Skip to main content

Posts

ஐந்து வகையான முக்தி மற்றும் தூய பக்தர்களின் விருப்பம்

ஸாலோக்யஸார்ஷ்டிஸாமீப்ய ஸாரூப்யைகத்வமப்யுத தீயமானம் ந க்ருஹ்ருணந்தி வினா மத்ஸேவனம் ஜனா : மொழிபெயர்ப்பு ஒரு தூய பக்தர் — ஸாலோக்யம் , ஸார்ஷ்டி ஸாமீப்யம் , ஸாரூப்யம் அல்லது ஏகத்வம் ஆகிய இப்பதவிகள் பரம புருஷ பகவானாலேயே கொடுக்கப்பட்டாலும் கூட , இத்தகைய எந்தவித விடுதலையையும் ஏற்றுக்கொள்ள மாட்டார் . பொருளுரை தானாகத் தோன்றிய அன்பினால் பரம புருஷ பகவானுக்குப் புரியும் தூய பக்தித் தொண்டை எப்படி நிறைவேற்றுவது என்று பகவான் சைதன்யர் நமக்குக் கற்றுத் தருகிறார் . சிக்ஷாஷ்டகத்தில் , அவர் பகவானிடம் வேண்டுகிறார் : “ ஓ பகவானே , நான் உங்களிடமிருந்து எந்தச் செல்வத்தையும் பெறவோ , ஒரு அழகிய மனைவியைப் பெறவோ , என்னைப் பின்பற்றும் பலரையோ பெற விரும்பவில்லை , உங்களிடம் இருந்து நான் பெற விரும்புவது என்னவென்றால் ஒவ்வொரு பிறப்பிலும் நான் உங்கள் பாத கமலங்களுக்குத் தொண்டு செய்யும் தூய பக்தனாக இருக்க வேண்டும் ” என்பதாகும் . பகவான் சைதன்யரின் வேண்டுதல்களுக்கும் ஸ்ரீமத் பாகவதத்தின் கூற்றுக்களுக்குமிடையில் ஒற்றுமை உள்ளது . பகவான் சைதன்...

தௌம்யரும் முத்தான மூன்று சீடர்களும்

  தௌம்யரும் முத்தான மூன்று சீடர்களும் வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் இன்றைய உலகில், யாரேனும் ஒருவரிடம் இடுப்பில் காவி, கழுத்தில் மாலை, நெற்றியில் குறி முதலிய ஆன்மீக சின்னம் இருந்தால் போதும், அந்த நபர் கபடதாரியாக இருந்தாலும், அவரை ஆன்மீக குருவாக ஏற்பதற்கு சமுதாயம் தயாராக உள்ளது. மறுபுறம், ஆன்மீக குருமார்களும் எவ்விதப் பயிற்சியோ பரிட்சையோ இல்லாமல் சீடர்களை ஏற்கின்றனர். இதுதான் இன்றைய நிதர்சனம். ஆனால் வேத இலக்கியங்களோ குரு-சீட இலக்கணங்களை வகுத்து நமக்கு வழிகாட்டியுள்ளது. ஆயோத தௌம்யர் என்னும் தலைசிறந்த குரு தமது சீடர்களை எவ்வாறு பரிசோதித்தார் என்பதை மஹாபாரதத்தின் ஆதி பர்வத்தில் (அத்தியாயம் 3) காண்கிறோம். மடையாய் கிடந்த சீடன் ஆயோத தௌம்யரின் ஆஷ்ரமம் அடர்ந்த அடவியில் அழகாக அமைந்திருந்தது; அங்கே அவருக்கு ஆருணி, உபமன்யு, வேதன் முதலிய முத்தான சீடர்கள் சேவை செய்து வந்தனர். ஒரு நாள் மாமுனிவர் தௌம்யர் ஆருணியை அழைத்து, வயலின் வாய்க்கால் உடைப்பை அடைத்துவிட்டு வரும்படி ஆணையிட்டார். ஆருணி வாடையின் வாட்டலுக்கு வருந்தாது வரப்பு வழியே விரைந்தபோது, வழக்கத்திற்கு மாறாக வாய்க்காலில் வழிந்தோடும் நீர்ப்பெ...

ஜாக்கிரதையாக இருங்கள் ! ஜாக்கிரதையாக இருங்கள் !

வடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில ஹரிஜன் ஒருவன் வசித்து வந்தான் அவன் திருமணமாகி நெடு நாளாகியும் குழந்தை இல்லாமல் இருந்தான். ஒரு பெரியவரிடம் தன் குறையைக் கூறினான். அவர் தர்மம் செய்தால் அதன் பயனாக குழந்தை உண்டாகும் என தேற்றினார். எந்த முறையில் தர்மம் செய்ய வேண்டுமென்று கேட்டான். அக்காலம் கோடை காலம். அதனால் அவ் வழியாக காசிக்குப் போகும் ஓர் அந்தணனுக்கு ஒரு குடை ஒரு மிதியடி ஒரு விசிறி இம் மூன்றையும் தானமாகக் கொடுத்தால் அவர்களுடைய ஆசியால் உனக்கு குழந்தை உண்டாகும் என்றார்.   தான் ஒரு தாழ்த்தப்பட்டவன் ஆதலால் அந்தணனுக்கு எவ்வாறு தானம் செய்ய முடியும் என சிந்தித்தான் ஒரு குடை ஒரு மிதியடி ஒரு விசிறி இம் மூன்றையும் தயாரித்து எதிரிலுள்ள மரத்தடியில் வைத்து விட்டு தேவைப்படுவோர் எடுத்துக் கொள்ளுங்கள் என்று எழுதி வைத்துவிட்டு தன் தொழிலில் ஈடுபட்டான்.  அந்தணர் ஒருவர் தன் இறுதிக் காலம் நெருங்குவதற்குள் காசிக்குச் சென்று வர வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கால்நடையாகப் புறப்பட்டார். அது கோடைக்காலம் வெயில்  வெப்பத்தால் துன்பத்திற்கு ஆளானார் . சிறு தூரத்தில் தான் சென்று கொண்டிருந்த வழியில் ...

துறவி மற்றும் ஆடு

ஒரு நாள் ஒரு துறவி ஒரு கிராமத்தின் வழியாகப் பயணித்துக்கொண்டிருந்தார். அந்தப் பாதையில் அவர் செல்லும் போது, ஒரு குயவன், தனது வீட்டின் முன் அமர்ந்து பானைகள் செய்து கொண்டிருந்தான். அருகில் ஏராளமான மண் பானைகள், சட்டிகள், குடங்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த இடத்திலேயே, ஒரு ஆடு ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அது ஓர் நொடிக்கும் அமைதியின்றி கதறிக் கொண்டே இருந்தது. துறவி அந்த இடத்தில் வந்து தரையில் அமர்ந்தார். அவரைக் கண்டதும், குயவன் மரியாதையுடன் வணங்கி, ஒரு சிறிய மண் சட்டியில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். தண்ணீரைப் பருகிய துறவி கேட்டார்: “இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா?” “இல்லை சுவாமி,” என்றான் குயவன். “இது காட்டாடு. வழியில் வந்ததைக் கண்டு பிடித்து கட்டிப் போட்டேன்.” “எதற்காக?” என்று சற்றே வியப்புடன் கேட்டார் துறவி. “ஒரு பண்டிகை வரவிருக்கிறது. அந்த நாளில் இறைவனுக்குப் பலி கொடுக்கலாம் என்று வைத்திருக்கிறேன்,” என்றான் குயவன். துறவியின் முகத்தில் மேலும் ஆச்சரியம் தெரிந்தது. “பலியா?” என்று கேட்டார். “ஆமாம் சுவாமி. திருவிழா தினங்களில் இறைவனுக்குப் பலி கொடுக்கப்படும். அது அவருக்...