துர்கா தேவி, ஜட மூலகங்களாலான ஜடவுலகத்தினை மேற்பார்வையிடும் தேவதையாவாள். தேவர்கள், பௌதிகச் செயல்களின் துறைகளை நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ள வெவ்வேறு நிர்வாகிகளே ஆவர், அவர்களும் அந்த ஜட சக்தியின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளனர். ஆனால், கிருஷ்ணருடைய அந்தரங்க சக்திகள் இந்த பெளதிகப் படைப்புடன் தொடர்புகொள்வதில்லை. ஆன்மீக உலகமும் எல்லா ஆன்மீகச் செயல்களும் அந்தரங்கமான ஆன்மீக சக்தியின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளன. அந்தச் செயல்கள் யோகமாயை எனப்படும் ஆன்மீக சக்தியால் நிறைவேற்றப்படுகின்றன. யோகமாயை என்பது பரம புருஷ பகவானின் ஆன்மீக அல்லது அந்தரங்க சக்தியாகும். ஆன்மீக உலகத்திற்கு ஏற்றம் பெற்று பகவானின் தொண்டில் ஈடுபட விரும்புபவர்கள் யோகமாயையின் கட்டுப்பாட்டின் கீழ் ஆன்மீகப் பக்குவத்தினை அடைகின்றனர். பௌதிகத்தில் உயர்வு பெற விருப்பம் கொண்டவர்கள் புலனுகர்ச்சியை அதிகரிப்பதற்கான சமயச் சடங்குகளிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஈடுபடுகின்றனர். அவர்கள் இறுதியில் பகவானின் அருவ தோற்றத்தினுள் ஐக்கியமாக முயல்கின்றனர். அத்தகு மக்கள் பொதுவாக அருவவாதிகளாக மாறுகின்றனர். அவர்கள் சிவபெருமான் அல்லது துர்கையை வழி...