Skip to main content

பகவான் கிருஷ்ணரை எத்தனை முறை பார்தாலும் சலிப்படைவதில்லை

நித்யம் நிரீக்ஷமானானாம் யத் அபி த்வாரகௌகஸாம்
வித்ருப்யந்தி ஹி த்ருச: ஸ்ரீயோ தாமாங்கம் அச்யுதம்


மொழிபெயர்ப்பு

துவாரகா வாசிகள், அழகுக் களஞ்சியமான குறையற்ற பகவானை அடிக்கடி காண்பதில் பழக்கப்பட்டிருந்தனர் என்றபோதிலும், அதில் அவர்களுக்கு சலிப்பே ஏற்படவில்லை.

பொருளுரை

தங்களது மாளிகைகளின் உச்சிக்கு ஏறிச் சென்ற துவாரகாபுரி பெண்கள், பகவானின் குறையற்ற அழகிய திருவுடலை இதற்கு முன் தாங்கள் பலமுறை கண்டிருப்பதைப் பற்றி ஒருபோதும் சிந்தித்துப் பார்க்கவில்லை. பகவானைக் காண்பதில் அவர்களுக்கு திகட்டல் உண்டாகவில்லை என்பதையே இது குறிக்கிறது. பௌதிக அழகு கொண்ட எதையும் சில முறைகள் காண்பதால் முடிவில் அது கவர்ச்சியற்றதாகிவிடுகிறது. இது திகட்டச் செய்யும் விதியாகும். இவ்விதியால் ஜடவுலகில் மட்டுமே செயற்பட முடியும். ஆன்மீக உலகில் இதற்கு இடமில்லை. குறையற்றவர் என்ற சொல் இங்கு கவனிக்கத்தக்கதாகும். ஏனெனில், தனிப்பெருங் கருணையால் பகவான் பூமியில் அவதரித்தபோதிலும், அவர் குறையற்றவராகவே இருக்கிறார். ஜீவராசிகள் குறையுடையவர்களாவர். ஏனெனில், ஜடவுலக தொடர்புக்கு அவர்கள் உட்படும்பொழுது அவர்களுடைய ஆன்மீகத் தன்மை மங்கிவிடுகிறது. இதனல் பௌதிகமான முறையில் அடையப்பட்ட உடல் இயற்கைச் சட்டங்களின் கீழ், பிறப்பு, வளர்ச்சி, மாற்றம், சூழ்நிலை, சீரழிவு மற்றும் மரணம் ஆகியவற்றிற்கு உட்பட்டதாக இருக்கிறது. பகவானின் உடல் அத்தகையதல்ல. சுய உருவில் அவதரிக்கும் அவர், இயற்கைக் குணங்களின் சட்டங்களுக்கு ஒருபோதும் உட்படுவதே இல்லை. அவரது உடல் படைக்கப்பட்டுள்ள அனைத்திற்கும் பிறப்பிடமாகும். மேலும் அது நம்முடைய அனுபவத்திற்கு அப்பாற்பட்ட அழகுக் களஞ்சியமாகும். பகவானின் திவ்யமான உடலில் எப்பொழுதும் புதுப்புது அழகுகள் தோன்றிக்கொண்டே இருப்பதால் அவரது உன்னதமான உடலைக் காண்பதில் ஒருவருக்கும் திகட்டல் ஏற்படுவதே இல்லை. பகவானின் உன்னதமான நாமம், உருவம், இயல்புகள், பரிவாரம் போன்ற அனைத்தும் ஆன்மீகமானவை ஆகும். அவரது புனித நாமத்தைப் பாடுவதிலும், அவரது இயல்புகளைப் பற்றி விவாதிப்பதிலும் திகட்டல் உண்டாவதில்லை. மேலும் பகவானுடைய சகாக்களின் எண்ணிக்கைக்கு ஓர் அளவேயில்லை. அவர் அனைத்திற்கும் பிற்ப்பிடமும், எல்லையற்றவருமாவார். 


ஶ்ரீமத் பாகவதம் 1.11.25 / பொருளுரை


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...