Skip to main content

ஸ்ரீ ஸ்ரீ குரு அஷ்டகம்



ஸ்ரீ ஸ்ரீ குரு அஷ்டகம்

(ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகுரர்)

 


பதம் 1

ஸம்சார-தாவாநல-லீட-லோகா

த்ராணாய காருண்ய-கனாகனத்வம்

ப்ராப்தஸ்ய கல்யாண-குணார்ணவஸ்ய

வந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்

மொழிபெயர்ப்பு

மேகங்கள் எவ்வாறு மழையை பொழிந்து காட்டுத் தீயை அணைக்கின்றதோ அவ்வாறே கருணைக் கடலாகிய ஆன்மீக குருவானவர் பெளதிக விவகாரங்களினால் தகிக்கப்படும் இவ்வுலகை காப்பாற்றுகிறார், மங்கள கரமான குணங்களை உடைய அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்

 

பதம் 2

மஹாப்ரபோ கீர்தன-ந்ருத்ய-கீதா

வாதித்ர-மாத்யன்-மனஸோ ரஸேனா

ரோமாஞ்ச-கம்பா ஸ்ருதரங்க-பாஜோ

வந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்

 

மொழிபெயர்ப்பு

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஸங்கீர்த்தன இயக்கத்தில் புனித நாமத்தை ஜெபித்து, நடனமாடி, பாடி, இசை கருவிகளை இசைத்து ஆன்மீக குருவானவர் எப்பொழுதும் ஆனந்தமடைகிறார். சில நேரங்கள் மயிர் கூச்செரிந்து, உடல் நடுங்க, கண்களில் நீர் மல்க  தனது தூய பக்தியை வெளிப்படுத்துகிறார், அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.


பதம் 3

ஸ்ரீ-விக்ரஹாராதன-நித்ய-நாநா

ஸ்ருங்கார-தன்-மந்திர-மார்ஜனாதெள

யுக்தஸ்ய பக்தாம்ஸ் நியுஞ்ஜதோ பி

வந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்

மொழிபெயர்ப்பு

ஆன்மீக குருவானவர் எப்பொழுதும் கோவிலில் ஸ்ரீராதா க்ருஷ்ணரை வழிபட்டு, தனது சிஷ்யர்களையும் இந்த வழிபாட்டில் ஈடுபடுத்துகிறார், அவர்கள் அழகிய ஆடை, நகைகளால் தெய்வங்களை அலங்கரித்து, கோவிலை சுத்தம் செய்து சேவை புரிகிறார்கள், அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.

 

பதம் 4

சதுர்-வித-ஸ்ரீ-பகவத்-ப்ரசாதோ

ஸ்வாத்வ்-அன்ன-த்ருப்தான்-ஹரி-பக்த-சங்கான்

க்ருத்வைவ த்ருப்திம் பஜத சதைவா

வந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்

மொழிபெயர்ப்பு

நான்கு வகையான அறுசுவை உணவுகளை க்ருஷ்ணருக்கு படைத்து, அந்த பகவத் பிரசாதத்தை சாப்பிடும் பக்தர்களைக் கண்டு தான் திருப்தி அடைகிறார். அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்

  

பதம் 5

ஸ்ரீ-ராதிகா-மாதவயோர் அபாரா

மாதுர்ய-லீலா-குண-ரூப-நாம் நாம்

ப்ரதி-சஷணாஸ்வாதன-லோலுபஸ்ய

வந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்

 

மொழிபெயர்ப்பு

ஸ்ரீராதா மாதவரின் எல்லையற்ற மாதுர்ய லீலைகளை கேட்டும், நினைத்தும் அவர்களின் நாம, ரூபங்களில் ஆர்வம் கொண்டு, எந்த நொடியிலும் இவைகளை வெளியிட பேராவல் மிக்கவராய் இருக்கிறார் ஆன்மீக குருவானவர். அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.

 

பதம் 6

நிகுஞ்ச-யூனோ ரதி-கேலி-சித்யை

யா-யாலிபிர் யுக்திர் அபேக்ஷணீயா

தத்ராதி-தாக்ஷ்யாத் அதி-வல்லபஸ்ய

வந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்

மொழிபெயர்ப்பு

விருந்தாவனத்தில் ஸ்ரீராதா க்ருஷ்ணரின் மாதுர்ய லீலைகளுக்கு வெவ்வேறு வகையான ஏற்பாடுகளை செய்யும் கோபிகளுக்கு பொருத்தமான, சிறந்த ஏற்பாடுகளை செய்வதில் அனுபவமிக்கவரான  ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்


பதம் 7

ஸாக்ஷாத்-தரித்வேன சமஸ்த-சாஸ்த்ரைர்

யுக்தஸ் ததா பாவ்யத ஏவ ஜத்பி :

கிந்து ப்ரபோர் ப்ரிய  ஏவ தஸ்ய

வந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்

மொழிபெயர்ப்பு

குரு என்பவர் உண்மையில் பகவத் ஸ்வரூபமாக ஆராதிக்கப்பட வேண்டியவர். ஏனென்றால் அவர் பகவானுடைய அந்தரங்க தாஸன் என்பதை சாஸ்த்திரங்களும், எல்லா ஆன்மீக அதிகாரிகளும் ஒப்புக் கொள்கிறார்கள், அப்பேர்ப்பட்ட ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.


பதம் 8

யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாதோ

யஸ்யா ப்ரஸாதான் கதி குதோ பி:

த்யாயன் ஸ்துவம்ஸ் தஸ்ய யசஸ் திரி-சந்த்யம்

வந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்

 

மொழிபெயர்ப்பு

குருவின் கிருபை இல்லாமல் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது. ஆகவே குறைந்தது ஒரு நாளைக்கு மூன்று முறையாவது குருவை நினைத்து அவரை போற்ற வேண்டும், எனது ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்,


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...