Skip to main content

முசுகுந்தர் முக்தி


 முசுகுந்தர் முக்தி


🔆🔆🔆🔆🔆🔆🔆


ஸ்ரீ கிருஷ்ணர் தமது குடும்ப அங்கத்தினர்களை துவாரகை கோட்டைக்குள் பத்திரமாக வைத்தபின் மதுராவிற்குச் சென்றார். சந்திரன் உதித்தாற் போல் அவர் தோன்றினார். ஸ்ரீ கிருஷ்ணரின் பிரகாசமாக ஜொலித்த உடல், பகவானைப் பற்றி நாரதர் விவரித்த வர்ணனை யுடன் ஒத்திருப்பதைக் கண்ட காலயவனன், அவர் பரமபுருஷர் என்பதைப் புரிந்து கொண்டான். பகவான் நிராயுத பாணியாக இருப்பதைக் கண்ட காலயவனன், தன் சொந்த ஆயுதங்களை ஒருபக்கம் வைத்து விட்டு, அவருடன் போரிட விரும்பி பகவானை நோக்கி அவர் பின்னால் ஓடினான். ஸ்ரீ கிருஷ்ணரும் காலயவனனின் முன் அவனது கை கெட்டிய தூரத்தில் ஓடினார். இப்படியே ஒரு மலைக்குகையை நோக்கி ஓடிய பகவான், அவனை நீண்ட தூரம் தம்மை பின்தொடரச் செய்தார் இப்படிப் பின்தொடர்ந்து ஓடிய காலயவனன், பகவானை நோக்கி பழிச் சொற்களை அள்ளி வீசினான். ஆனால் அவனுடைய பாவ கருமங்களின் இருப்பு இன்னும் குறையாததால், பகவானை அவனால் பிடிக்க முடியவில்லை . ஸ்ரீ கிருஷ்ணர் குகைக்குள் பிரவேசித்தார் அவரைப் பின்தொடர்ந்து குகைக்குள் சென்ற அவன், ஒரு மனிதர் தரையில் படுத்திருப்பதைக் கண்டு அவரைக் கிருஷ்ணர் என்றெண்ணி, காலால் உதைத்தான். நீண்ட காலமாக உறங்கிக் கொண்டிருந்த அவர், முரட்டுத்தனமான முறையில் எழுப்பப்பட்டதால், கோபத்துடன் நாற்புறமும் பார்த்து, எதிரில் காலயவனன் நிற்பதைக் கண்டான். அந்த மனிதர் காலயவனனைக் கொடூரமாக முறைத்துப் பார்த்து அவனுடலில் தீ மூளைச் செய்தார். அந்த தீயும் நொடிப் பொழுதில் அவனை எரித்து சாம்பலாக்கியது

அசதாராணமான அம்மனிதர் மாந்தாதாவின் மகனும், முசுகுந்தர் என்ற பெயருடையவருமாவார். பிராமண பண்பாட்டிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவர், எப்பொழுதும் அதற்கேற்ப நடந்து கொண்டார். முன்பு, அசுரர்களிடமிருந்து தேவர்களைக் .காக்க உதவுவதில் பல நீண்ட ஆண்டுகளை அவர் கழித்தார். நாளடைவில் கார்த்திகேயரைத் தங்கள் காவலராகப் பெற்ற தேவர்கள், ஓய்வுபெற முசுகுந்தரை அனுமதித்தனர். மேலும் பகவான் விஷ்ணுவால் மட்டுமே அருளப் படக்கூடிய முக்தியைத் தவிர வேறெந்த வரத்தை வேண்டுமானாலும் கேட்கும்படி அவரை அவர்கள் கேட்டுக் கொண்டனர். முசுகுந்தரரும் உறக்கத்தினால் மூடப்பட்டுவிடும் வரத்தை தேவர்களிடமிருந்து பெற்றார். இவ்வாறாக அன்று முதல் அவர் அக்குகைக்குள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

காலயவனன் பலியானதும், ஸ்ரீ கிருஷ்ணர் தம்மை முசுகுந்தருக்குக் காட்டியருளினார். ஸ்ரீ கிருஷ்ணரின் ஒப்பற்ற அழகைக் கண்டு அவர் பேராச்சரியம் அடைந்தார். தன்னைப் பற்றி பகவானிடம் கூறிய முசுகுந்தர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவர் யார் என்று பின்வருமாறு விசாரித்தார்: "நீண்ட நாட்கள் விழித்திருந்ததால் மிகவும் களைப் படைந்த நான், இங்கு இக்குகையில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அறிமுகமற்ற ஒருவன் எனக்குத் தொல்லை கொடுத்தான். அவரது பாவ விளைவுகளினால் எரித்து சாம்பலாக்கப்பட்டடான். பகவானே, எல்லா எதிரிகளையும் அழிப்பவரே, என்னுடைய பேரதிர்ஷ்டத்தினால் தங்களுடைய அழகிய வடிவத்தைக் காணும் பேறு பெற்றேன்.

பிறகு, தாம் யாரென்பதை முசுகுந்தருக்குக் கூறிய பகவான் அவருக்கு ஒரு வரமளித்தார். பௌதிக வாழ்வின் பயனின்மையைப் புரிந்து கொண்ட விவேகியான முசுகுந்தர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் புகலிடம் ஏற்க அனுமதிக்க வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார்.

இந்த விண்ணப்பத்தினால் மகிழ்ந்த பகவான், முசுகுந்தரிடம் கூறினார், "என் பக்தர்களுக்கு அளிக்கப்படும் பௌதிக வரங்களினால் அவர்கள் ஒருபோதும் வசீகரிப்பப்படுவதில்லை; பக்தரல்லாதவர்களும் தங்கள் இதயங்களில் பௌதிக ஆசைகளை வளர்த்துக் கொள்பவர்களும் மட்டுமே பௌதிக வரங்களில் விருப்பம் கொண்டுள்ளனர். எனது பிரியமுள்ள முசுகுந்தரே, என்னிடம் நிலையான பக்தியை நீர் பெறுவீர். இப்பொழுது, என்னிடம் இடையறாத சரணாகதி அடைந்த நிலையில், இராணுவ வீரராகிய நீர் செய்த கொலைகளால் விளைந்துள்ள பாவங்களைப் போக்கிக்கொள்ள, நீர் தவமியற்ற வேண்டும். உமது அடுத்த பிறவியில் முதல்தர பிராமணராகி என்னை நீர் அடைவீர்" . இவ்வாறாக பகவான் தமது ஆசீர்வாதங்களை முசுகுந்தருக்கு அளித்தார்.

( ஶ்ரீமத் பாகவதம் / காண்டம் 10 / அத்தியாயம் 51 )

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...