Skip to main content

தெய்வீக இலக்கியங்களும். பௌதீக இலக்கியங்களும்


தெய்வீக இலக்கியங்களும்.

பௌதீக இலக்கியங்களும்



இலக்கியங்கள் மீதான ஒரு சுவை பொது மக்களிடம் இயற்கையாகவே உள்ளது. அவர்கள் அறியாத விஷயத்தைப் பற்றிய எதையாவது கேட்கவும் அவற்றை வாங்கிப் படிக்கவும் விரும்புகின்றனர். ஆனால் ஜட புலன்களின் திருப்திக்குரிய விஷயங்களைக் கொண்ட மட்டமான இலக்கியங்களால் அவர்களது சுவை தவறாக பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய இலக்கியங்கள் வெவ்வேறு வகையான இகலோக கவிதைகளையும், கற்பனையான தத்துவங்களையும் கொண்டுள்ளன. மாயையின் ஆதிக்கத்திலுள்ள இவை புலன் இன்பத்தில்தான் முடிவடைகின்றன. இந்த நூல்கள் உண்மையில் உபயோகமற்றவை என்றாலும், புத்தியில் தாழ்ந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவை பலவிதமாக அழகுபடுத்தப்படுகின்றன. இவ்வாறு கவரப்பட்ட ஜீவராசிகள் ஜட பந்தத்தில் இன்னும் அதிகமாக, சிக்கிக் கொண்டு, ஆயிரமாயிரம் தலைமுறைகளில் முக்தி பெறும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர். ஸ்ரீ நாரத ரிஷி வைஷ்ணவர்களிலேயே மிகச்சிறந்தவராக இருப்பதால், அத்தகைய மட்டமான நூல்களுக்கு பலியான துர்பாக்கியசாலிகளிடம் இரக்கம் கொண்டார். ஆகவே கவர்ச்சியுடையதும் எல்லா வகையான பந்தத்திலிருந்து உண்மையாகவே முக்தியளிக்கக் கூடியதுமான தெய்வீக இலக்கியத்தை தொகுக்கும்படி ஸ்ரீ வியாச தேவருக்கு அவர் அறிவுரை கூறினார். ஶ்ரீல வியாசதேவரும் அவரது பிரதிநிதிகளும் விஷயங்களை உள்ளவாறு காணும் சரியான பயிற்சி பெற்றிருப்பதால் அவர்கள் தகுதி வாய்ந்தவர்களாவர். அவர்கள் ஆத்ம ஞானம் பெற்றவர்களாகவும், பக்தித் தொண்டின் காரணத்தால் அவர்களது விரதங்களில் நிலையானவர்களாகவும், பௌதிக செயல்களில் அழுகிக் கொண்டிருக்கும் இழிவடைந்த ஆத்மாக்களை விடுவிப்பதில் உறுதி கொண்டவர்களாகவும் இருப்பதால் அவர்களுடைய சிந்தனை தூயதாக இருக்கிறது. வீழ்ந்த ஆத்மாக்கள் தினந்தோறும் புதுமையான தகவல்களை பெறுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றன. மேலும் வியாச தேவர் அல்லது நாரதரைப் போன்ற ஆன்மீகிகளால் அத்தகைய ஆர்வமுள்ள மக்களுக்கு ஆன்மீக உலகிலிருந்து எல்லையற்ற செய்திகளை வழங்க முடியும். ஜட உலகம் மொத்த படைப்பில் ஒரு பகுதி மட்டுமே என்றும், இந்த பூமியானது மொத்த ஜட உலகில் ஒரு சிறு பகுதி மட்டுமே என்றும் பகவத் கீதை கூறுகிறது

உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான கற்றறிந்த மனிதர்கள் உள்ளனர். அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் போதுமான பல்லாயிரக்கணக்கான நூல்களை எழுதியுள்ளார் துரதிர்ஷ்டவசமாக அவற்றில் எதுவும் பூமியில் அமைதியையும் சாந்தியையும் கொண்டு வரவில்லை அந்நூல்களில் ஆன்மீக விஷயங்கள் இல்லாததே இதற்குக் காரணமாகும். ஜட நாகரிகமானது மனித சக்தியை அழித்துக் கொண்டு இருக்கிறது. மனிதன் ஜட நாகரிகத்தின் சிக்கலில் இருந்து விடுபட்டு, முக்தியடையும் பொருட்டு அவனுக்கு கீதையும், பாகவதமும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. பகவத்கீதை பகவானாலேயே, பேசப்பட்டதும், வியாசதேவரால் பதிவு செய்யப்பட்டதுமாகும். ஸ்ரீமத் பாகவதம் அதே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகமான திருவிளையாடல்களைக் கொண்ட சரித்திரமாகும். இந்நூல்களால் மட்டுமே ஜீவ ராசிகளை துன்பங்களில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு நித்தியமான அமைதி யையும், முக்தியும் வழங்கி அவர்களை திருப்திபடுத்த இயலும் எனவே, ஸ்ரீமத் பாகவதம் பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் உரியதாகும் இது எல்லா வகையான பௌதிக பந்தத்திலிருந்தும் முழுமையாக விடுதலையை பெற்று தருகிறது. வியாசதேவரையும் அவரது உண்மையான பிரதிநிதிகளையும் போன்ற முக்தி பெற்ற ஆத்மாக்களால் மட்டுமே பகவானின் திருவிளையாடல்களைக் கொண்ட இத்தகைய தெய்வீகமான சரித்திரங்களை விவரிக்க முடியும். இவர்கள் பகவானின் உன்னத அன்புத் தொண்டில் முழுமையாக ஆழ்ந்துள்ளனர், இத்தகைய பக்தர்களுக்கு மட்டுமே, அவர்களது பக்தித் தொண்டின் வலிமையால் பகவானுடைய திருவிளையாடல்களும் அவற்றின் தெய்வீகத் தன்மையும் தானாகவே புலப்படுகின்றன. வேறு யாராலும் பகவானின் லீலைகளை அறியவோ அல்லது விளக்கவோ முடியாது பாகவதத்திலுள்ள விவரங்கள் மிகவும் நுணுக்கமாகவும், சரியாகவும் உள்ளன. மிகச் சிறந்த இந்நூலில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முன்னறிவிக்கப்பட்டவை அனைத்தும் இப்போது அப்படியே நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. ஆகவே, வியாச தேவரைப் போன்ற முக்தி பெற்ற ஆன்மாக்கள் தொலைநோக்கு மற்றும் ஞானம் ஆகிய சக்திகளில் மட்டுமல்லாமல் செவி சாய்ப்பதிலும், சிந்தனை செய்வதிலும் உணர்ந்தறிவதிலும் பூரணத்துவம் பெற்றவர்களாவர். முக்தி பெற்ற ஒருவர் பக்குவமான புலன்களைப் பெற்றுள்ளார். அத்தகைய புலன்களால் மட்டுமே ரிஷிகேசர் எனப்படும் புலன்களின் அதிபதியும், பரம புருஷருமாகிய பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு ஒருவரால் தொண்டு செய்ய முடியும். ஆகவே ஸ்ரீமத் பாகவதமானது, வேதங்களைத் தொகுத்தவரான சர்வ-பூரணத்துவம் பெற்ற ஶ்ரீல வியாசதேவரால் இயற்றப்பட்ட சர்வ பூரணமான பரமபுருஷ பகவானைப் பற்றிய பரிபூரணமான விளக்கமாகும்.

( ஶ்ரீமத் பாகவதம் 1.5.13 / பொருளுரை )


 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...