Skip to main content

பகவான் சைதன்யர் ஸ்ரீரங்கத்தை அடைதல்

 



வழங்கியவர் :- பக்தி விகாஸ ஸ்வாமி

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஸ்ரீரங்கத்தை அடைதல்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


பின்னர், அஹோபிலம், திருப்பதி, ஸ்ரீசைலம், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி என பல்வேறு இடங்களுக்கு மஹாபிரபு தனது யாத்திரையைத் தொடர்ந்தார். விஷ்ணு கோயில்களை மட்டுமின்றி தேவர்களின் கோயில்களையும் தரிசித்தார். தேவர்களை சுதந்திரமான கடவுள்களாகப் பார்க்காமல், முழுமுதற் கடவுளான கிருஷ்ணரின் தலைசிறந்த பக்தர்களாகக் கண்டார். அவர் பல்வேறு புண்ணிய நதிகளிலும் நீராடினார். மேலும், கிருஷ்ண உணர்வை கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்தார்; ஒவ்வோர் இரவும் ஒரு கோயிலில் தங்கியிருந்து அங்கிருந்த பண்டிதர்களுக்கு வைஷ்ணவ தத்துவத்தை அளிப்பார்; பொதுமக்களை ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் ஈடுபடும்படித் தூண்டுவார்.

பகவான் சைதன்யர் அப்பயணத்தில் ஸ்ரீரங்கத்தை அடைந்தபோது சாதுர்மாஸ்யம் ஆரம்பமாயிற்று. அம்மாதங்கள் முழுவதும் தனது வீட்டில் தங்குமாறு உள்ளூர் பிராமணரான வேங்கடபட்டர் விடுத்த அழைப்பை ஏற்று, கௌராங்கர் அங்குத் தங்கினார். அவர் தங்களுடன் இருப்பதைப் பெரும் பாக்கியமாகக் கருதிய ஸ்ரீ ரங்கநாதரின் பக்தர்கள், கோயில் விக்ரஹத்தின் முன்பு அவர் பரவசத்தில் ஆடிப் பாடுவதைக் கண்டு மகிழ்ச்சியுற்றனர். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பிராமணர்கள் அவரை மதிய உணவிற்கு அழைப்பர்.

வேங்கடபட்டருடன் ஒரு விவாதம்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஒருமுறை வேங்கடபட்டரிடம் மஹாபிரபு வேடிக்கையாகக் கூறினார்: உமது வழிபாட்டிற்குரிய லக்ஷ்மி எப்பொழுதுமே நாராயணரின் மார்பில் இருக்கின்றாள். ஆயினும், அவள் பசுக்களை மேய்ப்பதில் ஈடுபட்டுள்ள எனது பெருமான் ஸ்ரீ கிருஷ்ணருடன் இணைவதற்கு ஏன் விரும்பினாள்? அந்த இலக்கை அடைவதற்காக அவள் நீண்ட விரதங்களையும் எண்ணிலடங்காத தவங்களையும் ஏன் மேற்கொண்டாள்?”

வேங்கடபட்டர் பதிலளித்தார், ஸ்ரீ கிருஷ்ணரும் ஸ்ரீ நாராயணரும் ஒருவரே; எனினும், கிருஷ்ணரின் லீலைகள் அவற்றின் விளையாட்டுத் தன்மையினால் மிகவும் மகிழ்வூட்டக்கூடியவை. கிருஷ்ணர், நாராயணர் இருவரும் ஒரே நபர் என்பதால், கிருஷ்ணரின் மீதான லக்ஷ்மியின் விருப்பத்தில் எந்தப் பிழையும் இல்லை.”

ஆம்; இருப்பினும், அவளால் ராஸ நடனத்தினுள் பங்குகொள்ள முடியவில்லை. அஃது ஏன் என்று தங்களால் கூற முடியுமா?” என்று மஹாபிரபு கேள்வி எழுப்பினார்.

இச்சம்பவத்தின் மர்மத்தினுள் என்னால் நுழைய முடியாது, சாதாரண உயிர்வாழியான நான் எவ்வாறு முழுமுதற் கடவுளின் செயல்களைப் புரிந்துகொள்ள முடியும்? அவை இலட்சக்கணக்கான சமுத்திரங்களைவிட ஆழமானவை,” என்று வேங்கடபட்டர் விடையளித்தார்.

பகவான் சைதன்யர் பின்வருமாறு விளக்கமளித்தார்: முழுமுதற் கடவுளின் மீதான பயபக்தியுடன் கூடிய வழிபாட்டின் காரணத்தினால், ராஸ லீலையினுள் லக்ஷ்மி இணைய முடியவில்லை. வைகுண்டத்தில் பகவானின் மீது மதிப்பும் மரியாதையும் மேலோங்கியுள்ளது, ஆனால் விருந்தாவனமோ கிருஷ்ணரின் மீது எளிமையாகவும் இயற்கையாகவும் அன்பு செலுத்துவதற்குரிய இடமாகும். பழங்கள், பூக்கள், பசுக்கள், மற்றும் யமுனை நதியினால் விருந்தாவனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சூழ்நிலை மிகவும் நெருக்கமானதாக உள்ளது. லக்ஷ்மியால் தனது வைகுண்ட மனப்பான்மையைக் கைவிட முடியவில்லை; மேலும், வைகுண்ட ரூபத்தைக் கைவிட்டு இடையர் பெண்களின் ரூபத்தை மேற்கொண்டு விருந்தாவனவாசிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதற்கும் அவள் தயாராக இல்லை. கிருஷ்ணரின் ராஸ லீலையினுள் நுழைவதற்கு கோபியர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதே பக்குவமான வழிமுறை.

இவ்வாறாக நகைச்சுவை கலந்த முறையில், கிருஷ்ணரை வழிபடுவதன் உயர்தன்மையை, நெருக்கமான உறவின் மனோபாவங்கள் முதலியவற்றை பகவான் சைதன்யர் எடுத்துரைத்தார். எனினும், தவறாக எண்ணாதீர். நாம் வெறும் வேடிக்கையாகவே பேசினோம். நான் தங்களை எவ்விதத்திலும் குறை கூறவில்லை,” என்று சமாதானமும் செய்தார்.

சீதையை இராவணன் கடத்தினானா?

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


மதுரைக்கு அருகில் பயணம் செய்தபோது, ஸ்ரீ இராமரிடம் சரணடைந்திருந்த பக்தர் ஒருவரின் வீட்டிற்கு மஹாபிரபு வந்தார். அன்னை சீதையை இராவணன் கடத்திச் சென்றுவிட்டான் என்று இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதை நினைத்து அவர் எப்பொழுதும் வருத்தத்துடன் இருந்தார். அப்போது, பகவான் சைதன்யர், உண்மையில் இராவணனால் சீதையைக் கடத்தியிருக்க இயலாது,” என்று கூறி அவரைச் சற்று சமாதானப்படுத்தினார்.

சில நாள்கள் கழித்து, மஹாபிரபு இராமேஸ்வரத்திற்குச் சென்றபோது அங்கிருந்த ஓர் ஆஸ்ரமத்திலிருந்து கூர்ம புராணத்தின் பழங்கால கையெழுத்துப் பிரதி ஒன்றைக் கண்டெடுத்தார். அதில், இராவணன் உண்மையான சீதையைக் கொண்டு செல்லவில்லை என்றும், அவளது மாயத் தோற்றத்தையே கொண்டு சென்றான் என்றும், அத்தருணத்தில் சீதையின் உண்மையான உருவம் அக்னி தேவரால் பாதுகாக்கப்பட்டது என்றும் விவரிக்கப்பட்டிருந்தது.

உடனடியாக கூர்ம புராணத்தின் சம்பந்தப்பட்ட பக்கத்தை மதுரையில் இருந்த பக்தரிடம் பகவான் சைதன்யர் கொண்டு வந்தார். அதனைப் படித்து, அப்பக்தர் துயரத்திலிருந்து உடனடியாக விடுபட்டார், சந்நியாசியைப் போன்று தோற்றமளிக்கும்போதிலும், உண்மையில் தாங்கள் எனக்குப் பிரியமான ஸ்ரீ இராமரே,” என்று உறுதியுடன் கூறினார்.

படிப்படியாக, தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரையை அடைந்த மஹாபிரபு, திருவனந்தபுரம், உடுப்பி, சிருங்கேரி போன்ற புனித ஸ்தலங்களுக்கு விஜயம் செய்தார்.

நாளை . .

புரியில் ஸ்ரீ சைதன்யரின் ரத யாத்திரை லீலைகள்

தொடரும் . . . 


( "இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com")

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...