Skip to main content

Posts

மனுஷ்ய ரூபத்தில் வைகுண்டநாதர்

  யன் மர்த்ய-லீலௌபயிகம் ஸ்வ-யோக-   மாயா-பலம் தர்சயதா க்ருஹீதம்   விஸ்மாபனம் ஸ்வஸ்ய ச ஸௌபகர்த்தே:   பரம் பதம் பூஷண-பூஷணாங்கம் மொழிபெயர்ப்பு பகவான் தமது அந்தரங்கச் சக்தியான யோகமாயையினால் இந்த ஜடவுலகில் தோன்றுகிறார். அவர் தமது லீலைகளுக்குப் பொருத்தமான நித்திய ரூபத்துடன் வருகிறார். வைகுண்ட நாதராகத் தமது நித்திய ரூபத்திலுள்ள பகவான் உட்பட, தங்களுடைய சொந்த ஐசுவரியத்தில் செருக்குடையவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த லீலைகள் அற்புதமானவையாக இருந்தன. இவ்வாறாக, அவரது (ஸ்ரீ கிருஷ்ணரின்) உன்னதமான உடல் அணிகலன்களுக்கெல்லாம் அணிகலனாக விளங்குகிறது. பொருளுரை வேத மந்திரங்களில் ( நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் ) உறுதி செய்யப்பட்டுள்ளதுபோல், எல்லா பிரபஞ்சங்களிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் விட பரமபுருஷர் தலைசிறந்தவராவார். அவர் அனைத்து ஜீவராசிகளுக்கும் தலைமையானவர்; செல்வம், பலம், புகழ், அழகு, அறிவு மற்றும் துறவு ஆகிய ஐசுவரியங்களில் அவருக்கு இணையானவர்களோ அல்லது அவரை விட உயர்ந்தவர்களோ ஒருவரும் இல்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பிரபஞ்சத்தில் அவதரித்திருந்த பொழுது, ஜடவுலக லீலைகளுக்குச் சற்றே ப...

ஆன்மீகப் பயணம்: கோபத்தால் வீழ்ச்சி அடைவதைத் தடுப்பது எப்படி?

  க்ரோதா த்  ப வதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதி–விப் ரம: ஸ்ம்ருதி–ப் ரம்ஷா த்  பு த் தி –நாஷோ  பு த் தி –நாஷா த் ப்ரணஷ் யதி கோபத்திலிருந்து பூரண மயக்கமும், மயக்கத்தினால் நினைவு நிலை இழப்பும் ஏற்படுகின்றன. நினைவு குழம்புவதால் அறிவு இழக்கப்படுகிறது, அறிவு இழக்கப்பட்டவுடன், ஒருவன் மீண்டும் ஜட வாழ்க்கையில் வீழ்கிறான். பொருளுரை:  ஸ்ரீல ரூப கோஸ்வாமி பின்வருமாறு நமக்கு வழிகாட்டி யுள்ளார்: ப்ராபஞ்சிகதயா பு த் த் யா ஹரி–ஸம்ப ந்தி –வஸ்துன: முமுக்ஷுபி:  பரித்யாகோ  வைராக் யம் ப ல்கு  கத் யதே (பக்தி ரஸாம்ருத சிந்து 1.2.258) கிருஷ்ண உணர்வை விருத்தி செய்தவன், அனைத்துப் பொருள்களையும் இறைவனின் சேவையில் உபயோகப்படுத்த முடியும் என்பதை அறிவான். கிருஷ்ண உணர்வைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள், ஜடப் பொருள்களை தவிர்ப்பதற்கு செயற்கையாக முயற்சி செய்கின்றனர்; அதன் விளைவாக, பௌதிக பந்தத்திலிருந்து அவர்கள் முக்தி பெற விரும்பினாலும், துறவின் பக்குவநிலையை அவர்கள் அடையவில்லை. அதே சமயம், கிருஷ்ண உணர்விலுள்ள பக்தன், எல்லாப் பொருள்களையும் இறைவனின் தொண்டில் எப்படி உபயோகப்படுத்துவது என...

கோபம்

  த்ரி–வித ம் நரகஸ்யேத ம் த் வாரம் நாஷ னம் ஆத்மன: காம: க்ரோத ஸ் ததா  லோப ஸ் தஸ்மாத்  ஏதத் த்ரயம் த்யஜேத் காமம், கோபம், பேராசை ஆகியவை நரகத்திற்குக் கொண்டுச் செல்லும் மூன்று கதவுகளாகும். இவை ஆத்மாவை அழிவுப் பாதையில் நடத்துவதால், ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் இவற்றைத் துறக்க வேண்டும். பொருளுரை: அசுரத்தனமான வாழ்வின் ஆரம்பம் இங்கே விவரிக்கப் பட்டுள்ளது. தனது காமத்தைத் திருப்தி செய்ய ஒருவன் முயல்கின்றான், அவனால் அது முடியாதபோது, கோபமும் பேராசையும் எழுகின்றன. அசுரத்தனமான உயிரினங்களுக்கு வீழ்ச்சியடைய விரும்பாத அறிவுள்ள மனிதன், இந்த மூன்று விரோதிகளையும் துறப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும், இவை இந்த பௌதிக பந்தத்திலிருந்து முக்தி பெறுவதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லாதபடி ஆத்மாவைக் கொல்லக்கூடியவை. நரகத்திற்கான மூன்று வாசல்கள் (த்ரி-விதம் நரகஸ்ய த்வாரம்) பகவத் கீதை 16.21-இன் படி, ஒரு மனிதனின் ஆத்மாவை அழிவுப் பாதையில் நடத்தி, நரகத்திற்கு இட்டுச் செல்லும் மூன்று முக்கிய வாயில்கள்: 🔥 காமம்: அத்தியாவசியமற்ற ஆசைகள் மற்றும் புலனின்பங்களை திருப்தி செய்ய ஏங்குவது. 😠 க்ரோதம் : காமம் நிறைவேறா...

பாரத வர்ஷம் - புண்ணிய பூமி

       பாரத - வர்ஷம் என்று அழைக்கப்படும் இந்தியாவில், பக்தித்தொண்டு செய்வதற்கு ஏராளமான வசதிகள் இருக்கின்றன. பாரத - வர்ஷத்தில் அனைத்து ஆச்சாரியர்களும் தங்கள் அனுபவங்களை அள்ளி வழங்கியிருக்கின்றனர். ஆன்மீக வாழ்வில் எவ்வாறு வளர்ச்சி பெறுவது, பகவானது பக்தித் தொண்டில் எவ்வாறு நிலைபெறுவது என்பதை பாரத - வர்ஷத்தில் உள்ள மக்களுக்கு உபதேசிப்பதற்காக ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தனிப்பட்ட முறையில் அங்கு எழுந்தருளினார். பக்தித் தொண்டின் வழிமுறைகளை மிகவும் எளிதில் அறிந்து கொள்வதற்கும், அதனை மேற்கொள்வதின் மூலம் வாழ்க்கையை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கும் பாரத - வர்ஷம் விசேஷத் தன்மை வாய்ந்த நிலமாகும். ஒருவன் பக்தித் தொண்டில் தனது வாழ்க்கையை வெற்றிகரமாக்கிக் கொண்டு, பின்னர் உலகின் பிற பகுதிகளுக்கும் பக்தித் தொண்டினை உபதேசிப்பானென்றால், உலகம் உண்மையில் நலம்பெறும். இவ்வுண்மைகள் சைதன்ய சரிதாம்ருதத்தில் (ஆதி 9.41) மேலும் விளக்கப்படுகின்றன: பாரத - பூமிதே ஹைல மனுஷ்ய - ஜன்ம யார ஜன்ம ஸார்தக கரி’ கர பர - உபகார      “இந்திய (பாரத - வர்ஷம்) நிலப்பகுதியில் மனிதனாகப் பிறந்திருக்கும் ஒருவன் தனத...

“கிருஷ்ணனை நினைக்கும் இரு வழிகள் — பக்தியின் வழி, பகையின் வழி.”

  பகவத்கீதையில் (4.10) பகவான் கூறுகிறார்: வீத–ராக–பய–க்ரோதா மன் மயா மாம் உபாஷ்ரிதா: பஹவோ க்ஞான–தபஸா பூதா மத்–பாவம் ஆகதா: “பற்று, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, என்னில் முழுமையாக ஆழ்ந்து, என்னிடம் சரணடைந்து, என்னைப் பற்றிய அறிவால் பலர் இதற்கு முன்பு தூய்மையடைந்துள்ளனர். இவ்விதமாக, அவர்களனைவரும் என்னிடம் உன்னத பிரேமையுடைவராயினர்.” இரு வழிகளில் கிருஷ்ணரை இடையறாது நினைக்க முடியும். ஒன்று, ஒரு பக்தனாக மற்றது, ஒரு பகைவனாக. ஒரு பக்தன் அவனுடைய அறிவினாலும், தவத்தினாலும், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டு ஒரு தூய பக்தனாகிறான். அவ்வாறே ஓர் எதிரியும் கிருஷ்ணரைப் பற்றிய பகை உணர்ச்சியுடன் நினைத்த போதிலும், அவரையே இடையறாது நினைத்துத் தூய்மையடைகிறான். இது பகவத் கீதையில் (9.30) பகவானால் பின்வருமாறு உறுதி செய்யப்படுகிறது: அபி சேத் சதுராசாரோ பஜந்தே மாம் அனன்ய - பாக் ஸாதுர் ஏவ ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ: “ஒருவன் மிகவும் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தாலும், அவன் பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பானாயின், அவனைப் புனிதமானவனாகவே கருத வேண்டும். ஏனெனில் அவன் தக்க முறையில் நிலைபெற்றுள்ளான...