Skip to main content

ஶ்ரீராமனின் சகோதரன் பரதனின் மகிமை

  


ஶ்ரீராமனின்  சகோதரன் பரதனின் மகிமை


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


அயோத்தியை ஆண்ட தசரத மன்னனுக்கு 3 மனைவியர்கள் (கௌசல்யா, கைகேயி, சுமித்திரை) மூவரிலும் தசரத மன்னனின் அன்பிற்கு அதிகம் பாத்திரமானவர் "கைகேயி". அவளுடைய மகன் பரதன். "மந்தரை" என்னும் கூனியால் ஏவப்பட்டு கைகேயி மூத்தவனாகிய ஶ்ரீ ராமனுடைய பட்டாபிஷேகத்தை முடங்கி விட்டாள். தனக்கு மன்னன் கொடுத்திருந்த இரண்டு வரத்தை அத்தருணத்தில் கேட்டு இராமன் காட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் பரதனே நாட்டை ஆளவேண்டும் என்றும் கேட்டு அந்த இரண்டு வரங்களையும் பெற்றாள். தந்தையின் வரம் பொய் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தானே முன்வந்து வனம் சென்றார் இராமன். பரதனை அரசனாக்கி கண்டு மகிழ கைகேயி தயாராக இருந்தாள். அந்த நிலையில் பரதன் ஆனந்தமாக அரியாசனம் ஏறுவதற்கு பதிலாக பெற்றெடுத்த அன்னையின் மீது சீறி விழுந்தான். "அம்மா நீ ஒரு பெண்ணாகியதால் உன்னை கொலை செய்யாமல் விடுகிறேன்". என்று தாயின் மீது சினம் கொண்டான். அண்ணனை அழைத்து வந்து அரியாசனம் ஏற்றி வைப்பேன். அண்ணன் வராவிடில் நானும் இந்த அயோத்தி நகர் வர மாட்டேன் என வீர சபதம் எடுத்தான். அண்ணனை அழைத்து வரவேண்டும் என்று காட்டிற்கு சென்றான். ஆனால் அண்ணன் ஊர் திரும்பி வரமாட்டேன் என்று கூறிவிட்டார் விட்டான்.


அதனால் அவரது அறிவுரைகளை பெற்று அவனது பாதுகைகளை சிரசில் ஏந்தி நாடு திரும்பினான். மேலும் அண்ணனிடம் "அண்ணா 14 வருடம் வனவாசம் முடிந்த மறு கணம் நீ வந்து சேரவில்லை என்றால் நான் உயிர் வாழமாட்டேன்" என்று உரைத்தான். நாடு திரும்பிய பரதன் அயோத்திக்குப் செல்லவில்லை. நந்தி கிராமம் என்ற ஊரில் தங்கி விட்டான். கானகம் சென்ற அண்ணன் எவ்விதம் வாழ்கிறானோ அதே போல் தானும் ஆடை ஆபரணங்களைக் களைந்து, ஜடாமுடி தரித்து, காய் கனிகளை தின்று வெறும் தரையில் படுத்து உறங்கி வாழ்ந்தான். அரியணையில் அண்ணனின் பாதுகைகளை ஏற்றி வைத்து, அண்ணனின் பிரதிநிதியாக தன்னை பாவித்து, அந்த கிராமத்திலிருந்தே அரசாட்சியை ராமனின் அறிவுரைப்படி செம்மையாக நடத்தி வந்தான். இப்படி இருக்கையில் ஆண்டுகள் 14 ம் சென்றன. அண்ணன் வர காணாத பரதன் கானகத்தில் ராமனுக்கு ஆபத்து வந்துவிட்டது என்று கருதினான். அழுது புரண்டான். தனது சபதத்திற்கு ஏற்ப தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள உறுதி பூண்டான். சிதை தயாராகியது. நெருப்பில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள தீர்மானித்துக் கொண்டான். அந்நேரத்தில் ராமதூதன் ஆகிய "ஆஞ்சநேயன்" வந்து ராமன் வரும் செய்தியை அறிவித்ததும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தான். அண்ணனிடம் இத்தனை பக்தியும், அன்பும், பாசமும் உடைய சகோதரன் "பரதனை" போல் வேறு யாருமில்லை.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, 
ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண!

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி

🔆🔆🔆🔆🔆🔆🔆

Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇

🔆🔆🔆🔆🔆🔆🔆

சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...