Skip to main content

லீலா சுகர் (பாகம் 2)


 வில்வமங்கள தாகூரின் பூர்வ ஜென்ம வரலாறு


வழங்கியவர் :- தவத்திரு மஹாவிஷ்ணு கோஸ்வாமி மகாராஜ்


மொழிபெயர்ப்பு :- சுத்தபக்தி குழுவினர்


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



நம் அனைவருக்கும் வில்வமங்கள தாகூரின் வரலாறு தெரியும். ஆனால் அவருடைய பூர்வ ஜென்ம வரலாறு தெரியாது. அந்த கதையை அறிந்துகொள்வோம்!

பூர்வ ஜென்மத்தில் வில்வமங்கள் தாகூர் ஒரு சந்நியாசியாக இருந்தார். பகவான் கிருஷ்ணர் மீது அதீத அன்பும் பக்தியும் கொண்டிருந்தார்.

அவர் பல ஆன்மீக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து அதோடு அங்கு வரும் அனைவருக்கும் பிரசாதம் விநியோகித்தும் வந்தார்.

ஒரு முறை அவ்வாறு ஏற்பாடு செய்த நிகழிச்சி ஒன்றிற்கு தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் செலவழித்து விட்டார். பிரசாத விநியோகம் செய்ய பணம் போதவில்லை. ஆகையால் யாரிடமாவது பணம் கேட்கலாம் என்று நினைத்தபடி தெருக்களில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்நாட்டு இளவரசி இறந்து, அதற்கான அந்திமகர்மங்கள் நடைபெற்று கொண்டிருந்தது. இளவரசியின் உடலை தகனம் செய்யும் போது, பல நகைகளையும் நவரத்தினங்களையும் சேர்த்து எரித்தனர். இதை பார்த்து கொண்டிருந்த சந்நியாசி, இறந்த சவத்திற்கு எதற்கு இத்தனை நகைகள். ஆகையால் நாம் இவற்றை எடுத்துக்கொண்டு கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்தலாம், என்று எண்ணினார். அந்த சவத்தின் அருகில் சென்று நகைகளை எடுக்க முற்பட்ட போது, " நில்லுங்கள்! இந்த நகைகளை எடுக்காதீர்கள்". என்று ஒரு குரல் கேட்டது. சந்நியாசி அதிர்ந்தார். யாருடைய குரல் என்று சுற்றிலும் தேடினார். அது இறந்த இளவரசியின் குரல். அந்த குரல் மேலும் கூறியது, "உங்களுக்கு செல்வம் வேண்டுமானால் என் தந்தையிடம் செல்லுங்கள். நான் உங்களை அனுப்பியதாக கூறுங்கள். என்னுடைய கட்டிலின் கீழ் நிறைய பொக்கிஷங்கள் உள்ளது. அதை பெற்றுக்கொண்டு நீங்கள் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்துங்கள்", என்று கூறியது.

சந்நியாசி,அரசரிடம் சென்று இளவரசி கூறியதை அப்படியே தெரிவித்தார் . அரசரும், தன் மகளுடைய விருப்பத்தை நிறைவேற்ற அணைத்து பொக்கிஷத்தையும் வழங்கினார். அதை பெற்று கொண்ட சந்நியாசி, பாகவத நிகழ்ச்சிக்கு மொத்த பொக்கிஷத்தையும் செலவளித்தார். மீண்டும் பண தட்டுப்பாடு வந்தது. அதனால் இளவரசியை எரிக்கப்பட்ட இடத்திற்கு மீண்டும் சென்று அவளுடைய நகைகளை எடுத்து சென்றார். சிறுது தூரம் சென்ற போது, மீண்டும் இளவரசியின் குரல் கேட்டது. "நீங்கள் இந்த நகைகளை எடுத்து தவறிழைத்து விட்டீர்கள். சொந்த பணதிலோ, யாசகம் செய்தோ, நன்கொடையிலோ, பக்தர்களின் விருப்பம் போல் தரும் தனத்தை பகவத் கைங்கர்யம் செய்வதுதான் சிறந்த பக்தர்களின் குணம். உங்கள் மனம் அவ்வாறு சிந்திக்காமல் இந்த மயானபூமியை நாடிவந்து நான் அணிந்திருந்த நகையின் மீது ஆசை கொண்டீர்கள். நீங்கள் ஒரு சிறந்த பக்தராக இருந்தாலும் இந்த செயல் நியாயமான ஒன்றாக கருத முடியாது. அதனால், இந்த தவறுக்கான தண்டனையாக நீங்கள் மீண்டும் பிறப்பெடுக்க நான் சாபமிடுகிறேன்", என்று கூறியது.

அடுத்த பிறவியில், சந்நியாசி ஒரு பெண் பித்தனாக பிறப்பெடுத்தார். அவரே வில்வமங்கள தாகூர். அதே சமயம் அந்த இளவரசி, சிந்தாமணி என்னும் விலை மாதுவாக பிறப்பெடுத்தார் . வில்வமங்கள தாகூர் சிந்தாமணியை அணுகியபோது, அவள், "நீங்கள் என் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்களோ, அதே அளவு அன்பை பகவான் கிருஷ்ணரின் மீது வைத்தால், தன்னை உணர்ந்தவர் ஆகிவிடுவீர்கள்", என்று உபதேசித்தாள். இவ்வாறு. சிந்தாமணியின் மூலம், இந்த பிறவியில் வில்வமங்கள தாகூர் கிருஷ்ண பக்தியை பெற்றார்

கதையின் நீதி:

🔆🔆🔆🔆🔆🔆🔆

நம் வாழ்வில் நாம் சேர்க்கும் செல்வம் முறையானதாக இருக்க வேண்டும். பகவானுக்கான சேவையிலோ அல்லது பக்தர்களுக்கான சேவையிலோ ஈடுபடுத்துவதாக இருந்தாலும், அது நேர் வழியில் சேர்த்த செல்வமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அதற்கான பாவத்தை ஏற்க வேண்டியிருக்கும்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, 
ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண!

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி

🔆🔆🔆🔆🔆🔆🔆

Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇

🔆🔆🔆🔆🔆🔆🔆

சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...