Skip to main content

பிராமணர்களின் கடமை

 



முகதோவர்தத ப்ரஹ்ம புருஷஸ்ய குரூத்வஹ
யஸ் தூன்முகத்வாத் வர்ணானாம் முக்யோபூத் ப்ராஹ்மணோ குரு:

மொழிபெயர்ப்பு

குரு வம்சத்தில் சிறந்தவரே, பிரும்மாண்ட ரூபமான விராட் புருஷரின் வாயிலிருந்து வேத ஞானம் தோன்றியது. இந்த வேத ஞானத்தில் நாட்டம் கொண்டவர்கள், பிராமணர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் எல்லா சமூகப் பிரிவுகளுக்கும் இயல்பான போதகர்களாகவும், ஆன்மீக குருமார்களாகவும் உள்ளனர்.

பொருளுரை

பகவத்கீதை (4.13) கூறுவது போல், மனித சமூகத்தின் நான்கு பிரிவுகளும் பிரும்மாண்ட ரூபத்தின் உடலிலிருந்துதான் விருத்தியடைந்தன. உடலில், வாய், கரங்கள், இடுப்பு மற்றும் கால்கள் என நான்கு பிரிவுகள் உள்ளன. வாயில் உள்ளவர்கள் பிராமணர்கள் என்றும், கரங்களில் உள்ளவர்கள் க்ஷத்திரியர்கள் என்றும், இடுப்பில் உள்ளவர்கள் வைசியர்கள் என்றும், கால்களில் உள்ளவர்கள் சூத்திரர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். விஸ்வ-ரூபம் எனப்படும் பகவானின் இந்த பிரும்மாண்டமான உடலில்தான் எல்லாப் பிரிவினரும் உள்ளனர். எனவே இவர்களில் எந்த பிரிவினரும் இழிவானவரல்லர். நம் உடலிலுள்ள கைகளுக்கும், கால்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் நாம் காட்டுவதில்லை. உடல் உறுப்புக்களிலேயே வாய் மிகவும் முக்கியமான உறுப்பு என்றாலும் உடலிலுள்ள ஒவ்வொரு அங்கமும் முக்கியமானதுதான். உடலின் மற்ற உறுப்புக்கள் துண்டிக்கப்படுமானால், ஒருவனால் தொடர்ந்து உயிர் வாழ முடியும். ஆனால் வாய் துண்டிக்கப்படுமானால், அவனால் தொடர்ந்து உயிர் வாழ முடியாது . எனவே பகவானுடைய உடலின் மிக முக்கிய உறுப்பான வாய், வேத ஞானத்தில் நாட்ட முள்ளவர்களான பிராமணர்களுக்கு அமருமிடம் என்று அழைக்கப்படுகிறது. வேத ஞானத்தில் நாட்டம் கொள்ளாமல், பௌதிக விஷயங்களில் நாட்டம் கொண்டிருப்பவன் ஒரு பிராமணத் தந்தைக்கு அல்லது ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவனாக இருப்பினும், அவனை பிராமணன் என்று அழைக்க முடியாது. ஒரு பிராமணத் தந்தையை பெற்றிருப்பதாலேயே ஒருவன் ஒரு பிராமணன் ஆகிவிட முடியாது. ஒரு பிராமணருக்குரிய முக்கிய தகுதி, வேத ஞானத்தில் அவருக்குள்ள நாட்டமாகும். வேதங்கள் பகவானின் வாயில் அமைந்துள்ளன. எனவே வேத ஞானத்தில் நாட்டம் கொண்டுள்ள எவரும் பகவானின் வாயில் அமைந்துள்ள ஒரு பிராமணராவார். இந்த வேத ஞானமும் கூட எந்தவொரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அல்லது சமூகத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. எந்தக் குடும்பத்தையும், உலகின் எந்தப் பகுதியையும் சேர்ந்த எவரும் வேத ஞானத்தில் நாட்டம் கொள்ளலாம். அது உண்மையான பிராமணருக்குரிய தகுதியை அவருக்கு அளிக்கும்.

உண்மையான பிராமணர் ஒருவர், இயற்கையான ஒரு போதகர் அல்லது ஆன்மீக குரு ஆவார். வேத ஞானத்தைப் பெறாத ஒருவரால் ஒர் ஆன்மீக குரு ஆக முடியாது. பரமபுருஷரை அறிவதுதான் வேதங்களின் நோக்கமாகும். அதுவே வேத ஞானத்தின் முடிவுமாகும் (வேதாந்தம்). அருவபிரம்ம நிலையில் இருந்துகொண்டு, பரமபுருஷ பகவானைப் பற்றிய தகவலை அறியாதிருக்கும் ஒருவர் ஒரு பிராமணர் ஆகலாம், ஆனால் அவரால் ஒர் ஆன்மீக குரு ஆக முடியாது. பத்ம புராணம் கூறுகிறது:

ஷட்-கர்ம நிபுணோ விப்ரோ மந்த்ர-தந்த்ர-விசாரத:
அவைஷ்ணவோ குருர் ஸ்யாத் வைஷ்ணவ: ஸ்வ-பசோ குரு:

அருவவாதி ஒருவரால் தகுதியுள்ள பிராமணராக ஆக முடியும். ஆனால் ஒரு பகவத் பக்தரின் நிலைக்கு, அல்லது வைஷ்ணவரின் நிலைக்கு அவர் உயர்த்தப்பட்டால் அல்லாது, அவரால் ஒர் ஆன்மீக குருவாக ஆக முடியாது. நவீன காலத்தில் வேத ஞானத்தின் மிகப் பெரிய அதிகாரியான பகவான் ஸ்ரீ சைதன்யர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

கிபா விப்ர, கிபா ஞாஸீ, சூத்ர கேனே நய
யேய் க்ருஷ்ண-தத்வ-வேத்தா, ஸேய்குருஹய

ஒருவர் ஒரு பிராமணராகவே அல்லது சூத்திரராகவே அல்லது சந்நியாசியாகவோ இருந்தாலும், கிருஷ்ண விஞ்ஞானத்தில் அவர் நன்கு தேர்ச்சி பெற்றவராக இருந்தால், ஒர் ஆன்மீக குருவாகும் தகுதி அவருக்குண்டு. (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய 8.128). எனவே தகுதியுள்ள ஒரு பிராமணராக இருப்பது மட்டுமே ஒர் ஆன்மீக குரு ஆவதற்குப் போதுமான தகுதியாகாது. மாறாக கிருஷ்ண விஞ்ஞானத்தை ஒருவர் நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்.

வேத ஞானத்தில் தேர்ச்சி பெற்றவர் ஒரு பிராமணராவார். மேலும் ஒரு தூய வைஷ்ணவராகவும், கிருஷ்ண விஞ்ஞானத்தைப் பற்றிய எல்லா நுணுக்கங்களையும் அறிந்துள்ள ஒரு பிராமணரால் மட்டுமே ஒர் ஆன்மீக குரு ஆக முடியும்.


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 3.6.30 )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




 






Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...