Skip to main content

பலி மகாராஜன் பிரபஞ்சத்தை ஒப்படைத்தல்





 ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் எட்டாம் காண்டம்

 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 

பாகம் 6

 

பலி மகாராஜன் பிரபஞ்சத்தை ஒப்படைத்தல்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁



இந்த இருபதாம் அத்தியாயத்தின் சுருக்கம் பின்வருமாறு: பகவான் வாமனதேவர் தம்மை ஏமாற்றுகிறார் என்பதை அறிந்தும், பலி மகாராஜன் அனைத்தையும் அவருக்கு தானமாகக் கொடுத்து விடுகிறார். இவ்வாறாக பகவான் தமது உடலை விரிவடையச் செய்து பகவான் விஷ்ணுவாக ஒரு பிரம்மாண்டமான உருவத்தை ஏற்றார்.

சுக்ராசார்யரின் அறிவுரைகளைக் கேட்டபின், பலி மகாராஜன் சிந்தனையில் ஆழ்ந்தார். மதம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் புலன் இன்பம் ஆகிய கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பஸ்தனின் கடமை என்பதால், பிரம்மச்சாரிக்கு அளித்திருந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவது முறையல்ல என்று பலி மகாராஜன் நினைத்தார். ஒரு பிரம்மச்சாரியிடம் பொய் சொல்வதோ அல்லது அவருக்களித்த ஒரு வாக்குறுதியை மதிக்காமல் நடந்து கொள்வதோ ஒருபோதும் முறையல்ல. ஏனெனில் பொய் சொல்வது மிகப்பெரிய பாவமாகும். பொய் பேசும் பாவியொருவனின் பாரத்தை பூமித் தாயாலும் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், பொய் பேசுவதினால் ஏற்படும் பாவ விளைவுகளில் ஒருவன் அச்சம் கொள்ள வேண்டும். ஒரு பேரரசின் அல்லது சாம்ராஜ்யத்தின் பெருக்கம் தற்காலிகமானதே; அதனால் பாமர மக்களுக்கு நன்மை இல்லையெனில், அத்தகைய பெருக்கத்தில் மதிப்பில்லை. முற்காலத்தில், பேரரசர்களும் சக்கரவர்த்திகளும் தங்களது சாம்ராஜ்யங்களைப் பொது ஜனங்களின் நன்மையை கருத்திற் கொண்டு விரிவடையச் செய்தனர். உண்மையில், பொது மக்களின் நன்மைக்குரிய அத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்கும் வேளையில், முதல் தரமான மனிதர்கள் சிலசமயங்களில் தங்களது உயிரையும் கூட தியாகம் செய்துள்ளனர். பெருமை வாய்ந்த செயல்களைச் செய்துள்ள ஒருவர் ஒருபோதும் மடிவதில்லை. அவர் நிரந்தரமாக வாழ்கிறார் என கூறப்படுகிறது. ஆகவே, புகழே வாழ்வின் நோக்கமாக இருக்கவேண்டும். நற்புகழ் அடையும் பொருட்டு ஒருவர் மிகவும் ஏழ்மையானவராக ஆகிவிட நேர்ந்தாலும், அது ஓர் இழப்பல்ல. பிரம்மச்சாரியான இந்த வாமனதேவர் பகவான் விஷ்ணுவாகவே இருந்த போதிலும், தான் அளிக்கப் போகும் தானத்தை ஏற்றுக் கொண்டபின் தன்னை அவர் கைது செய்தாலும், அவரிடம் தான் பகைமை பாராட்டப் போவதில்லை என்று பலி மகாராஜன் எண்ணினார். இவ்வெல்லா விஷயங்களைப் பற்றியும் நன்கு யோசித்த பலி மகாராஜன் முடிவில் தம்மிடமிருந்த அனைத்தையும் தானமாகக் கொடுத்து விட்டார்.

பிறகு பகவான் வாமனதேவர் உடனே தம்மை விஸ்வரூபமாக விரிவடையச் செய்தார். பகவான் சர்வ வியாபகம் உள்ளவர் என்பதையும், அனைத்தும் அவரது உடலுக்குள் அடங்கியுள்ளன என்பதையும், வாமனதேவரின் கருணையின் மூலமாக பலி மகாராஜனால் காண முடிந்தது. அந்த ரூபத்தில் பகவான் விஷ்ணு ஒரு கிரீடம், மஞ்சள் நிற ஆடைகள், ஸ்ரீவத்ஸ அடையாளம், கௌஸ்துப மாலை, ஒரு மலர் மாலை ஆகியவற்றை அணிந்து, அவரது உடல் முழுவதும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவராக காணப்பட்டார். இந்த ரூபத்தில் தோன்றிய வாமனதேவரை பரம விஷ்ணுவாகவே பலி மகாராஜனால் காண முடிந்தது. பகவான் படிப்படியாக விரிவடைந்து உலகம் முழுவதையும் மூடிவிட்டார். அவரது உடலை விரிவடையச் செய்து ஆகாயம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டார். அவரது கரங்களைக் கொண்டு எல்லாத் திசைகளையும் அவர் நிரப்பி விட்டார். மேலும் அவரது இரண்டாவது அடியால் உயர்கிரக அமைப்பு முழுவதையும் ஆக்கிரமித்தார். ஆகவே மூன்றாவது அடியை வைப்பதற்குக் காலியான இடம் இருக்கவில்லை.


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8  / அத்தியாயம் 20 )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




 

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...