Skip to main content

Posts

சிவபெருமானின் நித்ய ஸ்வரூபம் "கோபீஸ்வர மகாதேவர்".

"ஒரு கோபியாக மாறி, தானும் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலையில் பங்கு கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டு சிவபெருமான் மிகக் கடும் தவமிருந்தார். அதைக் கண்ட யோக மாயையான பெளர்ணமாசி மிகவும் மகிழ்ந்து. அவர் முன்னால் தோன்றினாள். சிவபெருமானின் வேண்டுதலை அறிந்து அவரைப் பிரம்மகுண்டம் என்ற புனித தீர்த்தத்தில் முக்கினாள்.அவ்வளவுதான்! சிவபெருமான் ஒரு அழகான இளமையான கோபி ஆனார். அவர் ஸ்ரீ கிருஷ்ணர் கோபியர்களுடன் நடத்திய ரஸ லீலா நடந்து கொண்டிருந்த இடத்தை அடைந்து சற்று தூரத்தில் மறைந்து நின்று ரஸ லீலாவைப் பார்க்க முயன்றார். "உடனடியாக ஸ்ரீகிருஷ்ணரும் மற்ற கோபியர்களும் தங்கள் மன மகிழ்ச்சியில் பெரும் வித்தியாசத்தை உணர்ந்தனர். அவர்களால் மகிழ்ச்சியுடன் ஆட முடியாமல் அவர்கள் தங்களுக்குள்ளேயே. "ஏன் இன்று வழக்கம்போல் மகிழ்ச்சியே இல்லை?" என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டு, காரணம் என்னவென்று கண்டுபிடிப்பதற்காக அக்கம், பக்கம் எல்லாம் தேடிப் பார்த்தார்கள். அப்போது அவர்கள் கோபியாக நின்று கொண்டிருந்த சிவபெருமானைக் கண்டு, 'நீ யார்? உன் பெயர் என்ன? யார் உன் தாய் தந்தையர்கள்? உன் கணவனின் பெயர் ...

சிவம் என்றால் “மங்கலம்”.

  யத் த்வி - அக்ஷரம் நாம கிரேரிதம் ந்ருணாம் ஸக்ருத் ப்ரஸங்காத் அகம் ஆஸு ஹந்தி தத் பவித்ர - கீர்திம் தம் அலங்க்ய - ஸாஸனம் பவான் அஹோ த்வேஷ்டி ஸிவம் ஸிவதேர: மொழிபெயர்ப்பு சதீ தொடர்ந்து கூறினாள்: எனது அன்பான தந்தையே, நீர் சிவபெருமான் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டதின் மூலம் மிகப் பெரியத் தவரைச் செய்திருக்கிறீர். ‘சி’ மற்றும் ‘வ’ என்னும் இரண்டெழுத்துக்களுடைய சிவ என்னும் நாமம் ஒருவரது எல்லாப் பாவங்களையும் நீக்குகிறது. அவரது ஆணைகள் புறக்கணிக்கப்பட முடியாதவை. சிவபெருமான் எப்போதும் தூய்மையானவர். அவர் மீது உம்மைத் தவிர வேறு யாராலும் காழ்ப்புணர்ச்சி கொள்ள முடியாது. பொருளுரை சிவபெருமான் பௌதீக உலகிலுள்ள அனைத்து உயிர்களிலும் மிகச் சிறந்த மகாத்மாவாக விளங்குகிறார். உடலோடு ஆத்மாவை அடையாளம் காணும் மனிதர்களுக்கு அவரத நாமம் மிகவும் மங்கலமானதாகும். இதுபோன்ற மனிதர்கள் சிவபெருமானைச் சரண் புகுந்தால், படிப்படியாகத் தாம் இந்தப் பரு உடல் அல்ல, ஆத்மா என்று உணர்ந்து கொள்வர். சிவம் என்றால் மங்கலம் என்று பொருள். உடலினுள் இருக்கும் ஆத்மா மங்கலகரமானதாகும். ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி:’ “நான் பிரம்மம்”. இவ்வுணர்தலே ம...

ஹரே கிருஷ்ண, ஹரே ராமா என்று ஜபிப்பதால் ஒருவரால் எப்படி முக்தி பெற முடியும்?

 

மனம் என்பது நமது முந்தைய பிறவிகளின் அனுபவங்களையும் சிந்தனைகளையும் பாதுகாத்து வைத்திருக்கும் சேமிப்புக் கிடங்கு

  கனவுகளில் நாம் சில நேரம் காண்பவை நாம் இதற்கு முன்பு அறியாத ஒரு செய்தியாக இருக்கும். சிலநேரங்களில் கனவில் நாம் வானில் பறப்பதுபோல் இருக்கம். ஆயினும் இதற்கு முன்பு நாம் பறந்ததில்லை. நமது முற்பிறவியில் நாம் தேவனாகவோ அல்லது விண்வெளி வீரனாகவோ வாழ்ந்து வானில் பறந்திருக்கிறோம் என்பதே இதன் உட்பொருள். நமது அடிமனதில் இந்த எண்ணம் புதைந்திருக்கிறது. அதனால் அது திடீரென்று தன்னை வெளிப்படுத்துக் கொள்கிறது. இது ஆழத்திலுள்ள நீர் கொந்தளித்து மேற்பகுதிக்கு வந்து நீர்க்குமிழிகளாகத் தோன்றுவதற்கு ஒப்பாகும். சிலநேரங்களில் நாம் கனவில முற்றிலும் புதிய இடங்களுக்கெல்லாம் செல்வதுபோல் காண்கிறோம், நமது முற்பிறப்பின் அநுபவத்திற்கு இதுவே சிறந்த சான்றாகும். இந்த எண்ணம் நமது அடிமனதில் பாதுகாக்கப்படுகிறது. இதுவே நமது கனவில் அல்லது சிந்தனையில் வெளிப்படுகிறது இதனால் மனம் என்பது நமது முந்தைய பிறவிகளின் அனுபவங்களையும் சிந்தனைகளையும் பாதுகாத்து வைத்திருக்கும் சேமிப்புக் கிடங்கு எனலாம். இவ்வாறு நமது முற்பிறப்பிற்கும் இப்பிறப்பிற்கும் இடையிலும், இப்பிறப்பு மற்றும் அடுத்த பிறப்பிற்கும் இடையிலும் ஒரு சங்கிலித் தொடர் இருந்து...

நித்தாய் நாம் ஹாட்டே - நாம் ஹட்டா பஜன்

  நித்தாய் நாம் ஹாட்டே - நாம் ஹட்டா பஜன்  (ஸ்ரீகோத்ரும கல்பதரு வில் பக்திவினோத டாக்குரர் 1. நித்தாய் நாம் ஹாட்டே. ஓ கே ஜாபிரே பாய் ஆய் சுட்டே  ஏஹே பாஷண்ட ஜகாய் மாதாய் து ஜன் சகல் ஹாட்டேர் மால் நிலே ஜூட்டே 2. ஹாட்டேர் அம்ஸி மஹாஜன் ஸ்ரீ அத்வைத சனாதன்  பாண்டாரி ஸ்ரீ கதாதர் பண்டிட் விசக்ஷன் 3. ஆச்சேன் செளகிதார் ஹரிதாஸ் ஆதி ஹோலன் ஸ்ரீ சஞ்சய்  ஸ்ரீ ஸ்ரீதர் மாதே தாலால் கேசவ பாரதீ ஸ்ரீ வித்யா வாச்சஸ்பதி 4. ஹாட்டேர் மூல்ய நிருபண், நய பக்தி பரகாஷன்  பிரேம ஹேனோ முத்ரா சர்வ சார் சம்யமன நாய் கமீ பேஸீ சமான் 5. ஓ ஜன்ரே சப யேதோ மனே போஜய் உதே  யேய் பிரேமுர் உத்தேஷ ஏக ஸாது உபதேஷ  சுதா மோய் ஹரி நாம் ரூப சு சந்தோஷ  யேதே பரோ நாய் ரே த்வேஷாத்வேஷ  காய் ஏக பாதே கானு குட்டே 1.ஓ அருமைச் சகோதரர்களே! பிரபு நித்யானந்தர் நமக்காக புனித நாமச் சந்தைக்கு வருகை புரிந்திருக்கின்றார். யார் வேண்டுமானாலும் அவரை கண்டு தரிசிக்க முடியும் விரைந்து ஓடி வாருங்கள்! இல்லையெனில் ஜகாய் மாதாய் என்ற இரண்டு மகாபாவிகளுமே நாமச்சந்தையை கொள்ளையடித்து அதில் உள்ள நன்மைகளை எல்லாம் எடுத்துக்கொள்வ...

நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன

  நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன ஆக்ஞா டஹல் மஹா பிரபுவின் கட்டளைப்படி நகர் சங்கீர்த்தனம் செய்தல் கீதாவளியில் பக்திவினோத டாக்குரர் 1 நதியா கோத்ருமே நித்யானந்த மஹாஜன்  பதியாச்சே நாம் ஹட்டா ஜீவேர் காரண் 2. (ஸ்ர்த்தாவான் ஜன் ஹே, ஸ்ர்த்தாவான் ஜன் ஹே) பிரபுர் ஆஞ்ஞை பாய் மாகி பேய் பிக்ஷா  போலோ க்ருஷ்ண பஜோ க்ருஷ்ண கோரோ க்ருஷ்ண சிக்ஷா 3. அபராத ஸுன்ய ஹோய்யே லோஹோ க்ருஷ்ண நாம்  க்ருஷ்ண மாதா, க்ருஷ்ண பிதா . க்ருஷ்ண தன - ப்ராண் 4.  கிருஷ்ணேர ஸம்ஸார கோரோ சாடி அனாச்சார்  ஜீவே தோயா, க்ருஷ்ண நாம் ஸர்வ தர்ம ஸார் 1.நதீயா நகரத்தின் கோத்ரும த்வீபத்தில் கருணையே வடிவான பிரபு நித்யானந்தர், வீழ்ந்த ஆத்மாக்களை விடுவிப்பதற்காக புனித நாமச் சந்தையை திறந்து வைத்துள்ளார். 2. ஓ என் நம்பிக்கைக்குரிய மக்களே! ஓ என் நம்பிக்கைக்குரிய மக்களே! பிரபு கௌரங்கரின் கட்டளைப்படி ஓ சகோதர்களே நான் இந்த மூன்று விண்ணப்பங்களை வேண்டி யாசிக்கின்றேன். கிருஷ்ணா என்று ஜபியுங்கள்! க்ருஷ்ணரையே வழிபடுங்கள்! க்ருஷ்ணரைப் பற்றியே அனைவருக்கும் கற்றுக் கொடுங்கள்!!!! 3.வைஷ்ணவ அபராத்த்திலிருந்து எப்போதும் கவனமாக விலகியிரு...