Skip to main content

பலமுறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பகவான் கிருஷ்ணரின் லீலைகள்


பலமுறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பகவான் கிருஷ்ணரின் லீலைகள்


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

விஸ்தரேணாத்மனோ யோகம்
விபூதிம் ச ஜனார்தன
பூய: கதய த்ருப்திர் ஹி
ஷ்ருண்வதோ நாஸ்தி மே (அ)ம்ருதம்

மொழிபெயர்ப்பு

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ஜனார்தனா உமது வைபவங்களின் யோக சக்தியைப் பற்றி தயவு செய்து விவரமாகக் கூறவும். உம்மைப் பற்றிக் கேட்பதில் நான் ஒருபோதும் நிறைவடைவதில்லை. ஏனெனில், உம்மைப் பற்றி அதிகமாகக் கேட்கும் போது, உமது வார்த்தைகளின் அமிர்தத்தை நான் அதிகமாக சுவைக்க விரும்புகிறேன்.

பொருளுரை

🌼🌼🌼🌼🌼🌼🌼

இதே போன்ற கருத்தினை நைமிசாரண்யத்தில் சௌனகர் தலைமையில் கூடிய ரிஷிகள் சூத கோஸ்வாமியிடம் கூறினர்:

வயம் து ந வித்ருப்யாம
உத்தம-ஷ் லோக-விக்ரமே
யச் ச்ருண்வதாம் ரஸ-க்ஞானம்
ஸ்வாது ஸ்வாது பதே பதே

"உத்தம சுலோகங்களால் புகழப்படும் கிருஷ்ணரது திவ்ய லீலைகளை ஒருவன் தொடர்ந்து கேட்டாலும், அவன் ஒருபோதும் நிறைவடைவதில்லை. கிருஷ்ணரது திவ்யமான உறவில் நுழைந்தவர்கள், அவரது லீலைகளைப் பற்றிய வர்ணனைகளின் ஒவ்வொரு பதத்தையும் அனுபவிக்கின்றனர்." (ஸ்ரீமத் பாகவதம் 1.1.19) இவ்வாறாக கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதில் அர்ஜுனன் ஆவலுடன் இருக்கின்றான், அதிலும் குறிப்பாக, எங்கும் நிறைந்த பரம புருஷராக அவர் எவ்வாறு இருக்கிறார் என்பதைப் பற்றி.

அமிர்தத்தைப் பொறுத்தவரை, கிருஷ்ணரைப் பற்றிய அனைத்து வர்ணனைகளும் அமிர்தம் போன்றதே. இந்த அமிர்தம் அனுபவத்தினால் உணரக்கூடியதாகும். நவீன நாவல்களும் கதைகளும் சரித்திரங்களும், இறைவனின் லீலைகளிலிருந்து வேறுபட்டவை ஜடவுலகக் கதைகளைக் கேட்பதில் ஒருவன் சோர்வடையலாம். ஆனால் கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதில் அவன் சோர்வடைவதே இல்லை. இந்த காரணத்தினால்தான் அகில உலகத்தின் வரலாறு முழுவதும் இறைவனின் அவதாரங்களைப் பற்றிய லீலைகளால் நிறைந்துள்ளது. பகவானின் பல்வேறு அவதார லீலைகளை எடுத்துரைக்கும் பழங்கால வரலாற்றுப் புத்தகங்களே புராணங்கள். இவ்விதமாக, படிக்கப்படும் விஷயம் மீண்டும் மீண்டும்படிக்கப்பட்டாலும் என்றும் புதிதாக விளங்குகின்றது.

( ஶ்ரீல பிரபுபாதர் / பொருளுரை / பகவத் கீதை உண்மையுருவில் / அத்தியாயம் 10.18)

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...