ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜர் வைஷ்ணவ சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்கவர் ஆவார் , அவர் வைஷ்ணவ-ஸார்வபௌம அல்லது “வைஷ்ணவர்களில் முதன்மையானவர்” என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பிறப்பிடத்தை ஸ்ரீ நவத்வீப தாமத்தில் கண்டுபிடித்ததில் அவருடைய பங்கு மிகவும் முக்கியமானதாகும். ஸ்ரீல ஜகந்நாத பாபாஜி மஹாராஜர் 1800 வருடவாக்கில் பிறந்தார். அவர் பல்வேறு வருடங்களை விருந்தாவனத்தில் கழித்து ஒரு பக்குவமான பக்தராக பிரபலமடைந்தார். அதன் பின்னர் நவத்வீப தாமத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தார். அவர் சுமார் 120 வயதை அடைந்த காலக் கட்டத்தில் ஸ்ரீ நவத்வீபத்தில் ஒரு குடிசையில் வசித்து வந்தார் , அவருடைய சேவகரான பிஹாரி லால் அவருடைய தேவைகளைப் பார்த்துக் கொண்டார். பாபாஜி மஹாராஜர் எங்கேனும் செல்ல வேண்டுமெனில் அவருடைய சேவகர் அவரை ஒரு கூடையில் தூக்கிச் செல்வது வழக்கம். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உண்மையான பிறப்பிடத்தினை ஸ்ரீல பக்திவினோத் தாகூர் தேடிக் கொண்டிருந்த தருணத்தில் ஜகந்நாத தாஸ பாபாஜியையும் தன்னுடன் வருமாறு அவர் வேண்டிக் கொண்டார். சைதன்ய மஹாபிரபு அவதரித்து பல்வேறு வருடங்களுக்குப் பின்னர்...