Skip to main content

ஶ்ரீ ஶ்ரீ சோராஷ்டகம்

 


ஶ்ரீ ஶ்ரீ சோராஷ்டகம்

வழங்கியவர் :- பில்வமங்கள டாகுர்

 

பதம் 1

வ்ரஜே ப்ரசித்தம் நவநீத சோரம்

கோபாங்கனானாம் துகூல சௌரம்

அனேக ஜன்மார்ஜித பாப சௌரம்

சௌராக்ரகண்யம் புருஷம் நமாமி

மொழிபெயர்ப்பு

விருந்தாவனத்தில் வெண்ணை திருடுவதில் பிரசித்தி பெற்றவரும்,  கோபியர்களின் ஆடைகளை திருடியவரும், தன்னிடம் சரணடைந்த  பக்தர்களின் பல கோடி வருடங்களாக சேர்த்து வைத்திருந்த பாவங்களைத் திருடுபவரும்,  திருடர்களில் எல்லாம் முதன்மையான திருடனுமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.

 

பதம் 2

ஸ்ரீராதிகாயா ஹ்ருதயஸ்ய சௌரம்

நவாம்புத ஷ்யாமல காந்தி சௌரம்

பதாஸ்ரீதானாம் சமஸ்த சௌரம்

சௌராக்ரகண்யம் புருஷம் நமாமி

 

மொழிபெயர்ப்பு

ஸ்ரீமதி ராதாராணியின் இதயத்தைத் திருடியவரும்,  புத்தம் புதிய இருண்ட மழை மேகத்தின் காந்தியைத் திருடியவரும்,  தமது தாமரைப் பாதத்தில் சரண் அடைந்தவர்களின் பாவங்களையும் துன்பங்களையும் திருடும் திருடர்கள் எல்லாம் முதன்மையான திருடரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.

 

 

பதம் 3

அகிஞ்சனீ க்ருத்ய பதாஷ்ரிதம் யஹ்

கரோதி பிக்ஷம் பதி கேஹ ஹீனம்

கேனாப்ய் அஹோ பீஷண சௌர இத்ருக்

த்ருஷ்டஹ் ஸ்ருதோ வா ஜகத் த்ரயே ()பி

 

மொழிபெயர்ப்பு

அவர் தன்னிடம் சரண் அடைந்த பக்தர்களை வறுமையில் வாட்டி வசிக்க இருப்பிடம் அற்று அங்குமிங்கும் அலைந்து திரியும் பிச்சைக்காரர்களாகவும் மாற்றுகிறார்.... ஐயகோ !!! இது போன்ற பயங்கரமான ஒரு திருடனை மூவுலகங்களிலும் நான் பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை.

 

பதம் 4

யதீய நாமாபி ஹரத்ய் அசேஷம்

 கிரி ப்ரசாரான் அபி பாப ராசீன்

 ஆஸ்சர்ய ரூபோ நனு சௌர இத்ருக்

த்ருஷ்டஹ் ஸ்ருதோ வா மயா கதாபி

 

மொழிபெயர்ப்பு

அவருடைய (கிருஷ்ணருடைய) பெயரை உச்சரிப்பது மலையளவு பெரும் பாவத்தை  தூய்மை ஆக்குகின்றது.  இதுபோன்ற வியக்கத்தக்க அற்புதமான ஒரு திருடனை நான் எங்கும் பார்த்ததும் இல்லை,  கேள்விப்பட்டதும் இல்லை.

 

பதம் 5

தனம் மானம் சத் தேந்த்ரியாணி

ப்ராணாம்ஸ் மம சர்வம் ஏவ

பலாயஸே குத்ர த்ருடோ ()த்ய சௌர

த்வம் பக்தி தாம்நாசி மயா நிருத்தஹ்

 

 

மொழிபெயர்ப்பு

  திருடனே!!!  என்னுடைய செல்வம், என்னுடைய மரியாதை,  என்னுடைய புலன்கள் (உணர்வுகள்),  என்னுடைய வாழ்க்கை....என எல்லாவற்றையும் திருடிவிட்டு   உங்களால்  எங்கு  ஓட முடியும்??  உங்களை என் பக்தி எனும் கயிற்றினால் நான் பிடித்து விட்டேன்....

 

பதம் 6

சினத்சி கோரம் பய பாச பந்தம்

பினத்சி பீமம் பவ பாச பந்தம்

சினத்சி சர்வஸ்ய சமஸ்த பந்தம்

நைவாத்மனோ பக்த க்ருதம் பந்தம்

மொழிபெயர்ப்பு

யம ராஜனின் பயங்கரமான கர்ஜனையை (யம பயத்தை)   வெட்டி விடுகின்றீர்கள். மாயையின் பயங்கரத்தை துண்டித்து  விடுகின்றீர்கள். அனைவரின் பௌதிக  பற்றுதலை   குறைத்து விடுகின்றீர்கள்.....ஆனால் பாசத்திற்குரிய உங்களது  பக்தர்களால் கட்டப்பட்ட அன்பு என்னும் முடிச்சை உங்களால் வெட்ட முடியவில்லை.

 

பதம் 7

மன் மானசே தாமச ராசி கோரே

 காராக்ருஹே துஹ்க மயே நிபத்தஹ்

லபஸ்வ ஹே சௌர! ஹரே சிராய

 ஸ்வ சௌர்ய தோஷோசிதம் ஏவ தண்டம்

மொழிபெயர்ப்பு

என்னிடம் உள்ள எல்லாவற்றையும் திருடிய திருடனே!!!!  என்னுடைய அறியாமை எனும் பயங்கரமான இருளில் பயந்து போன பரிதாபமான என் இதயமெனும் சிறைச்சாலையில் இன்று உங்களைக் கைதியாக அடைத்து விட்டேன்.....மிக நீண்டகாலம் அங்கேயே இருங்கள்..... இதுவே நீங்கள் செய்த அனைத்து திருட்டுக் குற்றங்களுக்கு தகுந்த தண்டனை ஆகும்.

 

பதம் 8

காராக்ருஹே வச சதா ஹ்ருதயே மதீயே

மத் பக்தி பாச த்ருட பந்தன நிஸ்சலஹ் சன்

த்வாம் க்ருஷ்ண ஹே ப்ரலய கோடி சதாந்தரே ()பி

சர்வஸ்வ சௌர ஹ்ருதயான் ஹி மோசயாமி

மொழிபெயர்ப்பு

ஸ்ரீ கிருஷ்ண பகவானே!!! என் எல்லாவற்றையும்  திருடியவரே!! என் பக்தியின் வலிமையால் எப்போதும் என் இதயம் இறுக்கமாகவே இருக்கட்டும்... நீங்கள் தொடர்ந்து என் இதயமெனும் சிறைச்சாலையிலேயே வாசம் புரிவீர்களாக... பல கோடான கோடி யுகங்களானாலும் என் இதயத்தில் இருந்து  நான் உங்களை விடுவிக்கப் போவதில்லை.

 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...