Skip to main content

புரியில் ஸ்ரீ சைதன்யரின் ரத யாத்திரை லீலைகள்


  

ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள்


வழங்கியவர் :- பக்தி விகாஸ ஸ்வாமி

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


புரியில் ஸ்ரீ சைதன்யரின் ரத யாத்திரை லீலைகள்

புரிக்குத் திரும்புதல்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


இரண்டு வருடம் கழித்து, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எப்போது புரிக்குத் திரும்பினாரோ, அப்போதுதான் அவரது பக்தர்களுக்கு உயிரே வந்ததுபோல இருந்தது. நித்யானந்தர், ஜகதானந்தர், முகுந்தர், ஸார்வபௌம பட்டாசாரியர் முதலியோரை ஸ்ரீ சைதன்யர் முதலில் சந்தித்தார், இராமானந்த ராயரின் பெருமைகளை ஸார்வபௌமரிடம் தெரிவித்தார். மன்னரின் குருவான காசி மிஸ்ரரின் வீட்டில் பகவான் சைதன்யருக்காக ஓர் அறையை ஸார்வபௌமர் அமைத்துக் கொடுத்தார். அந்த அறை, வசதியான முறையில் ஜகந்நாதர் கோயிலுக்கு அருகிலும், அதே சமயத்தில் தனிமையாகவும் அமைதியுடனும் திகழ்ந்தது.

அதன் பின்னர், மஹாபிரபுவின் ஆன்மீக சகோதரரான கோவிந்தர் தமது குருவான ஈஸ்வர புரியின் அறிவுரைப்படி மஹாபிரபுவின் நேரடி கைங்கரியத்தில் ஈடுபடுவதற்காக புரிக்கு வந்து சேர்ந்தார். குருவின் கட்டளை என்பதால், மஹாபிரபுவும் அவரை தமது அந்தரங்க சேவகராக ஏற்றார்.

நவத்வீபத்தைச் சார்ந்த புருஷோத்தம ஆச்சாரியரும் அங்கே ஸ்வரூபர் என்ற பெயருடன் வர, மஹாபிரபு அவரை ஸ்வரூப தாமோதரர்” என்று அழைத்து தம்முடைய அந்தரங்க தோழராக இணைத்துக் கொண்டார். ஸ்வரூப தாமோதரர் மிகவும் கற்றறிந்த பண்டிதரும் மஹாபிரபுவின் பக்தர்களில் தலைசிறந்த அதிகாரமுடையவரும் ஆவார். மற்ற பக்தர்கள் சில சமயங்களில் தவறான தத்துவக் கருத்துகளை எடுத்துரைத்தால்கூட, ஸ்வரூப தாமோதரர் ஒருபோதும் குழப்பமடையாமல் தவறுகளை சரி செய்வார். மேலும், அவர் கௌராங்கரின் உணர்ச்சிகளை உள்ளூர உணர்ந்து, அவரது பக்தி பாவத்தை தூண்டும்படியான இரகசியமான பக்திப் பாடல்களை இனிமையாகப் பாடுவார்; அந்த அளவிற்கு அவர் பகவானிடம் நெருக்கமாக இருந்தார்.

பிரதாபருத்ரரின் ஏக்கம்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஒரிசா மன்னரான பிரதாபருத்ரர், பகவான் சைதன்யரின் வியக்கத்தக்க செயல்களையும் ஆழ்ந்த பக்தியையும் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைக் காண பேராவல் கொண்டார். ஆனால் மன்னருடன் உறவுகொள்வது சந்நியாசிக்கு உகந்ததல்ல என்று கருதிய சைதன்ய மஹாபிரபு, அவரைக் காண மறுத்து, பௌதிக வாழ்வைக் கடந்து, பகவானின் திவ்யமான அன்புத் தொண்டில் ஈடுபடுவதில் தீவிர விருப்பம் கொண்டுள்ள ஒருவனுக்கு, புலனுகர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பௌதிகவாதியைக் காண்பதும் அதே போன்ற விருப்பம் கொண்ட பெண்ணைக் காண்பதும் விஷத்தை விரும்பி அருந்துவதைக் காட்டிலும் இழிவானதாகும்,” என்று பிரகடனம் செய்தார்.

பெருத்த ஏமாற்றமடைந்த மன்னர், ஸார்வபௌம பட்டாசாரியரையும் இராமானந்த ராயரையும் தமக்காக மஹாபிரபுவிடம் பரிந்துரைக்கும்படி மீண்டும்மீண்டும் வேண்டினார். ஆனால், முடியாது” என்பதில் பகவான் பிடிவாதமாக இருந்தார், புரியை விட்டே சென்று விடுவேன் என்று அச்சுறுத்தவும் செய்தார். ஸார்வபௌமர் இதனை பிரதாபருத்ரரிடம் தெரிவித்தபோது அவரது இதயம் நொறுங்கியது, பெரிதும் வருந்தினார், புலம்பினார். இருப்பினும், என்றாவது ஒருநாள் மஹாபிரபுவின் கருணையைப் பெறுவதில் மன்னர் நம்பிக்கையுடன் இருந்தார்.

நவத்வீபவாசிகளின் வருகை

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


பகவான் ஜகந்நாதரை அவரது கோயிலிலிருந்து குண்டிசா எனப்படும் மற்றொரு கோயிலுக்கு பெரிய ரதத்தினால் இழுத்துச் செல்லப்படக்கூடிய பிரபலமான திருவிழா, ரத யாத்திரை என்று அறியப்படுகின்றது. இத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தொன்றுதொட்டு பல்வேறு யாத்திரிகர்கள் வங்காளத்திலிருந்து புரிக்கு வருவர். அப்பழக்கத்தைப் பின்பற்றி, நவத்வீபத்தில் வாழ்ந்த கௌராங்கரின் கிருஹஸ்த பக்தர்களில் பெரும்பாலானோர் அவரைக் காண்பதற்காக வருடந்தோறும் ரத யாத்திரையின்போது புரிக்கு வரத் தொடங்கினர், மழைக் காலத்தின் நான்கு மாதங்கள் முழுவதும் அங்கேயே இருப்பர்.

முதல் வருடம் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பக்தர்களைக் கொண்ட குழு புரியை வந்தடைந்தது. பெரிய அருவவாதியாக இருந்த ஸார்வபௌம பட்டாசாரியர் தங்களின் மத்தியில் ஆடிப் பாடுவதைக் கண்டு அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுற்றனர்.

குறுகிய காலத்தில், ஹரிதாஸ தாகூர் வங்காளத்திலிருந்து வந்தார். புகழ்பெற்ற பக்தராக இருந்தபோதிலும் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த காரணத்தினால், ஜகந்நாதரின் கோயிலுக்குள் நுழைவதற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், மஹாபிரபு அவருக்காக ஒரு பிரத்யேகமான இடத்தை ஏற்பாடு செய்தார், தினமும் அவருக்கு மஹா பிரசாதம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார், தாமே நேரடியாக அவரது இடத்திற்கே சென்று தினமும் அவருக்கு தரிசனமளித்தார். இதன்மூலம், ஒரு பக்தர் பகவானிடம் முழுமையாக சரணடைந்தால், பகவானைக் காண அவருக்குத் தடை விதிக்கப்பட்டாலும், அவரைக் காண பகவானே வருவார் என்பது மெய்ப்பிக்கப்பட்டது. 


நாளை . .

குண்டிசா கோயிலைத் தூய்மை செய்தல்

தொடரும் . . . 


( "இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com")

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...