Skip to main content

ஶ்ரீ ஶ்ரீ நந்த நந்தன அஷ்டகம்

 

ஶ்ரீ ஶ்ரீ நந்த நந்தன அஷ்டகம்

பதம் 1

ஸுசாரு வக்த்ர மண்டலம்

ஸுகர்ணரத்ன குண்டலம்

ஸுசர்சிதாங்க சந்தனம்

நமாமி நந்த³நந்த³னம்

மொழிபெயர்ப்பு

வசீகரிக்கும் அழகிய வட்டமான திருமுகமும்,  அழகிய (மாதுளை பூ போன்ற) காதுகளை ரத்தின குண்டலங்கள் அலங்கரிக்க,    அவருடைய திருமேனி சுகந்தமான சந்தன கூழினால் பூசப்பட்டு வசீகரத்துடன் காட்சியளிக்கும் நந்த மகாராஜாவின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

பதம் 2

ஸுதீர்கநேத்ர பங்கஜம்

சிகீசிகண்டமூர்தஜம்

அனங்ககோடி மோஹனம்

நமாமி நந்த நந்தனம்

 

மொழிபெயர்ப்பு

அழகிய தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையுடையவரும் சிரசில் மயில்பீலிகளால் அலங்கரிக்கப்படும் பல கோடி கோடி மன்மதன்களை மயக்கும் நந்த மகாராஜாவின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

பதம் 3

ஸுநாஸிகாக் மௌக்திகம்

ஸ்வச்சந்த பங்க்திகம்

நவாம்புதாங்க சிக்கணம்

நமாமி நந்த நந்தனம்

மொழிபெயர்ப்பு

அவரது மூக்கின் நுனியில் யானையின் தந்தங்களினால் செய்யப்பட்ட மின்னும் அழகிய முத்து தொங்குகின்றது.  இயற்கையிலேயே பிரகாசிக்கும் முத்துக்கள் போன்ற பல் வரிசையும் புத்தம் புதிய மழை மேகம் போன்று பிரகாசிக்கும் திருமேனியும் கொண்ட நந்த மகாராஜாவின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

பதம் 4

கரேண வேணு ரஞ்ஜிதம்

தி: கரீந்த் ஞ்ஜிதம்

துகூல பீதஸோபநம்

நமாமி நந்த நந்தனம்

மொழிபெயர்ப்பு

அவருடைய கரங்களை புல்லாங்குழல் அலங்கரிக்கின்றது யானையின் அரசனான கஜராஜனை தோற்கடிக்கும் வசீகரமான நடையுடையவரும் மஞ்சள் பட்டாடையில் (பீதாம்பரம்) அலங்கரிக்கப்பட்டவருமான நந்த மகாராஜாவின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

பதம் 5

த்ரிபங்க தேஹஸுந்தரம்

நகத்யுதி: ஸுதாகரம்

அமூல்ய ரத்நபூஷணம்

நமாமி நந்த நந்தனம்

மொழிபெயர்ப்பு

மூன்று இடங்களில் வளைந்து திரிபங்க ரூபியாக வசீகரமாக காட்சியளிக்கின்றார்.  அவருடைய நகங்கள் சந்திரன் போன்று ஒளிர்கிறது.  விலைமதிப்பற்ற ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவரும் நந்த மகாராஜாவின் முதல்வருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

பதம் 6

ஸுகந்த அங்கஸௌரபம்

உரோ விராஜி கௌஸ்துபம்

ஸ்புரத் ஶ்ரீவத்ஸலாஞ்சநம்

நமாமி நந்த நந்தனம்

மொழிபெயர்ப்பு

அவருடைய திருமேனி அசாதாரணமாக மயக்கும் நறுமணத்தை வெளியிடுகின்றது. அவரது பரந்து விரிந்த மார்பு ஒளிரும் கௌஸ்துப மணி மற்றும் ஸ்ரீவத்ஸ குறியை தாங்கியவருமான நந்த மகாராஜாவின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

பதம் 7

வ்ருந்தாவனஸுநாகரம்

விலாஸாநுக வாஸஸம்

ஸுரேந்த் ர்வமோசநம்

நமாமி நந்த நந்தனம்

மொழிபெயர்ப்பு

அவர் பிருந்தாவனத்தை மிக நேர்த்தியாக காத்து அருள் பாலிக்கின்றார்.  அவர் ஆடை தரித்திருக்கும் விதமானது அவரது அழகிய விளையாட்டுத்தனமான லீலைகளை மேம்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.  இந்திரனை அவரது கர்வத்திலிருந்து விடுதலை அளித்த நந்த மகாராஜாவின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

 

பதம் 8

வ்ரஜாங்க நாஸுநாயகம்

ஸதா ஸுக ப்ரதா யகம்

ஜகந்மந:ப்ரலோபநம்

நமாமி நந்த நந்தனம்

மொழிபெயர்ப்பு

பிருந்தாவனத்தை கோபியரின் காதலரும் எப்பொழுதும் எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சியைளிப்பவரும் அவர்களது மனதை மயக்குபவருமான நந்த மகாராஜாவின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

பதம் 9

ஶ்ரீ நந்த நந்த னாஷ்டகம்

படேத்: ஸ்ரத் யான்வித:

தரேத் வாப்திம்  துஸ்தரம்

லபேத்  ததங்க்ரியுக்மகம்

மொழிபெயர்ப்பு

யாரொருவர் நந்த மகாராஜாவின் புதல்வரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் புகழ்பாடும் இந்த எட்டுப் பதங்களை நம்பிக்கையுடன் பாராயணம் செய்கின்றார்களோ அவர்கள்  கடப்பதற்கு மிக அரிதான இந்த பௌதீக பெருங்கடலை மிகச் சுலபமாக கடந்து வெற்றி அடைவார்கள் மற்றும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தாமரை பாதத்தில் அடைக்கலமும் அடைவார்கள் என்பது நிச்சயம்.

 

 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



 

 


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...