோகிதராக இருந்தார் அவர் யக்ஞத்துவஜாவிடம், “அரசே! விஷ்ணு கைங்கர்யம் என்பதைப் பல வழிகளில் செய்யலாம். அவற்றை எல்லாம் விட்டுவிட்டுக் திருக்கோயிலைத் தூய்மை செய்தல், விளக்கேற்றுதல் ஆகிய இரு காரியங்களுக்காக மட்டும் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டுமா? அது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை?” என்று கேட்டான். இதைக் கேட்ட யக்ஞத்துவஜா அந்த புரோகிதரை நோக்கிச் பதில் உரைக்க ஆரம்பித்தார்.. "விதஹோத்ரரே ! எனக்கு ஜதீஸ்மரா என்ற முற்பிறப்பை உணரும் ஆற்றல் உண்டு. அதனால்தான் இவ்வாறு செய்கிறேன். சத்திய யுகத்தில் ரைவதா என்ற ஒரு பிராமணன் இருந்தான். வேத சாஸ்திரங்கள்  அனைத்தும் கற்று தேர்தவராக விளங்கினர். ஆனால் அவர் கற்றதை அவனது வாழ்கையில் செயல்படுத்தியதே இல்லை . எத்தனை குற்றங்கள் புரிய முடிய...

கிருஷ்ண உணர்விற்குப் புதிதாக வரும் ஒருவன் பெருந்தீனி தின்பதினால் பக்தியில் சீர்குலைகிறான்

  த்ருப்தோ ஹ்ருஷ்ட: ஸுத்ருப்தஸ்ச கந்தர்பாக்ருஷ்ட-மானஸ: ந வ்ய சஷ்ட வராரோஹாம் க்ருஹிணீம் க்ருஹ-மேதினீம் மொழிபெயர்ப்பு உணவு உண்டு தனது தாகம் தணிந்தபின் மன்னர் புரஞ்சனன் தம் மனமெங்கும் மகிழ்ச்சி பரவுவதை உணர்ந்தார். உயர் உணர்விற்கு உயர்த்தப்படுவதற்குப் பதிலாக அவர் மன்மதலால் கவரப்பட்டார். தன்னை இல்லற வாழ்வில் மிகவும் திருப்தியுடன் வைத்திருக்கும் தன் மனைவியைத் தேடும் ஆசையினால் அவர் உந்தப்பட்டார். பொருளுரை தன்னை கிருஷ்ண உணர்வு நிலைக்கு உயர்த்தக்கொள்ள விரும்புபவனுக்கு இச்சுலோகம் மிகவும் இன்றியமையாததாகும். ஒருவன் தன் ஆன்மீக குருவினால் தீட்சையளிக்கப்படும் பொழுது அவன்தன் பழக்கவழக்கங்கள் மாற்றுகிறான். விரும்பத்தகாத உணவுகளை உண்பது அல்லது புலால் உண்பது, மது வருந்துதல், தவறான பாலுறவு கொள்ளுதல், சூதாடுதல் போன்றவற்றில் அவன் ஈடுபடுவதில்லை. “ ஸாத்துவிக ஆகாரம்” என்று சாத்திரங்களில் கோதுமை, அரிசி, காய்கறிகள், பழங்கள், பால், சர்க்கரை போன்றவைகளினாலான உணவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆயினும் சில நேரங்களில் தீட்சை பெற்றவன் பிரஸாதம் என்ற பெயரில் ஆடம்பரமான உணவுகளை உண்கிறான். அவன் தனது கடந்தகால பாவ வாழ்...

அங்கீகரிக்கப்பட்ட தகுதியுள்ள ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ் தனது கடமையை ஒருவர் சரிவர செய்ய வேண்டும்

  ஏதே வர்ணா : ஸ்வ - தர்மேண யஜந்தி ஸ்வ - குரும் ஹரிம் ஸ்ரத்தயாத்ம - விசுத்தி - அர்தம் யஜ் - ஜாதா : ஸஹ வ்ருத்திபி : மொழிபெயர்ப்பு இவ்வெல்லா சமூகப் பிரிவுகளும் , அவற்றின் வர்ணாஸ்ரமக் கடமைகளுடனும் , உயிர்வாழ்ச் சூழ்நிலைகளுடனும் பரமபுருஷரிலிருந்து பிறக்கின்றன . இவ்வாறாக பந்தப்படாத வாழ்வையும் , தன்னுணர்வையும் பெறுவதற்கு , ஆன்மீக குருவின் வழிகாட்டலின் கீழ் , பரமபுருஷரை ஒருவன் வழிபட வேண்டும் . பொருளுரை பரமபுருஷருடைய பிரம்மாண்ட ரூபத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அவர்கள் பிறப்பதால் , பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள எல்லா ஜீவராசிகளும் , அப்பரம உடலின் நித்தியத் தொண்டர்களாக இருக்க வேண்டியவர்களாவர் . நம் சொந்த உடலிலுள்ள வாய் , கரங்கள் , தொடைகள் , மற்றும் கால்கள் முதலான ஒவ்வொரு அங்கமும் முழு உடலுக்குத் தொண்டு செய்வதற்கென உள்ளன . அதுதான் அவற்றின் உண்மையான நிலை . இழிவடைந்த நிலையிலுள்ள மனிதர்கள் இந்த உண்மை நிலையைப் பற்றி அறிந்திருக்கவில்லை . ஆனால் மனித வாழ்வைப் பெற்றுள்ள அவர்கள் வர்ணாஸ்ரம முறையின் மூலமாக இதை அறிந்திருக்க வே...