சில நேரங்களில் இக்கிருஷ்ண பக்தி இயக்கம் பிற தேவ வழிபாட்டினை விலக்கி விட்டு கிருஷ்ண வழிபாட்டினை மட்டும் ஏன் பரிந்துரைக்கிறது என்று சிலர் கேட்கின்றனர் . உரிய பதில் இச்சுலோகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது . மரத்தில் அடிவேரில் நீர் வார்ப்பது பற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும் சான்று மிகவும் பொருத்தமுடையதாகும் . பகவத் கீதையில் (15.1) “ ஊர்த்வ மூலம் அத : ஸாகம் ” அதாவது இப்பிரபஞ்சம் கீழ்நோக்கி விரிவடைந்திருக்கிறது . அதன் வேராக மேலேயுள்ள முழுமுதற் கடவுள் விளங்குகிறார் என்று கூறப்பட்டிருக்கிறது . மேலும் பகவான் பகவத் கீதையில் (10.8) உறுதி செய்கிறார் ,” அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ :” என்று . இதன் பொருள் “ நானே அனைத்து ஆன்மீக மற்றும் பரு உலகங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்றேன் ” என்பதாகும் . கிருஷ்ணரே அனைத்திற்கும் ஆணி வேராக இருக்கின்றார் ; அதனால் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வது ( கிருஷ்ண ஸேவா ) என்பதற்குப் பொருள் அனைத்துத் தேவர்களுக்கும் தாமாகவே தொண்டு செய்து போன்றதாகும் . சில நேரம் கர்மம் மற்றும் ஞானத்தினை வெ...