த்ரி–வித ம் நரகஸ்யேத ம் த் வாரம் நாஷ னம் ஆத்மன: காம: க்ரோத ஸ் ததா லோப ஸ் தஸ்மாத் ஏதத் த்ரயம் த்யஜேத் காமம், கோபம், பேராசை ஆகியவை நரகத்திற்குக் கொண்டுச் செல்லும் மூன்று கதவுகளாகும். இவை ஆத்மாவை அழிவுப் பாதையில் நடத்துவதால், ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் இவற்றைத் துறக்க வேண்டும். பொருளுரை: அசுரத்தனமான வாழ்வின் ஆரம்பம் இங்கே விவரிக்கப் பட்டுள்ளது. தனது காமத்தைத் திருப்தி செய்ய ஒருவன் முயல்கின்றான், அவனால் அது முடியாதபோது, கோபமும் பேராசையும் எழுகின்றன. அசுரத்தனமான உயிரினங்களுக்கு வீழ்ச்சியடைய விரும்பாத அறிவுள்ள மனிதன், இந்த மூன்று விரோதிகளையும் துறப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும், இவை இந்த பௌதிக பந்தத்திலிருந்து முக்தி பெறுவதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லாதபடி ஆத்மாவைக் கொல்லக்கூடியவை. நரகத்திற்கான மூன்று வாசல்கள் (த்ரி-விதம் நரகஸ்ய த்வாரம்) பகவத் கீதை 16.21-இன் படி, ஒரு மனிதனின் ஆத்மாவை அழிவுப் பாதையில் நடத்தி, நரகத்திற்கு இட்டுச் செல்லும் மூன்று முக்கிய வாயில்கள்: 🔥 காமம்: அத்தியாவசியமற்ற ஆசைகள் மற்றும் புலனின்பங்களை திருப்தி செய்ய ஏங்குவது. 😠 க்ரோதம் : காமம் நிறைவேறா...