ஆதாரம் :- ஶ்ரீம த் பாகவதம் எட்டாம் காண்டம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பாகம் 6 பலி மகாராஜன் பிரபஞ்சத்தை ஒப்படைத்தல் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இந்த இருபதாம் அத்தியாயத்தின் சுருக்கம் பின்வருமாறு: பகவான் வாமனதேவர் தம்மை ஏமாற்றுகிறார் என்பதை அறிந்தும், பலி மகாராஜன் அனைத்தையும் அவருக்கு தானமாகக் கொடுத்து விடுகிறார். இவ்வாறாக பகவான் தமது உடலை விரிவடையச் செய்து பகவான் விஷ்ணுவாக ஒரு பிரம்மாண்டமான உருவத்தை ஏற்றார். சுக்ராசார்யரின் அறிவுரைகளைக் கேட்டபின், பலி மகாராஜன் சிந்தனையில் ஆழ்ந்தார். மதம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் புலன் இன்பம் ஆகிய கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பஸ்தனின் கடமை என்பதால், பிரம்மச்சாரிக்கு அளித்திருந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவது முறையல்ல என்று பலி மகாராஜன் நினைத்தார். ஒரு பிரம்மச்சாரியிடம் பொய் சொல்வதோ அல்லது அவருக்களித்த ஒரு வாக்குறுதியை மதிக்காமல் நடந்து கொள்வதோ ஒருபோதும் முறையல்ல. ஏனெனில் பொய் சொல்வது மிகப்பெரிய பாவமாகும். பொய் பேசும் பாவியொருவனின் பாரத்தை பூமித் தாயாலும் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், பொய...