Skip to main content

Posts

குற்றம் காணும் இயல்பு

 

குற்றம் காணும் இயல்பு

 

கிருஷ்ண பக்தி இயக்கம் ஏன் கிருஷ்ண வழிபாட்டினை மட்டும் பரிந்துரைக்கிறது

  சில நேரங்களில் இக்கிருஷ்ண பக்தி இயக்கம் பிற தேவ வழிபாட்டினை விலக்கி விட்டு கிருஷ்ண வழிபாட்டினை மட்டும் ஏன் பரிந்துரைக்கிறது என்று சிலர் கேட்கின்றனர் . உரிய பதில் இச்சுலோகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது . மரத்தில் அடிவேரில் நீர் வார்ப்பது பற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும் சான்று மிகவும் பொருத்தமுடையதாகும் . பகவத் கீதையில் (15.1) “ ஊர்த்வ மூலம் அத : ஸாகம் ” அதாவது இப்பிரபஞ்சம் கீழ்நோக்கி விரிவடைந்திருக்கிறது . அதன் வேராக மேலேயுள்ள முழுமுதற் கடவுள் விளங்குகிறார் என்று கூறப்பட்டிருக்கிறது . மேலும் பகவான் பகவத் கீதையில் (10.8) உறுதி செய்கிறார் ,” அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ :” என்று . இதன் பொருள் “ நானே அனைத்து ஆன்மீக மற்றும் பரு உலகங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்றேன் ” என்பதாகும் . கிருஷ்ணரே அனைத்திற்கும் ஆணி வேராக இருக்கின்றார் ; அதனால் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வது ( கிருஷ்ண ஸேவா ) என்பதற்குப் பொருள் அனைத்துத் தேவர்களுக்கும் தாமாகவே தொண்டு செய்து போன்றதாகும் . சில நேரம் கர்மம் மற்றும் ஞானத்தினை வெ...

உறங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ண பிரேமையை எழுப்புவதற்குன்டான சிறந்த வழி

  ஜீவன்கள் பகவானின் நுண்ணிய அணுவைப் போன்ற அம்சங்களாக இருப்பதால், பக்தித் தொண்டானது அவர்களில் ஏற்கனவே உள்ளது, ஆனால் செயலற்ற நிலையில் உள்ளது. ஸ்ரவணம், கீர்த்தனம் (செவியுறுதல், உரைத்தல்) முதலியவற்றுடன் பக்தித் தொண்டு தொடங்குகின்றது. ஒரு மனிதன் உறங்கிக் கொண்டிருக்கையில், அவனை சப்தத்தினால் எழுப்ப முடியும்; எனவே, தூய வைஷ்ணவரால் உச்சரிக்கப்பட்ட ஹரே கிருஷ்ண மந்திரத்தினைக் கேட்பதற்கான வாய்ப்பு ஒவ்வொரு கட்டுண்ட ஆத்மாவிற்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு ஹரே கிருஷ்ண மந்திரத்தைக் கேட்பவன் ஆன்மீக உணர்வு அல்லது கிருஷ்ண உணர்விற்கு எழுப்பப்படுகிறான். இவ்விதமாக ஒருவனின் மனம் படிப்படியாகத் தூய்மையடைகிறது என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறியுள்ளார் (சேதோ-த ர்பண-மார்ஜனம்). மனம் தூய்மையடையும்போது புலன்களும் தூய்மையடைகின்றன. புலன்களைப் புலனுகர்ச்சியில் உபயோகிப்பதற்கு பதிலாக, கிருஷ்ண உணர்வை எழுப்பிய பக்தன் தனது புலன்களை பகவானின் தெய்வீக அன்புத் தொண்டில் ஈடுபடுத்துகிறான். உறங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ண பிரேமையை எழுப்புவதற்கு இதுவே வழிமுறையாகும். ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் . மத்திய லீலை 22.105 / பொருளுரை முக்கிய...

ஸ வை மண: க்ருஷ்ண - பதார விந்தயோ- னதை பகவானின் தாமரைப் பாதங்களில் ஈடுபடுத்துவதே மானிடர்களின் கடமையாகும்

  யாவல் லிங்கபன்விதேோ ஹி ஆத்மா தாவத் கர்ம - நிபந்தனம் தேதா விபர்யய: க்லே சோ மாயா - யோகோ ‘நுவர்த்ததே மொழிபெயர்ப்பு ஆத்மாவானவன் மனம், புத்தி, பொய், அகங்காரம் ஆகியவை அடங்கிய சூட்சும உடலால் மூடப்பட்டிருக்கும் வரை, அவனது கர்ம பலன்களால் அவன் பந்திக்கப்படுகிறான். இந்த மறைப்பின் காரணத்தால் ஆத்மா ஜட சக்தியுடன் சம்பந்தப்படுவதால், அதற்கேற்ப அவன் தொடர்ந்து பிறவிக்குப்பின் பிறவியாக பௌதிக சூழ்நிலைகளையும் எதிரிடையான சூழ்நிலைகளையும் அனுபவிக்க வேண்டும். பொருளுரை ஜீவராசியானவன் மனம், புத்தி, பொய் அகங்காரம் ஆகியவை அடங்கிய சூட்சும உடலால் பந்திக்கப்படுகிறான். ஆகவே மரணத்தருவாயில் ஏற்படும் மனநிலையே அடுத்த உடலுக்குக் காரணமாகிறது. பகவத் கீதை (8.6) உறுதி செய்வதுபோல், யம் யம் வாபி ஸ்மரன் பாவம் த்யஜதி அந்தே கலேவரம். மரணத்தருவாயில் ஆத்மா வேறொரு வகையான உடலுக்கு மாறுவதற்கு மனமே அடிப்படைத் தத்துவமாக அமைகிறது. ஒரு ஜீவராசி தன் மனதின் உத்தரவை எதிர்த்து, மனதை பகவானின் அன்புத் தொண்டில் ஈடுபடுத்துவானாயின், அவனுடைய மனதால் அவனை இழிவு படுத்தமுடியாது. எனவே மனதை பகவானின் தாமரைப் பாதங்களில் ஈடுபடுத்துவதே மானிடர்களின் கடமையாகு...

ஒரு புலி ஒரு மிருகத்தைத் தாக்கிக் கொன்று தின்றாலும் அது பாவமாகாது, ஆனால் . . .

  யஸ் த்வ இஹ வை பூதானாம் ஈஸ்வரோபகல்பித வ்ருத்தினாம் அவிவிக்த - பரவ்யதானாம் ஸ்வயம் புருஷோபகல்பித - வ்ருதத்தில் லிலிக் பர - வ்யதோ - வ்யதாம் ஆசரதி ஸ பரத்ராந்தகூபே தத் - அபி ராஹேண நிபததி தத்ர ஹாஸௌ தைர் ஜந்துபி பஸு - ம்ருக - பக்ஷி - ஸரீஸ்ருபைர் மஸக யூகா மத்குண மக்ஷிகாதிபிர் யே கே சாபித்ருக்தாஸ் தை : ஸர்வதோ ( அ ) பித்ருஹ்யமாணஸ் தமஸி விஹத - நித்ரா நிர்வ்ருதிர் அலப்தாவஸ்தான : பரிக்ராமதி யதா ருஸரீரே ஜீவ : மொழிபெயர்ப்பு பரம புருஷ பகவானின் ஏற்பாட்டின் பேரிலேயே இழிந்த உயிர்களான மூட்டைப் பூச்சிகளும் , கொசுக்களும் மனிதன் மற்றும் விலங்கின் இரத்தத்தினை உறிஞ்சி வாழ்கின்றன . இவ்விழிந்த பூச்சிகளுக்குத் தாம் மனிதனைக் கடிப்பதினால் அவன் வேதனை அடைகிறான் என்பது தெரியாது . ஆயினும் முதல்தர மனிதர்களான அந்தணர்கள் , சத்திரியர்கள் , வைசியர்கள் அறிவு வளர்ச்சி பெற்றவர்கள் அதனால் கொல்லப்படுவது எத்துணை துன்பமானது என்பதை அவர்கள் நன்கறிவர் . பகுத்தறிவுள்ள ஒரு மனிதன் எந்தவித பேதமுற்ற இழிந்த ஜந்துக்களைக் கொன்றாலோ அல்லது ...