Skip to main content

அன்னை சீதையின் இரக்க குணம்


 அன்னை சீதையின் இரக்க குணம்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஸ்ரீ ராமர் இராவணனை வென்ற பிறகு, ஹனுமான் இலங்கையில் உள்ள அசோகா வனத்தில் அன்னை சிதையை அழைத்து வர சென்றார். அப்போது ஹனுமான் அன்னை சீதையிடம் இதுநாள் வரை உங்களை சித்திரவதை செய்த இந்த ராட்ஷசிகளை என் கதையால் துவம்சம் செய்ய மனம் துடிகிறது . உங்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறேன் என கூறினார்.


அதற்கு அன்னை சீதா, "தயவுசெய்து அவர்கள் மீது க்ரோதம் கொள்ள வேண்டாம். நான் உனக்கு ஒரு கதையைச் சொல்கிறேன், அதன் பிறகு நீ என்ன செய்ய வேண்டும் என்று உனக்கு உரைக்கிறேன்.

"ஒருமுறை ஒரு காட்டில், ஒரு சிங்கம் ஒரு வேட்டைக்காரனைத் துரத்திக் கொண்டிருந்தது, வேட்டைக்காரன் தனது உயிரைக் காப்பாற்ற கடுமையாக ஓடிக்கொண்டிருந்தான். வேட்டைக்காரன் கடைசியில் ஒரு மரத்தின் மீது ஏறி ஒரு கிளை மீது அமர்ந்தான்.

மரத்தில் அமர்ந்த வேடன் ,அதே மரத்தின் மற்றொரு கிளையில் ஒரு கரடி தூங்குவதைக் கண்டு திடுக்கிட்டான். கரடி தனது தூக்கத்திலிருந்து எழுந்திருக்காது என்று நம்பியிருந்தான்.

"இதற்கிடையில், துரத்தி வந்த சிங்கம் மரத்தின் மேல் ஏற முடியாமல், வேட்டைக்காரன் கீழிறங்கி வர காத்திருந்தது.

"நேரம் செல்ல செல்ல சிங்கம் ஒரு திட்டத்தை யூகித்தது. தூங்கிக் கொண்டிருந்த கரடியை கூப்பிட்டு," கரடி! எழுந்திரு உன் அருகில் யார் அமர்ந்திருக்கிறார் என்று கவனி ! அவன் ஒரு வேட்டைக்காரர். அவன் நமது எதிரி. அவன் நம்மை வேட்டையாடுபவன். நமது இனத்தை அழிப்பவன். நாம் அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். நீ அவனை மரத்திலிருந்து கீழே தள்ளிவிட்டு பழி தீர்க்க வேண்டும். மீதியை நான் பார்த்து கொள்கிறேன். என்று கூறியது.

"கரடி வேட்டைக்காரனைப் ஒரு கணம் பார்த்து, சிங்கத்திடம் 'அவர் இந்த மரத்தை தஞ்சம் புகுந்துள்ளார். நானும் இந்த மரத்தை அடைக்கலம் எடுத்துள்ளேன். நம்பி வரும் ஒருவருக்கு துரோகம் இழைப்பது சரியானதல்ல.என்று கூறியது.

சிங்கம் தனது திட்டம் தோல்வியடைந்ததைப் பார்த்து, மற்றொரு திட்டத்தை தீட்டியது. மரத்தின் மேல் இருக்கும் வேட்டைக்காரனிடம் " ஓ வேட்டைக்காரனே! நீ உனது வீட்டிற்கு செல்ல விரும்பினால் எனது பசிக்கு உணவு தந்து நீ செல்லலாம். உன்னை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறேன்." மேலும் நான் கரடியை சாப்பிட முடியும். நீ செய்ய வேண்டியது எல்லாம் தூங்கும் கரடியை மரத்திலிருந்து கீழே தள்ளிவிட வேண்டும். உனக்கு பதிலாக அதை நான் உண்பேன். இந்த காரியத்தை செய்து முடித்துவிட்டு நீ வீட்டிற்கு திரும்பி செல்லலாம். நான் உனக்கு தீங்கு செய்ய மாட்டேன். " என்றது சிங்கம்.

"இது ஒரு நல்ல யோசனை என்று வேட்டைக்காரன் நினைத்தான். அவன் கரடியைத் கீழே தள்ளினான். ஆனால் கரடி சுதாரித்து கொண்டு , மற்றொரு கிளையைப் பிடித்து வேகமாக மரத்தின் மேல் ஏறி இருந்த இடத்திற்கே மீண்டும் வந்தமர்ந்தது. வேட்டைக்காரன் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான், கரடியிடமிருந்து எதிர்வினைகளை எதிர்பார்த்தான். ஆனால் கரடி வேட்டைக்காரனை ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருந்தது.

சிங்கம் மீண்டும் கரடியிடம் "ஓ கரடி! இந்த வேட்டைக்காரனை ஒருபோதும் நம்ப முடியாது என்று நான் சொல்லவில்லையா? அவன் நல்லது நினைத்த உன்னையே கீழே தள்ளினான் ! இது நல்ல சந்தர்ப்பம் அவனது செயலுக்கான தண்டனையாக அவனை கீழே தள்ளிவிடு. நான் அவனை கவனித்துக்கொள்வேன் என்றது

"கரடி மீண்டும் கண்களைத் திறந்து, வேட்டைக்காரனையும், சிங்கத்தையும் பார்த்து 'உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் எப்போதும் மற்றவர்களின் தவறை மன்னிப்பார்கள்' என்று கூறி அமைதியாக இருந்தது.

இவ்வாறு அன்னை சீதா தேவி கதையை சொல்லி முடித்து ஹனுமானிடம், "என் அன்பான ஹனுமான் நாம் இந்த அரக்கிகளை மன்னிக்க வேண்டும், அவர்கள் எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியிருந்தாலும், மேன்மக்கள் எப்போதும் மற்றவர்களின் தவறான செயல்களை மன்னிப்பார்கள்" என்று கூறினார்.

அன்னை சீதையின் இரக்கத்தால் ஹனுமான் இதயக்குமுறல் சாந்தமடைந்தது. அவர் அரக்கிகளை மன்னித்தும் அவர்களை தண்டிக்கும் யோசனையையும் கைவிட்டார்.

தவறு செய்வது மனித இயல்பு ஆகும். ஆனால் மன்னிப்பது தெய்வீகமானவரின் இயல்பாகும்.

ஹரே கிருஷ்ண!.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

தினமும் 108 முறை . . . . .

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

உச்சரிப்பீர் !
பிறவி பயனையடைவீர்

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...