Skip to main content

கேசவ காஷ்மீரியைத் தோற்கடித்தல்



 ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள்
வழங்கியவர் :- தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி


பாகம் 4

கேசவ காஷ்மீரியைத் தோற்கடித்தல்


நவத்வீபத்தின் பண்டிதர்கள் பலருடன் வாதம் செய்வதில் நிமாய் ஆனந்தம் காண்பார். இதனால் இவரைச் சந்திப்பதற்குக்கூட மற்றவர்கள் அச்சப்படும் நிலை இருந்தது. நிமாய் பண்டிதர்” என்று விரைவில் புகழ் பெற்றார்.

சில காலம் கழித்து, காஷ்மீரைச் சேர்ந்த கேசவ காஷ்மீரி என்ற அசாதாரணமான பண்டிதர் நவத்வீபத்தைக் காண வந்தார். அவர் ஒரு திக்விஜயி பண்டிதர்; அதாவது மற்றவர்கள் அனைவரையும் வாதத்தில் வெற்றி கண்டவர். அவரது வருகையைக் கேள்விப்பட்ட நவத்வீபத்தின் பண்டிதர்கள் அனைவரும் இளம் நிமாயை மட்டும் அவ்வூரில் விட்டுவிட்டு தப்பி ஓடினர்.

மாலைப் பொழுதொன்றில் தமது மாணவர்களுடன் கங்கைக் கரையில் உலாவிக் கொண்டிருந்தபோது, கேசவ காஷ்மீரியை நிமாய் சந்தித்தார். மரியாதை செலுத்திய நிமாய், தாய் கங்கையைப் புகழ்ந்து சில பாடல்களை இயற்றி, பாண்டித்துவத்தை மெய்ப்பிக்கும்படி வினவினார். அரை மணி நேரத்திற்குள் கேசவ காஷ்மீரி நூறு பாடல்களை உரைத்தார். ஏதேனும் ஒரு பாடலின் நிறைகுறைகளை ஆராயும்படி கேசவ காஷ்மீரியிடம் நிமாய் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அனைத்து பாடல்களும் குற்றமற்றவை” என்று கேசவ காஷ்மீரி வலியுறுத்தினார்.

அப்பாடல்களிலிருந்து ஒரு பாடலை நிமாய் மேற்கோள் காட்டி, தங்களுக்கு ஆட்சேபணை இல்லையெனில், நானும் இப்பாடலைப் பற்றி சற்று கூற விரும்புகிறேன்,” என்று உரைத்தார். திக்விஜயி பண்டிதரோ, தமது பாடலில் கருத்துக் கூற இந்த இளைஞனுக்கு உரிமையில்லை என்று எண்ணி தயங்கினார். எனினும், கேசவ காஷ்மீரியினால் கண்டுபிடிக்கப்படாத சில சிறப்பம்சங்களை முதலில் சுட்டிக்காட்டிய நிமாய், பின்னர் அவரது பாடலில் இருந்த சில முக்கிய தவறுகளை எடுத்துக் கூறினார். பதில் பேச இயலாத பண்டிதர் தமது இருப்பிடத்திற்குத் திரும்பி சரஸ்வதியை வழிபட்டு பிரார்த்தித்தார்: இது நாள் வரை மற்றெல்லா புத்திமான்களையும் வெல்வதற்குத் தாங்கள் என்னை ஆசிர்வதித்திருந்தீர்கள். ஆனால் இன்று ஓர் இளம் சிறுவனின் வாயினால் என்னை அவமதித்துவிட்டீர்கள். தங்களுக்கு எதிராக நான் என்ன குற்றம் இழைத்தேன்?”

அன்றிரவு கேசவ காஷ்மீரியின் கனவில் தோன்றிய சரஸ்வதி, கேசவரே! உங்களைத் தோற்கடித்த அந்நபர், எனது வழிபாட்டிற்குரிய பரம புருஷ பகவானாவார். அவரிடம் சரணடையுங்கள்,” என்று அறிவுறுத்தினாள். மறுநாள் காலை கேசவ காஷ்மீரி தாழ்மையுடன் நிமாயை அணுகினார். உலகையே வெல்லக்கூடிய பண்டிதரின் தாழ்மையை நற்பாங்குடன் நிமாய் ஏற்றுக் கொண்டார். நிமாயின் நற்பெயர் தற்போது நவத்வீபத்தில் எதிர்க்க முடியாததாயிற்று. 

நாளை . .

சைதன்ய மஹாபிரபுவின் தெய்வீகத் திருமணம்

தொடரும் . . . 


( "இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com")

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...