Skip to main content

பலி மகாராஜன் பகவானால் கைது செய்யப்படுதல்

 


 ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் எட்டாம் காண்டம்

 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 

பாகம் 7

 

பலி மகாராஜன் பகவானால் கைது செய்யப்படுதல்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


பலி மகாராஜனின் பெருமைகளை பகவான் விஷ்ணு விளம்பரப்படுத்த விரும்பினார். எனவே பகவானின் மூன்றாவது அடி சம்பந்தமாக, தமது வாக்கை நிறைவேற்றத் தவறிய பலி மகாராஜனை பகவான் எப்படி கைது செய்தார் என்பதை இவ்வத்தியாயம் விவரிக்கின்றது.

இரண்டாவது அடியினால் பரமபுருஷர் பிரபஞ்சத்தின் மிகவுயர்ந்த கிரகமாகிய பிரம்ம லோகத்தையும் அடைந்து, அதன் அழகைத் தமது பாத விரல்களின் நகங்களிலிருந்து தோன்றிய பிரகாசத்தினால் மங்கச் செய்துவிட்டார். இவ்வாறாக, மரீசியைப் போன்ற சிறந்த முனிவர்களாலும், எல்லா உயர் கிரகங்களின் அதிபதிகளாலும் சூழப்பட்டிருந்த பிரம்மதேவர், தமது பணிவான வணக்கங்களை பகவானுக்குச் சமர்ப்பித்து அவரை வழிபட்டார். பகவானின் பாதங்களை அவர்கள் கழுவி, எல்லாப் பொருட்களைக் கொண்டும் அவர்கள் பகவானை வழிபட்டனர். ரிக்ஷராஜனான ஜாம்பவான் பகவானுடைய பெருமைகளை ஒலிக்கச் செய்வதற்காக தனது தும் சங்கீதக் கருவியை இசைத்தார். பலி மகாராஜனின் உடைமைகள் அனைத்தும் பறித்துக் கொள்ளப்பட்டதைக் கண்ட அசுரர்கள் பெருங்கோபம் கொண்டனர். பலி மகாராஜன் அவர்களை பகவான் விஷ்ணுவிற்கு எதிராக ஆயுதங்களை எடுக்க வேண்டாமென எச்சரித்த போதிலும், அவர்கள் அதைச் செய்தனர். ஆயினும் அவர்களனைவரும் பகவான் விஷ்ணுவின் நித்திய சகாக்களால் தோற்கடிக்கப்பட்டனர். பிறகு பலி மகாராஜனின் உத்தரவுக்கிணங்க, அவர்களனைவரும் பிரபஞ்சத்தின் பாதாள லோகங்களுக்குச் சென்றனர். பகவான் விஷ்ணுவின் வாகனமாகிய கருடன் பகவானின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, உடனே பலி மகாராஜனை வருணதேவனின் கயிறுகளினால் சிறைப்படுத்தினார். நிராதரவான நிலைக்கு பலி மகாராஜன் தாழ்த்தப்பட்ட போது, அவரிடம் பகவான் விஷ்ணு மூன்றாவது அடிக்கான நிலம் எங்கே என்று கேட்டார். பலி மகாராஜனின் திடமான நோக்கத்தையும், நேர்மையையும் பகவான் விஷ்ணு பாராட்டினார். இதனால் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய பலி மகாராஜனுக்கு, சுவர்க்க லோகங்களை விட மிகச் சிறந்ததான, சுதள லோகமே பொருத்தமாக இருக்கும் என்று தீர்மானித்தார்.


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8  / அத்தியாயம் 21 )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




 

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...