Skip to main content

இராமானந்தரைச் சந்தித்தல்

 


ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள்


வழங்கியவர் :- பக்தி விகாஸ ஸ்வாமி




இராமானந்தரைச் சந்தித்தல்



கோதாவரி நதிக்கரையில் இராமானந்த ராயரை சந்தித்த பகவான் ஆன்மீகத்தின் ஆழ்ந்த விவாதங்களில் விரைவில் நுழைந்தார். அனைத்தையும் அறிந்த, எவரையும் சார்ந்திருக்காத மஹாபிரபு, இராமானந்த ராயரை உள்நோக்கி ஊக்குவித்து பக்குவமான பதில்களை அளிக்கச்செய்யும் வகையில் கேள்விகளைக் கேட்கத் தீர்மானித்தார். வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? அதை அடைவதற்கான வழி என்ன?” என்னும் முதல் கேள்விக்கு, வர்ணாஸ்ரம முறைப்படி கடமை களைச் செய்வதால் ஒவ்வொரு மனிதனும் வெற்றியடைய முடியும்,” என்று இராமானந்த ராயர் பதிலளித்தார். இது மேலோட்டமானது. தயவுசெய்து இதைவிட ஆழமாகக் கூறும்,” என்று கூறி மஹாபிரபு அதனை நிராகரித்தார்.

படிப்படியாக உயர்ந்த வழிமுறைகளை விளக்கிய இராமானந்த ராயர், பலனில் பற்று கொள்ளாமல் கடமைகளை செய்வதை அறிவுறுத்தினார். ஆனால் கௌராங்கர் அதை நிராகரித்தார். அடுத்ததாக வர்ணாஸ்ரமத்தின் கடமைகளைத் துறப்பதை ஆதரித்துப் பேசினார். பகவான் சைதன்யர் அதையும் நிராகரித்தார். அதன் பின்னர் இராமானந்தர் ஞானத்தை வளர்க்கும் பாதையை முன்மொழிந்தார். ஆனால் மஹாபிரபு அதையும்கூட நிராகரித்தார். இறுதியில், புலனுகர்ச்சியை அடைவதற்காக, அல்லது ஞானம் பெறுவதற்கான முயற்சி யிலிருந்து விடுபட்டு, கிருஷ்ணருக்குத் தூய பக்தி செய்வதன் மூலம் ஒருவன் வெற்றியடைய முடியும்,” என்று இராமானந்த ராயர் கூறினார். அதனைத் தகுந்த பதிலாக ஒப்புக்கொண்டபோதிலும், தயவுசெய்து இன்னும் அதிகமாகக் கூறவும்,” என்று பகவான் சைதன்யர் வேண்டினார்.

அதனைத் தொடர்ந்து, கிருஷ்ண உணர்வின் முன்னேற்ற நிலைகளை இராமானந்த ராயர் பல்வேறு இரவுகளில் விளக்கினார்; இறுதியில், ராதா கிருஷ்ணரின் அந்தரங்க லீலைகளையும் உணர்ச்சிகளையும் எடுத்துரைத்தார். பின்னர் பகவான் சைதன்யர் தனது உண்மையான ராதா கிருஷ்ண ரூபத்தை அவருக்கு வெளிப்படுத்தினார். பகவான் சைதன்யரும் இராமானந்தரும் பரஸ்பர தொடர்பில் கிருஷ்ணரைப் பற்றி விவாதிப்பதன் ஆனந்தத்தை அனுபவித்தனர். தயவுசெய்து இங்கு நீண்டநாள்கள் தங்கவும். அதன்மூலம் நாம் நிறைய உரையாட முடியும்,” என்று இராமானந்தர் வேண்டினார். நாம் இந்த விவாத விஷயங்களை சில நாள்களுக்கு மட்டுமின்றி, மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் இணைந்து அனுபவிக்க விரும்புகிறேன். ஆனால் முதலில் எனக்கு தென்னிந்தியாவில் சில பிரச்சாரக் கடமைகள் உள்ளன. சில வருடங்கள் கழித்து நான் புரிக்குத் திரும்பிவிடுவேன். அதற்கு மத்தியில் தாங்களும் தங்களது பொறுப்புகளிலிருந்து விலகி புரிக்குச் செல்வீராக. அங்கு நாம் இணைந்து வாழலாம்,” என்று சைதன்ய மஹாபிரபு பதிலளித்தார்

நாளை . .

ஸ்ரீரங்கத்தை அடைதல்

தொடரும் . . . 


( "இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com")


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...