Skip to main content

Posts

ஜெயா ஏகாதசி / பைமி ஏகாதசி

  ஜெயா ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 மாசி மாத வளர்ப்பிறையில் (ஜனவரி/ பிப்ரவரி) தோன்றக்கூடிய ஜெயா ஏகாதசி அல்லது பைமி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கு இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.  ஒரு முறை யுதிஸ்டிரர், பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். ஓ! பகவான் கிருஷ்ணரே, ஓ! முழுமுதற் கடவுளே, ஓ! ஜகத்தின் நாதரே, கிருஷ்ணரே, வியர்வையில் தோன்றுவன, விதைகளில் தோன்றுவன, முட்டைகளில் தோன்றுவன, கருவில் தோன்றுவன போன்ற நான்கு விதமான ஜீவராசிகளின் மூல காரணம் நீரே. அனைத்தையும் சிருஷ்டித்து, காத்து பிறகு அழிப்பவரும் நீரே. மாசி மாத வளர்பிறையில் (ஜனவரி / பிப்ரவரி) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெருமைகளைப் பற்றியும், அதனை அனுஷ்டிக்கும் வழிமுறையைப் பற்றியும் மற்றும் இந்த மங்களகரமான நாளில் வழிபடத்தக்க தெய்வத்தை பற்றியும் தயவு செய்து எனக்கு விவரமாக கூறுங்கள். பகவான் கிருஷ்ணர், கூறினார் ஓ! மன்னர்களில் சிறந்தோனே, யுதிஸ்ஸ்டிரா, மாசி மாத வளர்பிறையில் தோனறக்கூடிய ஏகாதசி ஜெயா ஏகாதசி என கொண்டாடப்படுகிறது. இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் அனைத்து ...

பிரகலாத மகாராஜா

பிரகலாத மகாராஜா வழங்கியவர்கள் - சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁 மிகவும் கடினமான சூழ்நிலைகளுக்கு நடுவில், மிக வலிமையான அசுர சக்திகளுக்கு மத்தியிலும் பகவான் மீதுள்ள பக்தியை பிறழாது கடைப்பிடித்த ஒரு சிறுவனாக பிரகலாதர் என்றென்றும் அனைவரது மனதிலும் நினைவு கூறப்படுவார். இரண்யகசிபுவின் முதல் மகனான பிரகலாதர் தனது தாயின் கர்ப்பத்தில் இருந்த பொழுது தேவர்களின் அரசனான இந்திரன் கயாதுவைக் கைது செய்து அவரது கர்ப்பத்தில் இருந்த பிரகலாதரை ஹிரண்யகஷிபுவின் அடுத்த அசுர குல மன்னனாக வரக்கூடும் என்று எண்ணி அவரைக் கொல்ல முடிவு செய்தான். அந்த சமயத்தில் அங்கு தோன்றிய நாரதமுனிவர் கயாதுவை விடுதலை செய்யும்படி கூறினார். மேலும் அவளது கர்ப்பத்தில் இருப்பது பகவான் கிருஷ்ணரின் மாபெரும் பக்தர் என்றும் கூறினார்.  பின் நாரதமுனிவர் கயாதுவை தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று பக்தி சேவையைக் குறித்து போதித்தார். இவ்வாறாக அவளின் கர்ப்பத்தில் கருவாக இருந்த பிரகலாதர் , நாரதமுனிவர் போதித்த அனைத்து விஷயங்களையும் (கிருஷ்ணரைப் பற்றிய பூரண ஞானத்தை) மிகக் கவனமாக உள்வாங்கி படிப்படியாக பகவானின் தூய பக்தராக உருவானார். பிரகலாதர் தை...

அத்வைத ஆச்சார்யரும் ஹரிதாஸ தாகூரும்

  அத்வைத ஆச்சார்யரும் ஹரிதாஸ தாகூரும் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவானின் பக்தன் அல்லது ஒரு வைணவன் பகவானுக்கு அளிக்காமல் எதையுமே தொடுவதில்லை. ஒரு வைணவன் தனது செயல்கள் அனைத்தின் பலன்களையும் பகவானுக்கே அர்ப்பணித்திருப்பதினால் அவன் பகவானுக்கு முதலில் படைக்கப்படாத எந்தவொரு உணவையும் சுவைப்பதில்லை. பகவானும் கூடத் தனக்கு அர்ப்பணிக்கப்படும் நிவேதனங்களை வைணவனின் வாய்க்கு அளித்து சுவைத்து மகிழ்கிறார். இச்சுலோகத்திலிருந்து பகவான் வேள்விக் குண்டத்தின் தீயின் மூலமும் அந்தணனின் வாயின் மூலமும் உண்கிறார் என்று தெளிவாகிறது. பல்வேறு விதமானப் பொருட்கள் தானியங்கள், நெய் போன்றவை பகவானின் திருப்திக்காக வேள்வித் தீயில் அர்ப்பணிக்ப்படுகின்றன. பகவான் வேள்வியின் நிவேதனங்களை அந்தணர்களிடமிருந்தும் பக்தர்களிடமிருந்தும் ஏற்றுக் கொள்கிறார். சில இடங்களில் குறிப்பிடப்ட்டிருப்பது போல் அந்தணர்க்கும் வைணவர்க்கும் உண்பதற்காக வழங்கப்படும் எதையும் பகவானும் கூட ஏற்றுக் கொள்கிறார். இங்கே அவர் அந்தணர் மற்றும் வைணவர்களின் வாய்களுக்கு அர்ப்பணிக்கப்படுபவற்றையே மிகுந்த சுவையுடன் ஏற்றுக் கொள்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்...

ஶ்ரீல அத்வைத ஆச்சாரியர்

 

ஶ்ரீல அத்வைத ஆச்சாரியர்

 

ஶ்ரீல அத்வைத ஆச்சாரியர்

 

ஶ்ரீல அத்வைத ஆச்சாரியர்