Skip to main content

Posts

கோபம்

  த்ரி–வித ம் நரகஸ்யேத ம் த் வாரம் நாஷ னம் ஆத்மன: காம: க்ரோத ஸ் ததா  லோப ஸ் தஸ்மாத்  ஏதத் த்ரயம் த்யஜேத் காமம், கோபம், பேராசை ஆகியவை நரகத்திற்குக் கொண்டுச் செல்லும் மூன்று கதவுகளாகும். இவை ஆத்மாவை அழிவுப் பாதையில் நடத்துவதால், ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் இவற்றைத் துறக்க வேண்டும். பொருளுரை: அசுரத்தனமான வாழ்வின் ஆரம்பம் இங்கே விவரிக்கப் பட்டுள்ளது. தனது காமத்தைத் திருப்தி செய்ய ஒருவன் முயல்கின்றான், அவனால் அது முடியாதபோது, கோபமும் பேராசையும் எழுகின்றன. அசுரத்தனமான உயிரினங்களுக்கு வீழ்ச்சியடைய விரும்பாத அறிவுள்ள மனிதன், இந்த மூன்று விரோதிகளையும் துறப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும், இவை இந்த பௌதிக பந்தத்திலிருந்து முக்தி பெறுவதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லாதபடி ஆத்மாவைக் கொல்லக்கூடியவை. நரகத்திற்கான மூன்று வாசல்கள் (த்ரி-விதம் நரகஸ்ய த்வாரம்) பகவத் கீதை 16.21-இன் படி, ஒரு மனிதனின் ஆத்மாவை அழிவுப் பாதையில் நடத்தி, நரகத்திற்கு இட்டுச் செல்லும் மூன்று முக்கிய வாயில்கள்: 🔥 காமம்: அத்தியாவசியமற்ற ஆசைகள் மற்றும் புலனின்பங்களை திருப்தி செய்ய ஏங்குவது. 😠 க்ரோதம் : காமம் நிறைவேறா...

பாரத வர்ஷம் - புண்ணிய பூமி

       பாரத - வர்ஷம் என்று அழைக்கப்படும் இந்தியாவில், பக்தித்தொண்டு செய்வதற்கு ஏராளமான வசதிகள் இருக்கின்றன. பாரத - வர்ஷத்தில் அனைத்து ஆச்சாரியர்களும் தங்கள் அனுபவங்களை அள்ளி வழங்கியிருக்கின்றனர். ஆன்மீக வாழ்வில் எவ்வாறு வளர்ச்சி பெறுவது, பகவானது பக்தித் தொண்டில் எவ்வாறு நிலைபெறுவது என்பதை பாரத - வர்ஷத்தில் உள்ள மக்களுக்கு உபதேசிப்பதற்காக ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தனிப்பட்ட முறையில் அங்கு எழுந்தருளினார். பக்தித் தொண்டின் வழிமுறைகளை மிகவும் எளிதில் அறிந்து கொள்வதற்கும், அதனை மேற்கொள்வதின் மூலம் வாழ்க்கையை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கும் பாரத - வர்ஷம் விசேஷத் தன்மை வாய்ந்த நிலமாகும். ஒருவன் பக்தித் தொண்டில் தனது வாழ்க்கையை வெற்றிகரமாக்கிக் கொண்டு, பின்னர் உலகின் பிற பகுதிகளுக்கும் பக்தித் தொண்டினை உபதேசிப்பானென்றால், உலகம் உண்மையில் நலம்பெறும். இவ்வுண்மைகள் சைதன்ய சரிதாம்ருதத்தில் (ஆதி 9.41) மேலும் விளக்கப்படுகின்றன: பாரத - பூமிதே ஹைல மனுஷ்ய - ஜன்ம யார ஜன்ம ஸார்தக கரி’ கர பர - உபகார      “இந்திய (பாரத - வர்ஷம்) நிலப்பகுதியில் மனிதனாகப் பிறந்திருக்கும் ஒருவன் தனத...

“கிருஷ்ணனை நினைக்கும் இரு வழிகள் — பக்தியின் வழி, பகையின் வழி.”

  பகவத்கீதையில் (4.10) பகவான் கூறுகிறார்: வீத–ராக–பய–க்ரோதா மன் மயா மாம் உபாஷ்ரிதா: பஹவோ க்ஞான–தபஸா பூதா மத்–பாவம் ஆகதா: “பற்று, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, என்னில் முழுமையாக ஆழ்ந்து, என்னிடம் சரணடைந்து, என்னைப் பற்றிய அறிவால் பலர் இதற்கு முன்பு தூய்மையடைந்துள்ளனர். இவ்விதமாக, அவர்களனைவரும் என்னிடம் உன்னத பிரேமையுடைவராயினர்.” இரு வழிகளில் கிருஷ்ணரை இடையறாது நினைக்க முடியும். ஒன்று, ஒரு பக்தனாக மற்றது, ஒரு பகைவனாக. ஒரு பக்தன் அவனுடைய அறிவினாலும், தவத்தினாலும், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டு ஒரு தூய பக்தனாகிறான். அவ்வாறே ஓர் எதிரியும் கிருஷ்ணரைப் பற்றிய பகை உணர்ச்சியுடன் நினைத்த போதிலும், அவரையே இடையறாது நினைத்துத் தூய்மையடைகிறான். இது பகவத் கீதையில் (9.30) பகவானால் பின்வருமாறு உறுதி செய்யப்படுகிறது: அபி சேத் சதுராசாரோ பஜந்தே மாம் அனன்ய - பாக் ஸாதுர் ஏவ ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ: “ஒருவன் மிகவும் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தாலும், அவன் பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பானாயின், அவனைப் புனிதமானவனாகவே கருத வேண்டும். ஏனெனில் அவன் தக்க முறையில் நிலைபெற்றுள்ளான...

பக்தி - முக்தியை விடச் சிறந்தது

  பக்தி - முக்தியை விடச் சிறந்தது முக்திக்கான தனி முயற்சி தேவையில்லை: ஒரு பக்தர் முக்தி அல்லது விடுதலையை அடையத் தனியாகப் பெருமுயற்சி செய்ய வேண்டியதில்லை. அவர் பரம புருஷ பகவானுக்குச் செய்யும் பக்தித் தொண்டே தானாகவே முக்தியை அடைவதற்கான வழியாகிறது. வயிற்றில் உள்ள நெருப்பு உதாரணம்: ஜீரணிக்கும் சக்தி போதுமான அளவு இருந்தால், நாம் உண்ணும் எதுவும் ஜீரணமாகிவிடும். அதுபோல, உண்மையான பக்தி இருந்தால், விடுதலை தானாகவே கைகூடும். ஸ்ரீ பில்வமங்கள தாகூரின் கூற்று: பக்தியுடன் பகவானின் தாமரைப் பாதங்களை வழிபடும்போது, முக்தி அல்லது விடுதலை, ஒரு பணியாளராக வந்து பக்தருக்குத் தொண்டு புரியும் என்று அவர் கூறுகிறார். முக்தி பக்தரின் பணிக்குக் காத்திருக்கிறது. புலன் கட்டுப்பாடு (யோக சித்தி): மாயாவாதிகள் முக்தி அடையக் கடுமையான தவம் மேற்கொள்கின்றனர். பக்தர்கள், ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை உச்சரிப்பதன் மூலமும், பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாதத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமும் தங்கள் நாவைக் கட்டுப்படுத்துகிறார்கள். சுவையுணர்வு கட்டுப்படுத்தப்பட்டவுடன், பிற எல்லாப் புலன்களும் இயல்பாகவே கட்டுப்படுத்தப்படுகின்றன. ...