Skip to main content

Posts

பௌதீக உலகின் பாதையானது லாபமோ நஷ்டமோ இரண்டிலும், பாதை முழுவதும் ஆபத்தே நிறைந்திருக்கிறது

  ஏதஸ்மின் ஸம்ஸாராத்வனி நானா - க்லேஸோபஸர்க - பாதித ஆபன்ன - விபன்னோ யத்ர யஸ் தம் உ ஹ வாவேதரஸ் தத்ர விஸ்ருஜ்ய ஜாதம் உபாதயா ஸோசன் முஹ்யன் பிப்யத் - விவதன் க்ரந்தன் ஸம்ஹ்ருஷ்யன் காயன் நஹ்யமான ஸாது - வர்ஜிதோ நைவாவர்ததே ( அ ) த்யாபி யத ஆரம்த ஏஷ நர - லோக - ஸார்தோ யம் அத்வன பாரம் உபதிஸந்தி . மொழிபெயர்ப்பு பௌதீக உலகின் பாதையானது பௌதீகத்துன்பங்கள் நிறைந்ததாகும் . மேலும் பல்வேறு துன்பங்கள் பந்தப்பட்ட ஆத்மாவை இடையூறு செய்கின்றன . சிலசமயம் அவன் நஷ்டமடைகிறான் . சிலசமயம் இலாபமடைகிறான் . இரண்டிலும் , பாதை முழுவதும் ஆபத்தே நிறைந்திருக்கிறது . சிலசமயம் பந்தப்பட்ட ஆத்மா மரணம் அல்லது வேறு வழியில் தன் தந்தையிடமிருந்து பிரிக்கப்படுக்கிறான் . அவரை விட்டு வந்தவுடன் அவன் படிப்படியாக தன் குழந்தைகள் போன்ற பிறரிடம் பற்றுடையவானகிறான் . இவ்வாறு பந்தப்பட்ட ஆத்மா சிலசமயம் மோகத்திற்கும் அச்சத்திற்கும் ஆளாகிறான் . சிலசமயம் அவன் அச்சங்கொண்டு கூக்குரலிட்டு அழுகிறான் . சிலசமயம் தன் குடும்பத்தைக் காப்பதினால் மகிழ்ச்சியடைகிறான்...

ஐந்து வகையான முக்தி மற்றும் தூய பக்தர்களின் விருப்பம்

ஸாலோக்யஸார்ஷ்டிஸாமீப்ய ஸாரூப்யைகத்வமப்யுத தீயமானம் ந க்ருஹ்ருணந்தி வினா மத்ஸேவனம் ஜனா : மொழிபெயர்ப்பு ஒரு தூய பக்தர் — ஸாலோக்யம் , ஸார்ஷ்டி ஸாமீப்யம் , ஸாரூப்யம் அல்லது ஏகத்வம் ஆகிய இப்பதவிகள் பரம புருஷ பகவானாலேயே கொடுக்கப்பட்டாலும் கூட , இத்தகைய எந்தவித விடுதலையையும் ஏற்றுக்கொள்ள மாட்டார் . பொருளுரை தானாகத் தோன்றிய அன்பினால் பரம புருஷ பகவானுக்குப் புரியும் தூய பக்தித் தொண்டை எப்படி நிறைவேற்றுவது என்று பகவான் சைதன்யர் நமக்குக் கற்றுத் தருகிறார் . சிக்ஷாஷ்டகத்தில் , அவர் பகவானிடம் வேண்டுகிறார் : “ ஓ பகவானே , நான் உங்களிடமிருந்து எந்தச் செல்வத்தையும் பெறவோ , ஒரு அழகிய மனைவியைப் பெறவோ , என்னைப் பின்பற்றும் பலரையோ பெற விரும்பவில்லை , உங்களிடம் இருந்து நான் பெற விரும்புவது என்னவென்றால் ஒவ்வொரு பிறப்பிலும் நான் உங்கள் பாத கமலங்களுக்குத் தொண்டு செய்யும் தூய பக்தனாக இருக்க வேண்டும் ” என்பதாகும் . பகவான் சைதன்யரின் வேண்டுதல்களுக்கும் ஸ்ரீமத் பாகவதத்தின் கூற்றுக்களுக்குமிடையில் ஒற்றுமை உள்ளது . பகவான் சைதன்...

தௌம்யரும் முத்தான மூன்று சீடர்களும்

  தௌம்யரும் முத்தான மூன்று சீடர்களும் வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் இன்றைய உலகில், யாரேனும் ஒருவரிடம் இடுப்பில் காவி, கழுத்தில் மாலை, நெற்றியில் குறி முதலிய ஆன்மீக சின்னம் இருந்தால் போதும், அந்த நபர் கபடதாரியாக இருந்தாலும், அவரை ஆன்மீக குருவாக ஏற்பதற்கு சமுதாயம் தயாராக உள்ளது. மறுபுறம், ஆன்மீக குருமார்களும் எவ்விதப் பயிற்சியோ பரிட்சையோ இல்லாமல் சீடர்களை ஏற்கின்றனர். இதுதான் இன்றைய நிதர்சனம். ஆனால் வேத இலக்கியங்களோ குரு-சீட இலக்கணங்களை வகுத்து நமக்கு வழிகாட்டியுள்ளது. ஆயோத தௌம்யர் என்னும் தலைசிறந்த குரு தமது சீடர்களை எவ்வாறு பரிசோதித்தார் என்பதை மஹாபாரதத்தின் ஆதி பர்வத்தில் (அத்தியாயம் 3) காண்கிறோம். மடையாய் கிடந்த சீடன் ஆயோத தௌம்யரின் ஆஷ்ரமம் அடர்ந்த அடவியில் அழகாக அமைந்திருந்தது; அங்கே அவருக்கு ஆருணி, உபமன்யு, வேதன் முதலிய முத்தான சீடர்கள் சேவை செய்து வந்தனர். ஒரு நாள் மாமுனிவர் தௌம்யர் ஆருணியை அழைத்து, வயலின் வாய்க்கால் உடைப்பை அடைத்துவிட்டு வரும்படி ஆணையிட்டார். ஆருணி வாடையின் வாட்டலுக்கு வருந்தாது வரப்பு வழியே விரைந்தபோது, வழக்கத்திற்கு மாறாக வாய்க்காலில் வழிந்தோடும் நீர்ப்பெ...