Skip to main content

Posts

தேங்காய் பர்பி

தேங்காய் பர்பி  தேவையான பொருட்கள் ****************************** தேங்காய் துருவல் - 1 கப் (நன்கு அழுத்தியது) சர்க்கரை - 1 கப் (200 கிராம்) ஏலக்காய் - 4 (பொடி செய்தது) முந்திரி, பாதாம் - தலா 1 தேக்கரண்டி (பொடியாக சீவியது) நெய் - 1 தேக்கரண்டி (வறுக்க)\ செய்முறை ********************* 1. முதலில் தேங்காய்த் துருவலை லேசாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். 2. அரை கப் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டி அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும். 3. பதம் வந்ததும் தேங்காய்த் துருவலைக் கொட்டி கிளறவும். 4. நன்றாக கிளறி கெட்டி பதம் வந்ததும், வாணலியில் ஒட்டாமல் வரும் போது, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும் 5. ஒரு தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் கொட்டி பரப்பி ஆற வைக்கவும். 6. ஒரு தேக்கரண்டி நெய்யில் சீவிய முந்திரி, பாதாமை போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் கொட்டிய தேங்காய் கலவையில் கொட்டி லேசாக அழுத்தி விடவும். 7. லேசாக சூடு ஆறியதும் கத்தியால் விருப்பமான வடிவில் வில்லைகளாக போட்டு நன்கு ஆற விடவும். குறிப்பு **************** 1. அடுப்பில் தொடர்ச்சியாக வி...

பீட்ரூட் அல்வா

 பீட்ரூட் அல்வா தேவையான பொருட்கள் ************************** பீட்ரூட் - 2 பால் - 2 மேஜைக் கரண்டி கண்டென்ஸ்டுமில்க் - 2 மேஜைக் கரண்டி நெய் - 1/2 கோப்பை ஏலக்காய் - 4 உலர்ந்த திராட்சை - 5 சர்க்கரை - 1 1/2 கோப்பை வறுத்த முந்திரி - 10 செய்முறை ************** 1. பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். 2. துருவிய பீட்ரூட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். 3. அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த பீட்ரூட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு வேக விடவும். வேகும் போது நன்கு கிளறி விடவும். 4. நன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும்.

பகவான் தன்வந்திரியின் தோற்றம் / மோகினீ அவதாரம்

  பகவான் தன்வந்திரியின் தோற்றம் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இம்முறை, பகவான் விஷ்ணுவின் அம்ச அவதாரமான தன்வந்தரி தோன்றினார். மிகவும் அழகாக காணப்பட்ட அவர், அமிர்தத்தைக் கொண்ட ஒரு கலசத்தை ஏந்தியிருந்தார். அசுரர்கள் உடனே தன்வந்தரியின் கரத்திலிருந்த கலசத்தை வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டு ஓடத் துவங்கினர். மிகவும் வருத்தமடைந்த தேவர்கள் விஷ்ணுவைச் சரணடைந்தனர். தன்வந்தரியிடமிருந்து கலசத்தை பிடுங்கிக் கொண்டபின் அசுரர்கள் தங்களுக்கிடையில் சண்டையிட ஆரம்பித்தனர். பகவான் விஷ்ணு தேவர்களுக்கு ஆறுதல் கூறியதால் அவர்கள் போரிடாமல் அமைதியாக இருந்தனர்.  மோகினீ அவதாரம் 🍁🍁🍁🍁🍁🍁🍁   அசுரர்களுக்கிடையில் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது, பிரபஞ்சத்திலேயே மிகவும் அழகிய பெண்ணாகிய மோகினீ அவதாரமாக பகவான் தோன்றினார். அமிர்த கலசத்தை அசுரர்கள் அபகரித்துக் கொண்டபோது, அசாதாரணமான அழகு கொண்ட ஓர் இளம்பெண் அவர்களின் முன் தோன்றினாள். அசுரர்கள் அனைவரும் அந்த இளம் பெண்ணின் அழகில் மயங்கி, அவளுக்கு அடிமைகளாயினர். இப்போது அமிர்தத்தை அடைவதற்காக அசுரர்கள் தங்களுக்கிடையில் சண்டை செய்து கொண்டிருந்...

கூர்ம அவதாரம்

  கூர்ம அவதாரம்  வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒரு முறை துருவாசமுனிவர் நடந்து சென்று கொண்டிருக்கையில், தேவர்களின் அதிபதியான தேவேந்திரர் தன்னுடைய வாகனமான ஐராவதத்தின் மீது சென்றுகொண்டிருப்பதை பார்த்தார். உடனே துருவாசர், தன்னுடைய கழுத்தில் இருந்த ஒரு சாமந்தி பூ மாலையை, அவருக்கு கொடுத்தார். துருவாசரின் இந்த செயலை சிறிதும் மதிக்காத தேவேந்திரர், தன்னுடைய கர்வத்தின் காரணமாக, அந்த மாலையை தன்னுடைய யானையின் துதிக்கையில் வைத்தார். மாலையின் மனம் பிடிக்காத யானை, உடனே அந்த மலையை தரையில் தூக்கி எரிந்து தனது காலால் நசுக்கியது.  மிகவும் கோபமடைந்த துருவாச முனிவர், "உன்னுடைய ஆணவத்தின் காரணமாக உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் நீ இழப்பாய்", என்று தேவேந்திரருக்கு சாபமளித்தார். இந்த சம்பவம் நடந்த சிறிது காலத்திலேயே, தேவலோகங்களின் மீது அசுரர்கள் தாக்குதல் நடத்தினர். துருவாச முனிவரின் சாபத்தினால், தேவர்கள் பெரும் தோல்வியை சந்தித்தனர். வேறு வழியின்றி தேவர்கள், பாற்கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவிடம் தஞ்சமடைந்தரர். மகா விஷ்ணுவை போற்றி வணங்கிய பின்னர், மகா விஷ்ணு அவர்களிடம், "த...

ஶ்ரீ கிருஷ்ணர்(பரம புருஷர் பகவான்)

  நான்யம் குணேப்ய: கர்தாரம் யதா த்ரஷ்டானுபஷ்யதி குணேப்யஷ் ச பரம் வேத்தி மத்-பாவம் ஸோ (அ)தி கச்சதி மொழிபெயர்ப்பு எல்லாச் செயல்களிலும், இயற்கையின் குணங்களைத் தவிர வேறு கர்த்தா யாரும் இல்லை என்பதையும், பரம புருஷர் இந்த இயற்கை குணங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதையும் அறிந்து முறையாகக் காண்பவன், எனது ஆன்மீக இயற்கையை அடைகின்றான். பொருளுரை முறையான ஆத்மாக்களிடமிருந்து கற்று, முறையாகப் புரிந்து கொள்வதால், ஜட இயற்கையின் குணங்களுடைய செயல்களைக் கடக்க முடியும். உண்மையான ஆன்மீக குரு கிருஷ்ணரே, அவர் இந்த ஆன்மீக ஞானத்தை அர்ஜுனனுக்கு உபதேசிக்கின்றார். அதுபோல, குணங்களின் செயல்களைப் பற்றிய இந்த விஞ்ஞானத்தை முழுமையான கிருஷ்ண உணர்வில் இருப்பவர்களிடமிருந்து ஒருவன் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் அவனது வாழ்வு வழிதவறிவிடும். அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் அறிவுரைகளால், ஓர் உயிர்வாழி, தனது ஆன்மீக நிலை, ஜட உடல், புலன்கள், தான் சிறைப்பட்டிருப்பது எவ்வாறு, ஜட இயற்கையின் குணங்களினால் தான் மயங்கியிருப்பது எவ்வாறு போன்றவற்றை அறிந்துகொள்ள முடியும். இந்த குணங்களின் பிடியிலிருக்கும் அவன் உதவியற்றவனாக உள்ளான். ஆ...

முத்து மூக்குத்தி

  முத்து மூக்குத்தி ஒரிசா தேசத்தில் பரம பாகவதரான புருஷோத்தம தேவர் என்னும் மஹாராஜா ஆட்சி செய்து வந்தார். அவர் விஜயநகரத்து ராஜகுமாரியை மணம் செய்து கொள்ள விரும்பித்தன் விருப்பத்தை வெளியிட்டார். இதற்கு விஜயநகர அரசன் சம்மதிக்கவில்லை. ஏனெனில் வருடாவருடம் வரும் மாபெரும் ஜெகன்நாதரின் தேர்திருவிழாவில் மன்னர் ஜெகன்நாதரின் தேரின் முன் துடைப்பத்தால் சுத்தம் செய்வது மரபு ( பகவான் ரதத்திற்கு எடுத்துச் செல்லும் சமயத்தில் மன்னர் பிரதாபருத்ரர் தங்கக் கைப்பிடி கொண்ட துடைப்பத்தைக் கொண்டு தாமே தமது கையினால் வீதியினை சுத்தம் செய்யும் சேவையில் ஈடுவார். மன்னர் வீதியில் சந்தன நீரைத் தெளிப்பார்.. அவர் ராஜ சிம்மாசனத்தின் உரிமையாளராக இருந்தபோதிலும் பகவான் ஜகந்நாதரின் திருப்திக்காக துச்சமான சேவையில் ஈடுபட்டார். மன்னர் மிகவும் மதிக்கத்தக்க நபராக இருந்தபோதிலும், அவர் பகவானுக்காக துச்சமான சேவையினை ஏற்றுக் கொண்டார் எனவே, பகவானின் கருணையைப் பெறுவதற்கு அவர் முழு தகுதியுடைய நபரானார். மன்னர் இந்த மாதிரி சேவையில் ஈடுபடுவதை கேள்விப்பட்ட விஜயாநகர மன்னர் தன் மகளை கோயில் பெருக்குகிறவனுக்குத் தரமாட்டேன் என்று கூறினார். இதன...

சாட்சி கோபாலன்

 சாட்சி கோபாலன் 🍁🍁🍁🍁🍁🍁🍁 முன்பு ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் வித்யா நகரம் என்ற ஊரில் இரண்டு அந்தணர்கள் வசித்து வந்தனர். இருவரும் ஒன்றாக க்ஷேத்ராடனம் செய்தனர். கயா, காசி, பிரயாகை, மதுரா இப்படி சென்றவர்கள் பன்னிரெண்டு ஆரண்யங்களையும்  விருந்தாவனத்தில் உள்ள கோவர்த்தன மலையையும் சென்று சேவித்தார்கள்.  யமுனை நதியின் பல படித்துறைகளில் நீராடிய பிறகு இருவரும் விருந்தாவனத்திற்கு வருகை தந்து கோபாலனின் கோயிலைக் கண்ணுற்றார்கள்.  . கோபாலனின் கோயில்  பிரம்மாண்டமானது.பூஜையோ  அதி பகட்டானது. கோபாலனின் அர்ச்சாவதார அழகு அந்தணர்களை கொள்ளை கொண்டது. அவர்கள் இருவரும் இந்தக் கோயிலில் இரண்டு மூன்று நாட்கள் தங்கினார்கள் இந்த இருவரில் ஒருவர் வயதானவர், மற்றவர் இளைஞர் இளைஞர் முதியவருக்கு உதவியாக இருந்தார். தனக்கு அலுப்பு சலுப்பு இல்லாமல் பணிவிடை செய்யும் இளைஞனைப் பார்த்து முதியவர் பூரிப்படைந்தார். "இளைஞனே. நீயில்லாமல் போனால் எவ்வளவு திண்டாடியிருப்பேன்! துளி கஷ்டம் கூட எனக்குத் தெரியவில்லையே" என்று இளைஞனை மெச்சிப் பேசினார் அந்த மூத்த அந்தணர். இளைஞனுக்கு என்ன கொடுத்தால் சரியாய் இரு...

மச்ச அவதாரம்

 மச்ச அவதாரம் வழங்கியவர் :-  ஶ்ரீல பிரபுபாதர் 🍁🍁🍁🍁🍁🍁🍁      பரமபுருஷ பகவான் தம்மை ‘ஸ்வாம்சம்’ எனப்படும் (அவரது சுய அம்சங்களாகவும்), ‘விபின்னாம்சம்’ எனப்படும் (ஜீவராசிகளாகவும்) விரிவடையச் செய்கிறார். பகவத் கீதையில் (4.8) கூறப்படுவதைப் போல், ‘பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்:’ பரமபுருஷ பகவான், சாதுக்கள், அல்லது பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்கள், அல்லது அசுரர்களை அழிக்கவும் இவ்வுலகில் தோன்றுகிறார். குறிப்பாக பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும், தேவர்களுக்கும், பக்தர்களுக்கும் மற்றும் வேத முறைப்படியுள்ள மதத்திற்கும் பாதுகாப்பு அளிப்பதற்காகவே அவர் அவதரிக்கிறார். இவ்வாறாக சிலசமயங்களில் ஒரு மீனாகவும், சிலசமயங்களில் ஒரு பன்றியாகவும், சிலசமயங்களில் நரசிம்ஹ தேவராகவும், சிலசமயங்களில் வாமன தேவராகவும், இன்னும் பல்வேறு உருவங்களில் அவர் தோன்றுகிறார். ஆனால் எத்தகைய உருவத்தில் அல்லது அவதாரத்தில் அவர் மூன்று இயற்கைக் குணங்களைக் கொண்ட இச்சூழ்நிலைகளின் வந்தாலும், அவர் பாதிப்படைவதில்லை. இது அவரது தெய்வீகமான ஆளும் சக்திக்குரிய ஒரூ அடையாளமாகும். அவர் பௌதிக சூழ்நிலைக்குள்...

ஸ்ரீல ரூபகோஸ்வாமி அறியாமல் செய்த குற்றம்

 ஸ்ரீல ரூபகோஸ்வாமி அறியாமல் செய்த குற்றம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒருநாள் விருந்தாவனத்தில் , ஶ்ரீல ரூப கோஸ்வாமி தனது ஆழ்ந்த தியானத்தில் இதயம் முழுக்க பேரின்பத்தில் திளைத்திருந்தார். அவர் தனது சமாதிநிலையில் கோபியர்களின் அதியற்புதமான லீலைகளை கண்டு லயித்திருந்தார்.  கோபியர்கள் ஸ்ரீமதி ராதாராணியை அலங்கரித்துக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணர் பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்தார். கிருஷ்ணர் தனது வருகையை கோபியர்களுக்கு வெளிப்படுத்தி அவர்களுடைய இதயங்களை மகிழ்ச்சி திருவிழாவாக்கினார், இது எதுவுமே ராதாராணிக்கு தெரியாது.  கோபியர்கள் ராதாராணிக்கு அழகாக பின்னலிட்டு மலர்களால் அருமையாக அலங்கரித்தனர். அவளுடைய அழகை காண்பதற்காக கண்ணாடியை காண்பித்தனர். தனது தாமரைமுக அழகை ரசித்தபோது, கண்ணாடியில் கிருஷ்ணருடைய நிலவுமுகமும் தெரிவதைக் கண்டாள். இதனால் வெட்கமடைந்த ராதை தனது முகத்தை தனது மேலாடையால் மறைத்துக் கொண்டாள். இதனைக் கண்ட கோபியர்கள் சிரித்தபோது, ரூபகோஸ்வாமியும் சிரித்தார்.  அதே சமயத்தில்  ரூபகோஸ்வாமியை காண கிருஷ்ணதாஸர் என்ற வைஷ்ணவர் அங்கு வந்தார். ரூப கோஸ்வாமியின் சிரிப்பைக்கண்ட கிருஷ்ணதாஸ...

உத்பன்ன ஏகாதசி

  உத்பன்ன  ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁 சூத கோஸ்வாமி கூறுகிறார், "ஓ கற்றறிந்த பிராமணர்களே, பலகாலம் முன்பு முழுமுதற்கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ஏகாதசியின் மகிமையையும் அந்தப் புனிதநாளில் அனுசரிக்கப்படும் விரதத்திற்கான நியமங்களையும் விளக்கமாகக்கூறியுள்ளார்.  ஏகாதசி தோன்றிய கதை 🍁🍁🍁🍁🍁🍁🍁 (பத்ம புராணம் உத்தர காண்டம் அத்தியாயம் 36இல் இருந்து எடுக்கப்பட்டது) கிருத யுகத்தில் வாழ்ந்து வந்த முராசுரன் என்னும் கொடூர அசுரன், தேவர்களைத் துன்புறுத்தி அவர்களை ஸ்வர்கத்திலிருந்து விரட்டினான். இந்திரனின் தலைமையில் எல்லா தேவர்களும் கரம் குவித்து, துதி பாடி, பாற்கடலில் பள்ளி கொண்ட சுதர்சனம் ஏந்திய கருட வாகனர் ஸ்ரீ விஷ்ணுவிடம் தங்களது குறைகளை முறையிட்டனர். அசுரனின் கொடுமைகளைக் கேட்ட பகவான் விஷ்ணு தேவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்து, முராசுரனுடன் போரிட்டார். தனது அம்புகளாலும் சுதர்சனத்தினாலும் அசுர சேனைகளை விரட்டியடித்தார். நீண்ட காலம் நடைபெற்ற அந்த யுத்தத்தின் நடுவில், பகவான் விஷ்ணு பத்ரிகாஷ்ரமத்தில் உள்ள ஹேமவதி என்ற குகைக்குள் ஓய்வெடுப்பதற்காகச் சென்றார். அவரைத் தேடி அங்கு வந்த முராசுரன், (தெய்வீ...