Skip to main content

மஹாபிரபுவின் தீக்ஷை


 


ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள்

மஹாபிரபுவின் தீக்ஷை


மஹாபிரபு (நிமாய்) காலமுற்ற தமது தந்தைக்கு ஸ்ரார்த்தம் செய்வதற்காக, தமது மாணவர்கள் சிலருடன் கயாவிற்குச் சென்றார். நவத்வீபத்தில் ஏற்கனவே சந்தித்திருந்த ஈஸ்வர புரியை அச்சமயத்தில் நிமாய் அங்கே சந்திக்க நேர்ந்தது. அப்போது நிமாய் பண்டிதருக்கு தீக்ஷையளித்த ஈஸ்வர புரி, எப்பொழுதும் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்கும்படி அறிவுரை வழங்கினார். அனைத்து ஞானத்தின் குறிக்கோளாகவும் ஆதியாகவும் திகழும் முழுமுதற் கடவுளான பகவான் சைதன்யர், வெளிப்புறப் பார்வையிலும் சிறந்த பண்டிதராக இருந்தவர். இருப்பினும், ஆன்மீக குருவை ஏற்றுக்கொள்வதன் பூரணத் தேவையை மெய்ப்பிப்பதற்காக, அவரும் ஒரு குருவை ஏற்றுக் கொண்டார்.

அந்த திருநாமங்களை உச்சரித்து பரவசமடைந்த நிமாய், விரைவில் ஒரு வினாவுடன் ஈஸ்வர புரியிடம் திரும்பி வந்தார்: பிரபுவே! தாங்கள் எத்தகைய மந்திரத்தை எனக்கு அளித்தீர்? இஃது என்னைப் பித்தனாக்கி விட்டது. ஹரே கிருஷ்ண என்று உச்சரிக்கும்போது, நான் சில சமயங்களில் ஆடுகிறேன், சில சமயங்களில் அழுகிறேன், சில சமயங்களில் தரையில் விழுகிறேன்.” மகிழ்ச்சியில் புன்னகைத்த ஈஸ்வர புரி பதிலளித்தார், அன்புள்ள சீடனே, ஹரே கிருஷ்ண உச்சாடனத்தினால் வாழ்வின் பக்குவநிலையை நீங்கள் அடைந்துள்ளது நன்று. இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்குக் கிருஷ்ணரின் மீதான பற்றுதல் நிச்சயம் அதிகரிக்கும்ஶீஇதுவே இந்த மஹா மந்திரத்தின் தன்மை. தொடர்ந்து உச்சரியுங்கள்! மற்றவர்களையும் உச்சரிக்கத் தூண்டுங்கள்!”

நிமாயிடம் எழுந்த மாற்றம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

அதன் பின்னர், நிமாய் தமது பாண்டித்துவத்தின் பெருமையை விட்டொழித்து கிருஷ்ண பிரேமையில் முழுமையாக மயங்கினார். நவத்வீபத்திற்குத் திரும்பும் வழி முழுவதும் ஹரே கிருஷ்ண என்று பரவசத்துடன் பாடிக் கொண்டிருந்தார். வேறுபட்ட நபராக வீட்டை அடைந்த நிமாய், தனது இதய தெய்வமான கிருஷ்ணரின் பிரிவினால் சில சமயங்களில் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பார்; வேறு சில சமயங்களில் கிருஷ்ணரின் நாமங்களைப் பாடிக் கொண்டோ, அவரது வசீகரம், சிறப்பான குணங்கள், மற்றும் லீலைகளைப் பற்றி உயிரோட்டத்துடன் பேசிக் கொண்டோ இருப்பார்.

நவத்வீபத்தின் வைஷ்ணவர்களுடன் கிருஷ்ணரைப் பற்றி உரையாடுவதில் பகல் பொழுதையும், அவர்களுடன் ஹரே கிருஷ்ண கீர்த்தனம் செய்வதில் இரவுப் பொழுதையும் நிமாய் கழித்தார். தனது பக்தர்களைக் கவனிப்பதிலுள்ள இன்பத்தை அனுபவிப்பதற்காகவும் பொதுமக்களுக்கு உதாரணத்தை வகுப்பதற்காகவும், கௌராங்கர், வைஷ்ணவர்களுக்கு சேவை செய்யத் தொடங்கினார். அவ்வைஷ்ணவர்கள் கங்கையில் குளிப்பதற்குச் செல்லும்போதும் வழிபாட்டிற்காகச் செல்லும்போதும், அவர்களுடைய துணிகள், பூஜைப் பொருட்கள், சந்தனம், மற்றும் பூக்கூடைகளை நிமாய் எடுத்து வருவார்.

கௌராங்கர் கிருஷ்ண பிரேமையின் மயக்கத்தில் மேன்மேலும் மூழ்க ஆரம்பித்தார். மற்றவர்களின் அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் பித்தனைப் போன்று பாடுவார், ஆடுவார், சிரிப்பார், அழுவார்.

நாளை . .
ஸங்கீர்த்தன இயக்கத்தின் தொடக்கம்
தொடரும் . . .

( "இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com")

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...