Skip to main content

Posts

(ஞானினஸ் தத்வ-தர்சின: தத்துவதர்சிகளால் எழுதப்பட்ட நூல்களை மட்டுமே நாம் தேர்ந்தெடுத்துக் படிக்க வேண்டும்.

  அறிஞரென்ற பட்டம் பெற்றிருப்பதால், கல்வியில் முன்னேறியிருப்பதாக காட்டிக் கொள்ளும் நவீன இராட்சஸர்கள், பகவான் ராமச்சந்திரர் பரமபுருஷரல்ல என்றும், அவர் ஒரு சாதாரண மனிதர்தான் என்றும் நிரூபிக்க முயன்றுள்ளனர். ஆனால் கற்றுணர்ந்தவர்களும், ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவர்களும் இத்தகைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; பகவான் ராமச்சந்திரரையும், அவரது செயல்களையும், பரமசத்தியத்தை அறிந்த தத்துவ தரிசிகளால் அளிக்கப்படும் விளக்கங்களுக்கேற்ப மட்டுமே அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். பகவத்கீதையில் (4.34) பகவான் கூறுகிறார்: தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஸ்னேன ஸேவயா உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வ-தர்சின: “ஆன்மீக குருவை அடைந்து உண்மையை அறிய முயற்சிசெய். அவருக்குத் தொண்டு செய்து, அவரிடம் அடக்கமாக கேள்வி கேள். தன்னுணர்வு பெற்ற ஆத்மாவான அவர் உண்மையைக் கண்டவராதலால், அவரால் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.” ஒருவர் பரம சத்தியத்தைப் பூரணமாக அறிந்த ஒரு தத்துவ தரிசியாக இருந்தால் தான் அவரால் பரமபுருஷரைப் பற்றிய செயல்களை விவரிக்க இயலும். எனவே பல இராமாயண உரைகள் இருந்த போதிலும், அவற்றில் சில அதிகாரப்பூர்வமானவை அ...

ஏகபத்தினி விரதம்

  ஸ்ரீராமன் கடைப்பிடித்த ஏகபத்தினி விரதமும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஜானகி தேவியைத் தவிர வேறு ஒரு மங்கையை மணக்க இராமபிரான் ஒரு போதும் கனவில் கூட நினைத்ததில்லை. சீதாதேவியை வனவாஸத்திற்கு அனுப்பிய பிறகு, வேள்வி செய்ய மனைவி அருகில் இருக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டபோதுகூட சீதா தேவியைப்போல் பொன்னாலான ஒரு உருவை அமைக்கச் செய்து வேள்வியைச் செய்து முடித்தார். அவர் விரும்பியிருந்தால் அந்தச் சமயத்திலாவது வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் உலகத்தில் அவருக்கு இழிசொல் எதுவும் ஏற்பட்டிருக்காது. ஆனால், பகவான் ஸ்ரீராமன் சிறந்த நடத்தைக்கு இலக்கணமாகவும், மாமனிதராகவும் திகழ்ந்தார். பதிவ்ரதா தர்மம் (கற்புநெறி) பெண்களுக்கு விதிக்கப்பட்டிருப்பதுபோல், ஆண்களுக்கும் ஒரு மனைவிக்கொள்கை மிகவும் அவசியம் என்பதைத் தாமே கடைப்பிடித்து உலகிற்குக் காட்டவேண்டி யிருந்தது. ஆண் - பெண் உறவு வெறும் இன்பம் துய்ப்பதற்காக அமைந்தது அன்று. ஆனால், அறவழிப்படி இருவரும் நடப்பதற்காக ஏற்பட்டது அது. அன்னை சீதையை அரக்கன் கவர்ந்து சென்றபின், விவரிக்கும் நிகழ்ச்சிகளிலிருந்து சீதாத...

பகவான் ராமச்சந்திரர் சிவதனுசை உடைத்து சீதையின் கரத்தை பற்றினார்

 

ஸ்ரீ ராமாவதாரம்

 

தந்தையிடம் பக்தி (ஆதர்சபுருஷர் இராமபிரான்)

  தந்தையிடம் பக்தி 🍁🍁🍁🍁🍁 பகவான் ஶ்ரீ ராமர் தனது தந்தையிடம் கொண்டிருந்த பக்தியும் மிகமிக அற்புதமானது. தந்தையின் ஆணையை நிறைவேற்றுவதில் ஸ்ரீராமரது மனத்தில் எவ்வளவு உற்சாகமும், துணிவும், திடமான உறுதியும் இருந்தது என்ற விஷயம் வால்மீகி ராமாயணத்தைப் படிப்பவர்களுக்குப் புலப்படாமல் போகாது! தாயான கைகேயியிடம் ஸ்ரீராமன் சொல்வதை வால்மீகி கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.  அஹம் ஹி வசநாத்  ராஜ்ஞ: பதேயமபி பாவகே  பக்ஷயேயம் விஷம் தீஷ்ணம் பதேயமபி சார்ணவே | (வால்மீகி இராமாயணம் 2/18/28-29) ந ஹ்யதோ தர்மசரணம் கிஞ்சித ஸ்தி மஹத்தரம் யதா பிதரி ஸுஸ்ரூஷா தஸ்ய வா வசநக்ரியா (வால்மீகி இராமாயணம் 2/19/22) 'மன்னர் சொன்னால் நான் நெருப்பில் குதிப்பேன். கொடிய நஞ்சையும் உண்பேன். கடலிலும் விழுவேன். ஏனென்றால் தந்தைக்குப் பணிவிடை செய்வதையும், அவருடைய கட்டளையை நிறைவேற்றுவதையும் விடப் பெரிய தர்மம் உலகில் வேறு ஒன்றுமில்லை' என மொழிகிறார். அங்கே இதேபோன்ற மொழிகள் பல காணப்படுகின்றன. பிறகு அன்னை கௌசல்யா தேவியிடம் அவர் நாஸ்தி பக்தி: பிதுர்வாக்யம் ஸமதிக்ரமிதும் மம  ப்ரஸாதயே த்வாம் ஸிரஸா கந்துமிச்சாம்யஹம் வநம் (...

தாயிடம் பக்தி (ஆதர்சபுருஷர் இராமபிரான்)

தாயிடம் பக்தி 🍁🍁🍁🍁 இராமபிரானுக்குத் தம்முடைய தாயிடம் இருந்த பக்தி சிறந்த ஆதர்சனமானது, (பிறருக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது). அதை முழுவதும் விவரிப்பது என்பது இயலாது. எனவே இங்கே சுருக்கமாக மட்டுமே எழுதப்படுகிறது. அன்னை கைகேயி தம்மிடம் தயையில்லாமல் நடந்துகொண்ட போதிலும், அவரிடத்தில் ஸ்ரீராமன் நடந்து கொண்ட விதம் எப்போதுமே பக்தியும். மரியாதையும் நிரம்பியதாக இருந்தது. அன்னை கௌசல்யாவின் அரண்மனையிலிருந்து திரும்பி வருகின்றபோது அவர் லக்ஷ்மணனிடம், பின்வருமாறு சொல்கிறார்; யஸ்யா மதபிஷேகார்தே மாநஸம் பரிதப்யதே மாதா ந: ஸா யதா ந ஸ்யாத் ஸவிங்கா ததா குரு  தஸ்யா: ஸங்காமயம் துகம் முஹூர்தமபி நோத்ஸஹே  மநஸி ப்ரதிஸஞ்ஜாதம் ஸௌமித்ரேக்ஷஹமுபேக்ஷிதும் ந புத்தி பூர்வம் நாபுத்தம் ஸ்மராமீஹ கதாசந மாத்ரூணாம் வா பிதுர்வாஹம் க்ருதமல்பம் சவிப்ரியம் (வால்மீகி இராமாயணம் 2/22/6-8) "லக்ஷ்மணா! என்னுடைய முடிசூடுதலின் காரணமாக யாருடைய மனம் கொதிக்கின்றதோ, அந்த என் தாய்க்கு என் மேல் ஒரு சந்தேகமும் ஏற்படாதபடி நீ நடந்து கொள். சந்தேகத்தின் காரணமாக அவர் உள்ளத்தில் எழுகின்ற துக்கத்தை நான் ஒரு முகூர்த்தம் கூடத் தாளமுடியாது...

ஆதர்சபுருஷர் இராமபிரான்

ஆதர்சபுருஷர் இராமபிரான்  (பிறருக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் ஆதர்ச குணம்) 🍁🍁🍁🍁🍁🍁🍁 ரகுகுலத்திற்கு அணிகலமாக விளங்குபவரும் சிறந்த நடத்தைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவரின் குணங்கள் மற்றும் பண்புகளின் எல்லையைக் காக்கும் பகவான் ஸ்ரீராமசந்திரனுக்கு ஒப்பானவராக வேறு ஒருவர் இதுவரை பிறந்ததில்லை என்று சொல்வது மிகையாகாது. 'இராமபிரான் பூரண பிரம்மமான பரமாத்மாவே. அவர் தர்மத்தைக் காக்கவும், உலகை உய்விக்கவுமே அவதரித்தார் எனினும் நன்னடத்தை கொண்ட ஓர் ஆதர்ச மனிதராகவே எல்லோரிடமும் நடந்து கொண்டார். ஆதர்சலீலைகள் கொண்ட அவருடைய சரித்திரத்தைக் கேட்பதாலும், படிப்பதாலும், நினைப்பதாலும் இதயத்தில் மிகவும் தூய உணர்வு அலைகள் கிளர்ந்தெழுகின்றன. மனம் களிக்கிறது. அவருடைய ஒவ்வொரு செயலும் பிறர் பின்பற்றி நடக்கத்தக்கதாக இருந்தது. அவர் நற்குணங்களின் பெருங்கடல். படைக்கலங்களைப் பயன்படுத்தும் கலையில் அவர் உண்மை நல்லெண்ணம், தயவு,பொறுமை, மென்மை, வீரம், ஆழம், தேர்ச்சி, பராக்கிரமம், அச்சமின்மை, பணிவு, அமைதி, சகிப்புத்தன்மை, மனஅமைதி, அடக்கம், பற்றின்மை, நீதி காக்கும் தன்மை, திறமை, அன்பு, தியாகம், மரியாதை காத்தல், பிறன...

குற்றம் காணும் இயல்பு

 

குற்றம் காணும் இயல்பு

 

கிருஷ்ண பக்தி இயக்கம் ஏன் கிருஷ்ண வழிபாட்டினை மட்டும் பரிந்துரைக்கிறது

  சில நேரங்களில் இக்கிருஷ்ண பக்தி இயக்கம் பிற தேவ வழிபாட்டினை விலக்கி விட்டு கிருஷ்ண வழிபாட்டினை மட்டும் ஏன் பரிந்துரைக்கிறது என்று சிலர் கேட்கின்றனர் . உரிய பதில் இச்சுலோகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது . மரத்தில் அடிவேரில் நீர் வார்ப்பது பற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும் சான்று மிகவும் பொருத்தமுடையதாகும் . பகவத் கீதையில் (15.1) “ ஊர்த்வ மூலம் அத : ஸாகம் ” அதாவது இப்பிரபஞ்சம் கீழ்நோக்கி விரிவடைந்திருக்கிறது . அதன் வேராக மேலேயுள்ள முழுமுதற் கடவுள் விளங்குகிறார் என்று கூறப்பட்டிருக்கிறது . மேலும் பகவான் பகவத் கீதையில் (10.8) உறுதி செய்கிறார் ,” அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ :” என்று . இதன் பொருள் “ நானே அனைத்து ஆன்மீக மற்றும் பரு உலகங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்றேன் ” என்பதாகும் . கிருஷ்ணரே அனைத்திற்கும் ஆணி வேராக இருக்கின்றார் ; அதனால் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வது ( கிருஷ்ண ஸேவா ) என்பதற்குப் பொருள் அனைத்துத் தேவர்களுக்கும் தாமாகவே தொண்டு செய்து போன்றதாகும் . சில நேரம் கர்மம் மற்றும் ஞானத்தினை வெ...